ஜப்பானில் பெய்த பலத்த மழையில் சிக்கி 20 பேர் பலியாயினர். 50 க்கும் மேற்பட்டோர் மாயமாயினர். வீடுகள் உடமைகளை இழந்து பலர் தவிக்கின்றனர்.
தென் மேற்கு ஜப்பானில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர் மழை காரணமாக பல குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. குராஷிகி, ஒக்கியாமா பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.
ஹிரோஷிமா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இது வரை 15 பேர் இறந்துள்ளதாக ஜப்பான் செய்தி நிறுவனமான குயோடா தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
யமாகுஷ்சி பகுதியில் தற்போது பெய்து வரும் கன மழையால் அங்கு பெரும் பாதிப்பு வரும் என அஞ்சப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு
எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக