நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பிரதமர் மோடி ஃபேஸ்புக்குடனான கலந்துரையாடலில் கண் கலங்கிய காணொளி


அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி , பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷக்கர்பேர்க்குடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இச்சந்திப்பைப் பொதுவெளியில் வைத்துக்கொள்ளச் சம்மதித்த மோடி அவர்கள் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் சம்மதித்தார்.

இதன்போது மார்க் ஷக்கர்பேர்க் கேட்ட ஒரு கேள்வியின் போது மோடி கண் கலங்கி விட்டார். தாயைப் பற்றிய கேள்வியின் போதே மோடி கலங்கிவிட்டார்.

அக் கேள்வியும் , விடையும் வருமாறு:

ஷக்கர் பேர்க்: எனக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை. நாம் இருவருமே குடும்பத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள்; எனவேதான் என் தாய் தந்தையரை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். உங்கள் தாயைப் பற்றிய உங்கள் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்களா?

முதலில் உங்கள் தாய்க்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகத்தையே இணைக்கும் ஒரு மகனைப் பெற்றெடுத்ததற்காக அவர் பெருமைப்பட வேண்டும்.
என் வாழ்வில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் இரண்டு பேரை மறக்க முடியாது.

ஒன்று ஆசிரியர்; மற்றொன்று தாய்.
என் தாய் தான் என் வாழ்வின் ஆக்க சக்தி. சிறிய வயதில், நான் டீ விற்றுக்கொண்டிருந்தேன். இன்று உலகின் மாபெரும் குடியரசின் பிரதம மதிரியாக வீற்றிருக்கின்றேன் என்றால் அதற்குக் காரணம் என் தாய்தான்.

என்னைப் பொறுப்புடன் வளர்ப்பதற்காக அவர் உழைக்காத நாளேயில்லை.
என் தாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது; ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்லுவார்.
தள்ளாத இந்த வயதிலும் தன் வேலைகளைத் தானே பார்த்துக்கொள்வார். தினந்தோறும் செய்திகள் கேட்பார்.
என் தாய் மட்டுமல்ல; நம் நாடு முழுவதும் இலட்சக்கணக்கானத் தாய்மார்கள், தங்கள் பிள்லைகளின் கனவுகளை நிறைவேற்றத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து வருகின்றனர்.
அந்தத் தாய்மார்களின் ஆசிர்வாதம் நம் நாட்டிற்குச் சக்தியளிக்கட்டும்.
என்று, பிரதமர் தன் பதிலை நிறுத்திக்கொண்டவுடன், அரங்கத்தில் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கனடாவில் குடியுரிமை மறுக்கப்பட்ட 99வயது பெண்?

80-வருடங்களிற்கு மேலாக கனடாவில் வாழ்ந்தாலும் குடியுரிமை மற்றும் சுகாதார அட்டை மறுக்கப்பட்ட 99-வயதுடைய பெண் ஒருவர் தனது நிலைமையை CBC விசாரனை செய்தி பகுதியான Go Public- கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
ஜோன் ஸ்ரேலிங் என்ற இப்பெண்ணின் விண்ணப்பம் மறுக்கப்பட்டதற்கு ஒரே ஒரு காரணம் ஒரு பிரத்தியேக அடையாளம்—– கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டிற்கு முற்பட்ட அவரது பிறப்பு அத்தாட்சி பத்திரம்– அவரால் சமர்க்க முடியாமல் போனதே.
இவரது சிநேகிதி டயான வற்சன் 2012 தொடக்கம் ஸ்ரேலிங்சை ஒரு கனடிய பிரசையாக அடையாளம் காட்டுமாறு போராடிவருகின்றார். இதற்கான ஒரு முக்கிய காரணம் இந்த வயோதிபர் பொது சுகாதார பராமரிப்பு நலனை பெறமுடியும் என்பதுமாகும்.
வற்சன் கனடா குடியுரிமை மற்றும் குடிவரவு பகுதியினருக்கு ஸ்ரேலிங் யு.கேயில் பிறந்து கனடா வந்து அவருடைய நீண்ட வரலாறு இங்கு உண்டானதென்பதனை நிரூபிக்க 20ற்கும் மேற்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இந்த ஆவணங்கள் ஸ்ரேலிங்ஸ் 1930லிருந்து ரொறொன்ரோவில் வசிக்கின்றார் என்பதை மட்டுமின்றி வேலை, தனது வரியை செலுத்துதல், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்தமை போன்றனவற்றை உறுதிப்படுத்துகின்றன. ஸ்ரேலிங் யுகே அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டும் அவரது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை பெற முடியவில்லை.
மற்றய அனைத்து ஆதாரங்கள் இருந்தும் CICஸ்ரேலிங்கிற்கு குடியுரிமை சான்றிதழை வழங்க மறுத்து விட்டனர். பெரிய கோப்பு ஒன்றை தான் அனுப்ப பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்ற ஒரு பக்க கடிதம் தனக்கு அனுப்ப பட்டதென அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
1916ல் லண்டனில் பிறந்த ஸ்ரேலிங் யு.எஸ் வந்து பின்னர் எல்லையை கடந்து 1933ல் தனது 17வது வயதில் கனடா வந்தார். ஏன் எல்லையை கடக்கின்றீர்கள் எவ்வளவு காலம் தங்குவீர்கள் போன்ற எதுவித கேள்விகளையும் எவரும் கேட்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இவர் திருமணம் செய்யவில்லை. வாகனமோட்டும் அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு பெறவில்லை. கடந்த சில வருடங்கள் வரை சுகாதார அட்டை பெறவேண்டிய அவசியமும் அவருக்கு ஏற்படவில்லை.
இவருக்கு இரண்டு காரணங்களிற்காக தான் உதவவிரும்புவதாக வற்சன் தெரிவித்தார். இவரது வயது காரணமாக இவருக்கு சுகாதார பராமரிப்பு திட்டங்களின் அணுகல் தேவை. இவரது சேமிப்பு முடிவடையும் போது இந்த வயோதிபரால் அவரது ஓய்வு கால இல்லத்திற்கும் கட்டணம் செலுத்த முடியாத நிலைமை ஏற்படும்.சுகாதார அட்டை இன்றி இவரால் நீண்ட-கால அரசாங்க பராமரிப்பையும் அணுக முடியாது.
Go Public ஸ்ரேலிங்களின் வழக்கை கனடா குடியுரிமை மற்றும் குடிவரவு பிரிவினருக்கு எடுத்து சென்றனர். அங்கு இவரது வழக்கை எடுத்துக்கொள்ள உடன்பட்டனர்.
முடிவு?
யூன் மாதம் செய்யப்பட்ட சமீபத்திய குடியுரிமை சட்ட திருத்தங்கள் ஸ்ரேலிங் ஒரு கனடிய குடியுரிமையாளர் என்பதை உறுதிப்படுத்துவதாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த மாற்றங்கள் 1947ல் இருந்த அந்த பழைய சட்டங்களை அங்கீகரிப்பதாக கூறப்படுகின்றது.
ஸ்ரேலிங் மற்றும் வற்சன் இருவருக்கும் இச்செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. ஸ்ரேலிங் தனது குடியுரிமை சான்றிதழ் மற்றும் நிரந்தர சுகாதார அட்டையையும் பெறுவார்.
நானும் மற்றய கனடியர்கள் போல் உணர்கின்றேன் என ஸ்ரேலிங் தெரிவித்தார்.
Go Public- ஸ்ரேலிங்கின் 82வருட கனவை நிறைவேற்றியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 25 செப்டம்பர், 2015

சவுதி அரசு தான் மெக்காவில் 717 பேர் பலியானதற்கு காரணம்: ஈரான் குற்றச்சாட்டு

மெக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்ததற்கு சவுதி அரேபிய அரசின் திறமையற்ற ஆட்சி தான் காரணம் என்பதால் உயிரிழப்பிற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் நாடு பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. 
நேற்று காலை மெக்காவில் சுமார் 2 லட்சம் இஸ்லாமியர்கள் மேற்கொண்ட ‘ஹஜ்’ புனித பயணத்தின்போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 717 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 800க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் ஈரான் -131, இந்தியா -14, எகிப்து -8, பாகிஸ்தான் -6, துருக்கி -4, இந்தோனேசியா -3, கென்யா -3 உள்ளிட்ட சுமார் 717 பேர் உயிரிழந்தனர்.

லட்சக்கணக்கில் திரண்ட இஸ்லாமியர்கள் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்விற்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக சவதி அரேபியா அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆனால், இந்த காரணத்தை நைஜீரியா நாடு ஏற்க மறுத்துள்ள நிலையில், ஈரான் நாடு ஒரு அதிரடி அறிவிப்பை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

ஈரான் நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியா அரசின் திறனற்ற ஆட்சியே இந்த விபத்திற்கு காரணம். 717 பேரின் உயிரிழப்பிற்கு அந்நாட்டு அரசாங்கம் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

மெக்காவில் உயிரிழந்த வெளிநாட்டினர்களில் ஈரான் நாட்டை சேர்ந்தவர்களே அதிகமானவர்கள் ஆவர்.இந்நிலையில், சவுதி அரேபிய மன்னரான சல்மான், விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




வியாழன், 24 செப்டம்பர், 2015

தவறான கருத்து ஃபேஸ்புக்கில் பரப்பிய நபருக்கு சிறை தண்டனை!

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெல்லோ என்ற 28 வயது இளைஞர் சிங்கப்பூரில் நர்ஸ் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ’சிங்கப்பூர் மக்கள் தோல்வியாளர்கள்’ என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், ”சிங்கப்பூர் மக்களிடமிருந்து நாம்
 (பிலிப்பைன்காரர்கள்) வேலைகளை எடுத்துக் கொண்டோம். அவர்களின் எதிர்காலத்தை எடுத்துக் கொண்டோம். அவர்களின் பெண்களை எடுத்துக் கொண்டோம். இன்னும் சிறிது காலத்தில் அந்தத் தோத்தாங்குளிகளை சிங்கப்பூரை விட்டே வெளியேற்றுவோம். சிங்கப்பூர் 
விரைவிலேயே பிலிப்பைன்ஸின் ஒரு மாகாணமாக ஆகப் போகிறது. சிங்கப்பூரில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படப் பிரார்த்திக்கிறேன். அப்படி எதுவும் நடந்தால் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி” என்று ஒரு பதிவு போட்டிருந்தார்.
சுமார் 600 லைக்குகள் வேறு அந்தப் பதிவிற்கு. பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த போஸ்ட்டை நீக்கிய பெல்லோ, தனது ஃபேஸ்புக் பக்கத்தை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்று காவல்துறையில் புகார் ஒன்றினை அளித்தார். ஆனால் இதே போன்ற மேலும் சில பதிவுகளை அவர் கடந்த ஆண்டும் பகிர்ந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்..
பிரச்னைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்தது, காவல்துறை அதிகாரிகளிடம் தவறான தகவல்களை அளித்தது என்ற புகார்களின் அடிப்படையில் அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து நீதிபதி சிவசண்முகம் தீர்ப்பளித்தார். சிங்கப்பூர் அரசின் முடிவை பிலிப்பைன்ஸ் அரசு வரவேற்றுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



சனி, 19 செப்டம்பர், 2015

செப்டம்பர் 28-ம் திகதி உலக அழிவு என்கிறாா்கள் ரத்த சிவப்பில் நிலா .!!

அமெரிக்கர்கள் கூறுகிறர்கள் ? ரத்த சிவப்பில் நிலா தோன்ற அறிவியல் ரீதியான காரணத்தை எடுத்துரைத்தும், அதில் நம்பிக்கையில்லாமல், உலக அழிவுக்கான அறிகுறிகள் பல தோன்றியுள்ளன என ஆணித்தரமாக சில அமெரிக்கர்கள் இன்னும் நம்பி வருகின்றனர். உலக அழிவு நெருங்குகிறது! 
அமெரிக்காவின் 
உட்டா மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட நம்பிக்கைவாதிகள் பலரும், வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா, விண்கற்கள் பூமி மீது விழக் காரணமாக அமைந்துவிடும் என தீவிரமாக நம்புகின்றனர்.
மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர், அழிவின்போது தேவைப்படுமே.., என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர். உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய பிரபல எழுத்தாளரான ஜீலி ரோ என்பவர் எழுதிய புத்தகங்களின் குறிப்புகளைக் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விண்வெளி தொடர்பான ஆராய்சியாளர்கள் செப்டம்பர் 28-ம் திகதி தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலவால் அழிவு எதுவும் ஏற்படப் போவதில்லை என ஏற்கனவே தெரிவித்துள்ளனர். நாசாவும் விண்கற்கள் விழும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.!

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 16 செப்டம்பர், 2015

இரண்டு வயது சிறுமி கடத்தல் : அதிர்ச்சியில் உயிரைவிட்ட தந்தை?

கனடாவின் Alberta பகுதியில் இருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 2 வயது சிறுமியின் உடலை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Alberta மாகாணத்தின் Blairmore பகுதியில் வீட்டில் இருந்த 2 வயது சிறுமியை மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாக பொலிசாருக்கு தகவல் தெரியவந்தது.

இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார், குழந்தை Hailey Blanchette வை மீட்க முடியாமல் திணறினர்.

இறுதியில் குழந்தையை கடத்தியவர்கள் குறித்த போதிய தகவல்கள் ஏதுமின்றி தேடுதலைத் தொடர்ந்த பொலிசாரால் குழந்தையை உயிருடன் மீட்க முடியாமல் போனது.

இதனிடையே புறநகர் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை Hailey Blanchette வின் உடலை பொலிசார் மீட்டனர்.

முன்னதாக வீட்டில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை குறித்த தகவல்கள் ஏதும் அறியமுடியாததில் மனமுடைந்த தந்தை Terry Blanchette தற்கொலை செய்துகொண்டார்.

இதனிடையே குழந்தையின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடும்பத்தினர் ஒவ்வொன்றாய் வரத்துவங்கினர்.

இந்நிலையில் Blairmore பகுதியில் இருந்து சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிசார்,
அந்த நபர் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட
 மறுத்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






திங்கள், 14 செப்டம்பர், 2015

மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

மூன்று வார காலம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரின்போது இலங்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ, ஜெனிவாவிற்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்ஹ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் ஐ.நா மாநாட்டிற்கு இம்முறை கலந்துக்கொள்ளவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்ட் ராட் செய்ட் அல் உஷைனை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரை நிகழ்த்தவுள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.

கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று மீண்டும் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உள்ளக விசாரணை குறித்த ஐக்கிய அமெரிக்காவின் அறிக்கையும் இன்று அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த இருவிடயங்களும் இலங்கை தொடர்பில் முக்கிய விடயங்களாக காணப்படுவதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சாட்சி விசாரணை அறிக்கை இலங்கை பிரதிநிதிகளினால் இன்றைய அமர்வில் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமாயின் அது மிகச் சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்த மனித உரிமைகள் ஆணையகத்தினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டாது எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவா சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின்போது இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விளக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>