நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 31 மே, 2019

சிறுவனுக்காக விமானத்தில் பறந்து வந்து இன்ப அதிர்ச்சி

தெருவிளக்கில் படித்த பெரு நாட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் விக்டர் மார்ட்டின். வறுமையான குடும்பத்தில் பிறந்த விகிப்பில் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிறந்த மாணவராக இருந்துள்ளார். இந்நிலையில் சிறிய வீட்டில் வசித்துவந்த அவர் வீட்டில் மின்சார 
வசதி இல்லாத நிலையில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் நாள்தோறும் தனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள தெருவிளக்கிற்கு கீழே அமர்ந்து படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் தெருவிளக்கில் படிப்பதையும், வீட்டுபாடம் 
செய்வதையும் நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதனை கண்ட பஃஹ்ரைனை சேர்ந்த இளம் கோடீஸ்வரர் ஆன யாகூப் யாஸிப் அஹமத் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்
.பின்னர் அவர் சமீபத்தில் தமது விமானம் மூலமாக பெரு நாட்டிற்கு வந்துள்ளார் மேலும் அங்கு சிறுவன் விக்ரின் வீடு இருக்கும் பகுதியை கண்டறிந்து நேராக அவரது வீட்டிற்கு சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.பின்னர் அவரது
 வீட்டுக்கு மின்சார 
வசதி செய்து கொடுத்து, அவரது வீட்டையும் புதிதாக சீரமைக்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அது
 மட்டுமின்றி விக்டர் படிக்கும் பள்ளிக்கும், அவனை போலவே படிப்பதற்கு கஷ்டப்படும் சிறுவர்களுக்கும் உதவப் போவதாக 
தெரிவித்துள்ளார்.இவ்வாறு ஏழ்மையால் 
வாடும் பலருக்கும் தானே முன்வந்து எந்த ஒரு பலனும் இல்லாமல் உதவி செய்யும் யாகூப் யூசுப் அகமதுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>