நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 28 நவம்பர், 2022

பிரிட்டனில் பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ள உள்ள 100 நிறுவனங்கள்


உலகில் பல நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற கொள்கைக்கு மாறிவருகின்றன. அந்த வகையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நாட்களை 4 நாட்களாக 
மாற்றியுள்ளன. 
இதனால் பணியை தவிர்த்து மற்ற நாட்களில் பணி நேரம் நீட்டிக்கப்படாது எனவும் சம்பளம் குறைப்பு நடவடிக்கையும் கிடையாது எனவும் அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் பணி நேர குறைப்பால் இந்த 100 நிறுவனங்களில் பணியாற்றும் 2 ஆயிரத்து 600 பணியாளர்கள் பயனடைவார்கள் என 
தெரிவிக்கப்படுகிறது. 
4 நாட்கள் வேலை என்ற மாற்றத்தில் இணைந்திருக்கும் அவின் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதம் ரோஸ் பேசுகையில், நிறுவனத்தின் வரலாற்றில் தான் பார்த்த மிகவும் மாற்றத்தக்க முயற்சிகளில் ஒன்றாகும் என நெகிழ்ந்து பேசியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 11 நவம்பர், 2022

நாட்டுக்கு செல்லமாட்டோம்; வியட்நாமில் கதறும் இலங்கையர்கள்

கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த நிலையில், பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் 303 சட்டவிரோத புகழிட கோரிக்கையாளர்களான இலங்கையர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என கண்ணீர் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் தங்களை மீட்ட அதிகாரிகள் தங்களை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், குடும்பத்தோடு நாம் இங்கேயே செத்து மடிகிறோம் எனவும் தப்பிப்பிழைத்த
 பெண்ணொருவர் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>