நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 22 செப்டம்பர், 2021

ஸ்பெயினில் காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு

 ஸ்பெயினை சேர்ந்த ஒரு நிறுவனம் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் கருவியை தயாரித்துள்ளது.வெப்பக்காற்றை குளிரூட்டினால் உறைவு மூலம் உருவாகும் நீர் துளிகளை சேகரிக்கும், மின்சாரத்தில் இயங்கும், இந்த கருவியை, அக்வேயர் என்னும் நிறுவனம்
 தயாரித்துள்ளது.
இதற்கமைய பஞ்சம் அதிகம் இருக்கும் நமீபியா மற்றும் லெபனானில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் இந்த கருவிகள் தற்போது 
பயன்பாட்டில் உள்ளன.
1990-களில் ஸ்பெயினை வாட்டிய கடுமையான வறட்சி காலத்தில் இந்த கருவியை உருவாக்கியதாக 82 வயதுடைய பொறியாளர் என்ரிக் வெய்கா தெரிவித்துள்ளார்
மேலும் நாளொன்றுக்கு 50 முதல் 75 லிட்டர் குடிநீர் தயாரிக்கும் இந்த கருவிகள் நீர் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக
 அமைந்ததுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக