கனடாவின் புளூ வாட்டர் பாலம் எல்லைச் சாவடியில் இடம்பெற்ற பெரியளவிலான பறிமுதல் நடவடிக்கை, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்டாரியோ மாகாணத்தின் சார்னியா நகரிலுள்ள பாயிண்ட் எட்வர்ட் நுழைவுத் துறையில் கடந்த 7 நாட்களில் 4.5 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள சட்டவிரோத புகையிலைப் பொருட்கள் மற்றும் நிக்கோட்டின் வேப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத பொருட்கள் அமெரிக்காவில்
இருந்து கனடாவிற்குள் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டிற்குள் சட்டவிரோத பொருட்கள் நுழைவதைத் தடுக்கவும், ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றவியல் வலையமைப்புகளை
முறியடிக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html










0 கருத்துகள்:
கருத்துரையிடுக