நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 22 செப்டம்பர், 2021

ஸ்பெயினில் காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு

 ஸ்பெயினை சேர்ந்த ஒரு நிறுவனம் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் கருவியை தயாரித்துள்ளது.வெப்பக்காற்றை குளிரூட்டினால் உறைவு மூலம் உருவாகும் நீர் துளிகளை சேகரிக்கும், மின்சாரத்தில் இயங்கும், இந்த கருவியை, அக்வேயர் என்னும் நிறுவனம்
 தயாரித்துள்ளது.
இதற்கமைய பஞ்சம் அதிகம் இருக்கும் நமீபியா மற்றும் லெபனானில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் இந்த கருவிகள் தற்போது 
பயன்பாட்டில் உள்ளன.
1990-களில் ஸ்பெயினை வாட்டிய கடுமையான வறட்சி காலத்தில் இந்த கருவியை உருவாக்கியதாக 82 வயதுடைய பொறியாளர் என்ரிக் வெய்கா தெரிவித்துள்ளார்
மேலும் நாளொன்றுக்கு 50 முதல் 75 லிட்டர் குடிநீர் தயாரிக்கும் இந்த கருவிகள் நீர் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக
 அமைந்ததுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 16 செப்டம்பர், 2021

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக யாழ் தமிழ் பெண் தேர்வு

யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரத்தினம் தொழிலாளர் கட்சியில் இருந்து
 போட்டியிட்டார்.
அவர், 21 அக்டோபர் 2015 அன்று ஒஸ்லோவின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 14-09-2021-அன்று  நடந்த தேர்தலில் நோர்வே பாராளுமன்ற உறுப்பினராக கம்ஷாஜினி குணரட்னம் 
தெரிவாகியுள்ளார்.
கம்ஷாஜினி குணரத்தினத்திற்கு இந்த இணையத்தின் 
நல்வாழ்த்துக்கள் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

வட்ஸ்அப் நிறுவனம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு செயற்பாடுகள் நிறுத்தம்

எதிர்வரும் 01-11-2021. நவம்பர் மாதம் முதல் 43 வகையான தொலைபேசிகளில் WHATSAPP பயன்படுத்தினவர்களுக்கு அதிர்ச்சி தகவல்43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.உலகின் அதிகளவான 
ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இருப்பினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதன் செயற்பாட்டை நிறுத்துவதாக நிறுவனம் 
அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

நோர்வே நாட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவியின் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு

யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உதவி இரசாயன விரிவுரையாளர் நோர்வே நாட்டின் அழைப்பை ஏற்று ஆராய்ச்சிக்காக அங்கு சென்றுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி இராசாயன விரிவுரையாளராக கடைமையாற்றியவர் தான் சுகுமார் – ரவீனா பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் உயர் புள்ளிகளை பெற்று சாதனை
 புரிந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவி சுகுமார்-ரவீனா நோர்வே நாட்டில் உள்ள அக்டர் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று ஆராய்ச்சிக்காக நோர்வே நாட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும் அக்டர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ள ரவீனா பொதுபட்டமளிப்புவிழாவில் மூன்று விஷேட தங்கபதக்கங்களைப் பெற்றுள்ளார் என்பதோடு இவரது ஆய்வுகட்டுரை கடந்த ஆண்டு இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றினால் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 4 செப்டம்பர், 2021

வெடித்து சிதறிய ஃபயர் ஃபிளை விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட்

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஃபயர் ஃபிளை’ விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட் நடு வானில் வெடித்துச் சிதறியது என விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ருவிட்டரில் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள வன்டன்பெர்க் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ‘ஆல்பா’ என்ற ரொக்கெட், விண்ணுக்கு ஏவப்பட்டு 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளது.DAMIKA 01 கலிபோர்னியா கடல் பகுதியில் பசுப்பிக் பெருங்கடலுக்கு மேலான வான்பரப்பில் இந்த ரொக்கெட் வெடித்து சிதறியதாக விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்ணுக்கு ஏவப்பட்டு சிறிது நேரத்தில் ரொக்கெட் முதல் சுற்றுப்பாதையை அடைய முயன்றபோது அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது வெடித்துச் சிதறியுள்ளது எ னவும் மேலும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>