நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 23 ஜனவரி, 2020

அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவில் உள்ள அலஸ்கா மாகாணத்தில் இலங்கை நேரப்படி, இன்று காலை 5.53 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.அந்தவகையில், இந் நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் 
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அலஸ்காவின் யு.டி.சி. அலுடியன் தீவுகளில் காணப்படும் தனகா எரிமலைக்கு கிழக்கே 22 கிலோமீற்றர் தூரத்தில் சுமார் 10 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்நிலநடுக்கம்
 ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை எனத் தெரியவருகின்றது.இந்நிலையில், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 14 ஜனவரி, 2020

நியூசிலந்தில் எரிமலைக்குள் அகப்பட்டு 20க்கும் மேற்ப்பட்டோர் பலி

நியூசிலந்தின் White Island எரிமலை வெடிப்பில் அகப்பட்டு 20க்கும் மேற்ப்பட்டோர்  இறந்துள்ளதாக அந்நாட்டு 
அரசு அறிவித்துள்ளது.
எரிமலை வெடித்தபோது அந்தப் பகுதியில் 47 பேர் இருந்தனர் எனவும்  அவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலிய சுற்றுலாப்பயணிகள் எனவும் தெரியவருகிறது.
எரிமலை வெடித்துச் சிதறியபோது வெளிப்பட்ட சூடான சாம்பலும், நீராவியும் பட்டு அவர்கள் கடுமையான தீப்புண் காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>