நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 31 டிசம்பர், 2020

அரசியல் தஞ்சம் பிரித்தானியாவில் கோரியுள்ள பெருமளவு இலங்கைத் தமிழர்கள்

பிரித்தானியாவில் 6718 இலங்கையர்கள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 4 வருடங்களில் குறித்த
 இலங்கையர்கள் தஞ்சம் கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் மரண
 அச்சுறுத்தல் உள்ளதாககூறி குறித்த  
இல்கையர்கள் தஞ்சம் கோரியுள்ளனர்.இவர்களில் 144 இலங்கையர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அரசியல் பாதுகாப்பு கோரிய நபர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் தமிழர்கள் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 10 டிசம்பர், 2020

முகநூல் தளத்துடன் இணைந்த மெசஞ்சர் உலக அளவில் பாதிப்புற்றது

உலக அளவில் முகநூல் தளத்துடன் இணைந்த மெசஞ்சர் செயலியின் இயக்கம் கடந்த ஒன்றரை மணி நேரமாக 
பாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா நாடுகளில் மதியம் 2.30 மணிக்கும் இலங்கையில் 3.55 மணியில் இருந்தும் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்யும் பணியில் மெசஞ்சம் தொழில்நுட்ப 
குழு ஈடுபட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 1 டிசம்பர், 2020

பாதசாரிகளை ஜேர்மனியில் மோதித்தள்ளியது கார் நால்வர் ஸ்தலத்தில் பலி

ஜேர்மனியில் கார் ஒன்று பாதசாரிகளை மோதித்தள்ளிய சம்பவத்தில் ஒன்பது மாத குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஜேர்மனியின் மேற்கு பகுதி நகரமான டிரையரில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்ததாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவோ அல்லது மதரீதியாகவோஇடம்பெற்றதாக தாம் கருதவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகர மேயர் இந்த சம்பவத்தை "பயங்கரமானது" என்று விவரித்தார்.
இந்த சம்பவத்தில் 25 மற்றும் 73 வயதுடைய இரண்டு பெண்கள், 45 வயது ஆண் மற்றும் ஒன்பது மாத குழந்தை அடங்குவதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>