நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 19 டிசம்பர், 2019

பேஸ்புக்இருப்பிட அமைப்புகள் முடக்கப்பட்டிருந்தாலும் பயனாளர்களைக் கண்காணிப்பதை ஒப்புக்கொண்டது

பயனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின்தொடரக் கூடாது என்று தேர்வு செய்து வைத்திருந்தாலும், பேஸ்புக்கால் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என அந்நிறுவனமே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனாளர்கள் இதில் பகிர்ந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் CCPA என்ற சட்டத்தின் படி சமூக வலைதளங்கள் பயனர்களிடமிருந்து 
என்னென்ன தகவல்களை எடுத்துக்கொள்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை பயனர்களுக்கு உள்ளது.அதன்படி பயனாளர்களின் தகவல்களை சேகரித்து விளம்பர நோக்கத்திற்காக பேஸ்புக் பயன்படுத்துகிறது என அமெரிக்கா 
உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், பேஸ்புக்கில் லொகேஷனை பகிர்ந்துகொள்ளும் முறையை முடக்கி வைக்கப்பட்டிருந்தாலும், பயனர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் அறிய முடியும் என 
செனட் சபையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களுடைய செல்போன் ஐபி முகவரியை வைத்து அவர்களுடைய லொகேஷனை பேஸ்புக் கண்டுபிடிக்கிறது. விளம்பர நோக்கத்திற்காகவே பயனர்களின் லொகேஷனை, அவர்களுக்கே 
தெரியாமல் எடுத்துக்கொள்வதாக செனட் அவையில் கடிதம் மூலம் பேஸ்புக் விளக்கமளித்துள்ளது.போட்டோக்களில் டேக் செய்யப்படுவது, குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதை செக் இன்னாக பதிவு செய்வது போன்றவற்றையெல்லாம் மீறி, பயனர்களின் ஐபி முகவரிக்குள் பேஸ்புக் ஊடுருவுவது அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வானில் பறந்து சென்ற விமானத்தில் பெண் செய்த செயல் அச்சத்தில் பயணிகள்

துருக்கியில் விமானத்திற்குள் இருந்த பெண் ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்கச் செய்யப்போவதாக கூறி பீதியைத் தூண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கென் விமான நிலையத்திலிருந்து துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸில் உள்ள எர்கன் சர்வதேச விமான நிலையத்திற்கு 
புறப்பட் விமானம் தயராக இருந்தது.
அப்போது, விமானத்திற்குள் கருப்பு கண்ணாடி மற்றும் நீல நிற முக்காடு அணிந்திருந்து பெண் ஸ்ரீ, தான் FETO இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கத்தி, கோபமாக குரானை படித்து விமானத்தை வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தியதில் பயணிகள் பீதியில் உறைந்துள்ளனர்.
மேலும், தன்னிடம் ஐந்து வெடிக்குண்டுகள் இருப்பதாக அப்பெண் பீதியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், 
சர்ச்சைக்குரிய இயக்கத்தின் பின்னணியில் உள்ள இஸ்லாமிய மதகுருவான ஃபெத்துல்லா குலனின் படத்தையும் அவர் கையில் வைத்திருந்துள்ளார்.
பெண்ணின் பயங்கரமான செயலுக்கு பிறகு பயணிகளால் கட்டுப்படுத்தப்பட்டு விமானத்திலிருந்து வெளியேறப்பட்டார் என்று
 உள்ளுர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.பின்னர், பாதுகாப்பு குழு விமானத்திற்குள் நுழைந்து சோதனை 
செய்துள்ளது, எனினும் சந்தேகத்திற்கிடமான 
எதுவும் சிக்கவில்லை.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 17 டிசம்பர், 2019

ஆழ்கடலில் கடலுக்குள் மூழ்கிய வீரருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விசித்திர மிருகம்


பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கிய வீரரை சீல் எனப்படும் கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காண்பது பலருக்கும் பிடித்தமான செயல் 
எனலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் கண்டிராத அரிய வகை உயிரினங்களும் நம் கண்களை
 கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண மீன்களும் இருக்கும். அதே நேரத்தில் ஆபத்துகளும் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம்.
கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பிட்ட பகுதியில் கடலின் தன்மை, புதை படிமங்கள் போன்றவற்றை கண்டறிய
 நீர் மூழ்கி வீரர்களும் கடலுக்குள் செல்வது உண்டு. அவ்வகையில், பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கி வீரரை சீல் எனப்படும் கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.-

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

                

வெள்ளி, 13 டிசம்பர், 2019

இலங்கைப் பெண் இத்தாலி இளைஞனை ஏமாற்றி செய்த மோசடி

இத்தாலியில் தொழில் செய்யும் இளைஞர் ஒருவரை பேஸ்புக் மூலம் ஏமாற்றி, 35 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கம்பளையை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்
 கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து இரண்டு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்திற்குள் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் மோதலுக்கு முக்கிய காரணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான இந்த இளைஞன் நீண்ட காலமாக இத்தாலியில் சேவை செய்துள்ள நிலையில் பேஸ்புக் மூலம் இலங்கையில் உள்ள இந்தப் பெண்ணை அறிந்து கொண்டுள்ளார்.இளம் வயதுடைய யுவதி போன்று நடந்து கொண்ட இந்த பெண் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி வழங்கி இளைஞனை ஏமாற்றி பல முறை பணம்
 பெற்றுள்ளார்.தங்கள் இருவருக்கும் வீடு கட்ட வேண்டும் எனக் கூறி பல முறை பணம் பெற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறு பணம் பெற்று கம்பளை – நுவரெலியா வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை வாங்கி அதனை வாடகைக்கு வழங்கி வந்துள்ளதாக 
தெரியவந்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அவுஸ்திரேலியாவில் நடந்த உயர் பரீட்சையினல் சாதனை படைத்த ஈழத்து தமிழ் மாணவி

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா,
 மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ் மொழியில் இவ்வாறானதொரு சாதனையை நிகழ்த்தியமை தொடர்பில் பலரும்
 பாராட்டுக்களைத் தெரிவித்து
 வருகின்றனர்.அவுஸ்திரேலியாவில், 21 வருடகால தமிழ் மொழிப் பரீட்சை வரலாற்றில் இந்த சாதனை முதல் முறை 
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 10 டிசம்பர், 2019

இராணுவ விமானம் நடுவானில் மாயம்!!…தீவிர தேடுதலில் விமானப் படை

சிலியிலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம் ஒன்று 38 பேருடன் மயமானதாக அந்நாட்டு விமானப் படை தெரிவித்துள்ளது.இதுகுறித்து சிலி விமான படை தரப்பில் வெளியான அறிக்கையில், “சி – 130 ஹெர்குலஸ் இராணுவ விமானம் சிலியின் புண்டா 
அரேனாஸ்லிருந்து பிற்பகல் 4. 45 மணியளவில் புறப்பட்டு அண்டார்டிகாவுக்கு செல்லும் வழிதடத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனைத் தொடர்ந்து, விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான இராணுவ விமானத்தில் 38 பேர் இருந்தனர். இதில் 21 பேர் பயணிகள்” என்று 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிலி ஜனாதிபதி செபாஸ்டின் பினரே கூறும்போது, “விமானம் மாயமாகி இருப்பது மிகுந்த கவலையை அளித்துள்ளது. தொடர்ந்து நிலையை கண்காணித்து வருகிறேன்” என்றார்.தொடர்ந்து விமானத்தை தேடும் பணி நடந்து வருவதாக சிலி விமான படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 9 டிசம்பர், 2019

கைநழுவிப் போன ரஷ்யாவின் உலகக் கிண்ண, ஒலிம்பிக் கனவு

2020 ஒலிம்பிக், 2022 பீபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை வாடா (Wada)எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விதித்துள்ளது.சுவிட்சர்லாந்தின் லொசேன் 
நகரில் நடத்த வாடாவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த வாடாவின் இந்த முடிவினை நடுவர் மேன் முறையீடு நீதிமன்றம் மூலம் மேல் முறையீடு செய்வதற்கு 21 நாள் அவகாசமும் ராஷ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்ய வீரர்களில் ஊக்க மருந்து பாவனை தொடர்பான ஆய்வகத் தரவுகளை ரஷ்யா மறைத்தமைக்காகவும், போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமையையும் கருத்திற் கொண்டே ரஷ்யாவுக்கு இவ்வாறு
 நான்கு ஆண்டுகள் அனைத்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து
 கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ரஷ்யாவுக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி, 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள பீபால உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டி உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் கை நழுவிப் போயுள்ளது.எனவே, டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் பீபா உலகக் கிண்ண 
போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது. அந்நாட்டின் தேசிய கீதமும் ஒலிக்காது.இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.




ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ரஷ்யாவில் பருவநிலை மாற்றத்தினால் கிராமத்திற்குள் நுழைந்த பனிக்கரடிகள்

ரஷ்யாவில் பருவநிலை மாற்றத்தால் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் 50இற்க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள ரிர்காப்பி கிராமத்தில் அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து 
செய்யப்பட்டுள்ளதோடு, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், பொது இடங்கள் குடியிருப்பு வாசிகளைக் கரடிகள் தாக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ரிர்காப்பியில் கரடிகள் பாதுகாப்பு
 திட்டத்தின் தலைவராக இருக்கும் டட்யானா மினென்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தக் கிராமத்துக்குள் சுமார் 56 கரடிகள் நுழைந்துள்ளன.
 பெரிய மற்றும் சிறிய கரடிகளும், பெண் கரடிகளும் அதன் குட்டிகளும் அதில் அடங்கும். பெரும்பாலான கரடிகள் மிகவும் ஒல்லியாகக் காணப்படுகிறன’ தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிர்காப்பி 
என்னும் இடத்திலிருந்து
 சுமார் 2.2கிமீ தூரத்தில் உள்ள கேப் என்ற இடத்தில் கரடிகள் வசிக்கின்றன ஆனால் அந்த இடம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக வெப்பமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் சிலர், ரிர்காப்பி கிராமத்திற்கு பனிக்கரடிகள் வருவது
 தொடர்கதையான ஒன்று எனவே அங்குள்ள மக்கள் நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.