நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 23 டிசம்பர், 2017

வாழ்நாளில் விளையாட்டுத்துறையில் அதிகமாக சம்பாதித்த வீரர்கள்

விளையாட்டுத்துறையில் வாழ்நாளில் அதிகமாக சம்பாதித்த வீரர்களின் பட்டியலை அமெரிக்காவை தலைமையிடமாக 
கொண்டு இயங்கும் பிரபல சஞ்சீகையொன்று வெளியிட்டுள்ளது.இதில் கூடைப்பந்தாட்டம், கோல்ப் விளையாட்டு
, கார் பந்தயம், கால்பந்தாட்டம், குத்துச்சண்டை, டென்னிஸ், அடிப்பந்தாட்டம் (பேஸ் போல்) ஆகிய விளையாட்டில் அதிகம் சம்பாதித்த 20 வீரர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.இதில், 1.85 பில்லியன்
 டொலர்களுடன் முன்னாள் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கல் ஜோர்டன் முதலிடத்திலுள்ளார். இவருக்கு அடுத்த படியாக உலகின் பணக்கார விளையாட்டான கோல்ப் விளையாட்டில் 
பிரபலமான டைகர் வுட்ஸ் 1.7 பில்லியன் டொலர்களுடன் இரண்டாவது இடத்திலும், மற்றொரு கோல்ப் வீரரான ஆர்னெல்ட் பால்மர் 1.4 பில்லியன் டொலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.இப்பட்டியலில், இருபதாவது இடத்தில் பிலிப்பைன்ஸின்
 குத்துச் சண்டை வீரர் மேனி பேக்குயோ உள்ளார். ஆனால் இதில் கிரிக்கெட் வீரர்கள் எவருமே இடம்பெறவில்லை என்பது சற்று 
கவலைக்குரிய விடயமே. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக