நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

ரீயூனியன் தீவு ஆட்கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறிவருகின்றது

பிரான்ஸிற்கு சொந்தமான ரீயூனியன் தீவு தற்போது ஆட்கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தெரிய வருகின்றது.கடந்த சில வருடங்களாக சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியா
 நோக்கி செல்லும் நிலை காணப்பட்டது.தற்போது அவுஸ்திரேலியா கடுமையான சட்டங்களையும் பாதுகாப்பையும் அறிமுகம் செய்துள்ள நிலையில், ஆட்கடத்தல்காரர்களின் பார்வை பிரான்ஸ் நோக்கி திரும்பியுள்ளது.
இலங்கையிலுள்ள பலர் பிரான்ஸ் செல்லும் நோக்கில் ரீயூனியன் தீவை நோக்கில் செல்ல முயற்சிப்பதாக, குற்ற விசாரணை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.இந்த வருடத்தில் மாத்திரம், சட்டவிரோதமாக 4 படகுகளில் இலங்கையர்களை ரீயூனியன் தீவிற்கு அழைத்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்களின் இரண்டு குழுக்களை பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.மேலும், நூற்றுக்கும் அதிகமான 
இலங்கையர்கள், அந்த நாட்டு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, குற்ற விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரி 
ஒருவர் தெரிவித்துள்ளார்.
படகு மூலம் பிரான்ஸ் செல்வதற்கு ஆயத்தமாக இருந்த குழுக்கள் இரண்டு கடந்த வாரம் சியம்பலாண்டுவ மற்றும் கிரின்ந்த 
பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.ஆட்கடத்தலில் ஈடுபடும் பிரதான நபர் தொடர்பான தகவல்களை குற்ற விசாரணை திணைக்களத்தினர் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளார்.
பிரதான சந்தேக நபர் ரீயூனியன் தீவில் இருந்து ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார். ரீயூனியன் தீவிற்கு சென்றிருந்த நிலையில், அந்நாட்runiy1runiyanam11runiyanடு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 64 இலங்கையர்கள் கடந்த வாரம் நாடு கடத்தப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.$$$$$$$
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

கடுமையான குளிர் பிரித்தானியாவில் மக்களுக்ள் கடுந் சிரமத்தில்

பிரித்தானியாவின் பல பகுதிகள் கடுமையான குளிரான காலநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 10 மணித்தியாலங்களுக்கு கடும் பனி பொழிவு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று நாட்களாக நிலவும் பனியினால் பிரித்தானியாவுக்கு ஆபத்துக்கள் உள்ள நிலையில் மொத்தமாக 7 மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இன்றையதினம் 0 செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் சேவை நிலையம்
 குறிப்பிட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவின் காரணமாக உயிராபத்துகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கை
 விடுக்கப்பட்டுள்ளது.
வேல்ஸின் சில பகுதிகளில் 6 அங்குலம் வரையான பனியும் தெற்கு பிரித்தானியாவில் 3 முதல் 7 அங்குலம் வரை உயரமான பனியும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக போக்குவரத்துத்தடை, மின்சாரத்தடை மற்றும் ஏற்படக்கூடும் எனவும் தொலைத்தொடர்பு சேவைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது

.


புதன், 6 பிப்ரவரி, 2019

பிரித்தானியாவில் தாயின் உயிரைக் காப்பாற்றிய பிறந்த குழந்தை

என் உயிரை என் மகள் தான் காப்பாற்றினாள் என்று பிரித்தானியாவைச் சேர்ந்த தாய் ஒருவர் உருக்கமாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Claire Granville. 40 வயதான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. அதன் பின் அதிலிருந்து மீண்டும் இருக்கும் இவர், எப்படி தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பது, இதிலிருந்து மீண்டது எப்படி என்பதைப் பற்றி பிரபல ஆங்கில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், நான் செவிலியராக வேலை பார்க்கிறேன். 
கணவரின் பெயர் Mark Wright.
எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் முதல் குழந்தையின் பெயர் Jacob(12), இரண்டாவது குழந்தையின் பெயர் Amelie(10), இதில் மூன்றாவது குழந்தையின் பெயர் Matilda.
ஒவ்வொரு தாயும் குழந்தை பிறந்தவுடன் தன் குழந்தைக்கு எப்போது பால் கொடுப்போம் என்று தான் நினைப்பாள், அதே போன்று தான் எனக்கு மூன்றாவதாக Matilda பிறந்தவுடன் பால் கொடுக்க 
ஆரம்பித்தேன்.
தொடர்ந்து பால் குடித்த வந்த அவள், சில மாதங்களில் என்னுடைய இடது மார்பக்த்தில் பால் குடிக்க மறுத்தாள், முயற்சித்தும் அழுதாலே 
தவிர குடிக்க மறுத்தாள்.
இதனால் செவிலியரான நான் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சோதித்த போது, இடது பக்க மார்பில் கட்டி ஒன்று உருவாகியுள்ளதாகவும், அது புற்று நோயின் முதல் தாக்கம் என்று மருத்துவர்கள் அதிர்ச்சி 
தகவலை கூறினர்.
இதையடுத்து தொடர்ந்து மேற்கொண்ட சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் கட்டிகள் அகற்றப்பட்டு, புற்றுநோயிலிருந்து முழுவதும் குணமடைந்துள்ளேன்.
அவள் மட்டும் அப்படி செய்யாமல் இருந்தால், நான் அதை கண்டுகொண்டிருக்கமாட்டேன், புற்றுநோய் முற்றியிருக்கலாம், ஆனால் இப்போது நான் உயிரோடு இருப்பதற்கு Matilda தான் காரணம், அவள் பெரிதாக வளர்ந்தவுடன், நீ தான் என் உயிரை காப்பாற்றினாய் என்று சொல்ல வேண்டும் என உருக்கமாக கூறி முடித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 2 பிப்ரவரி, 2019

திடீர் நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் குலுங்கிய பூமி

ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம், டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இந்த 
நிலநடுக்கம் பதிவானது.
நிலநடுக்கத்தின் மைய புள்ளி காபூல் நகரத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
212 கிலோ மீட்டர் ஆழத்துக்கு பூமியின் அடியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. வீடுகள்,கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வெளியே ஓடினர். டெல்லியை தவிர வட இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக
 தெரிகிறது.
இருப்பினும்,நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தோ, உயிரிழப்புகள் குறித்து எவ்வித தகவல்களும்
 வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், இதனால் இலங்கை்கு பாதிப்புகள் எவையும் இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>