கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் இலங்கையர் இத்தாலியில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் அவர் இலங்கை அதிகாரி ஒருவருடன் உரையாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அந்தவகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட
இலங்கை பெண், குறித்த காணொளியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு தலைவலியும் காய்ச்சலும் காணப்பட்டது. சாதாரண தலைவலி, காய்ச்சல் என நினைத்துக்கொண்டிருந்தேன். வேதனை அதிகரித்த பட்சத்திலே நான் வைத்தியசாலை
சென்று சிகிச்சைப்பெற முயற்சித்தேன்.இதன்போதுதான், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்ததை
வைத்தியர்கள் அறிவித்தனர்.இத்தாலி நாட்டிற்கு வந்து சுமார் 10 வருடங்கள் கடந்துவிட்டன. நான் பணிபுரியும் வீட்டில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக
அறிவித்தார்கள்.அவர்களிடமிருந்து எனக்கும் தொற்றியதாக அறியக் கிடைத்தது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு
உள்ளான அந்த பெண் பிரிதொரு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். என்னை பார்வையிடுவதற்கு
எவரையும் வைத்தியசாலை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. எனது கணவரை கூட பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என இலங்கை அதிகாரியிடம் அப்பெண்
குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இலங்கையின் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் ஏனைய தரப்பினர் உங்கள் (இலங்கை பெண்) தொடர்பாக
அக்கறையுடன் செயற்படுவதாகவும் இலங்கை
மக்கள் அனைவரும் நீங்கள் நலம்பெற வேண்டுமென்பதில் அக்கறையுடன் அவதானித்துக்கொண்டு இருக்கின்றனர்.ஆகையினால், அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் இலங்கையிலிருந்து உரையாற்றிய அதிகாரி
இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக