நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 24 செப்டம்பர், 2016

உங்க வீட்டு பெண்கள் முகநுாலில் இருக்கிறார்களா .?கவனிங்கள்..!!!

உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டாலோ, திருமணம் நடந்து விட்டிருந்தாலோ அல்லது யாருடனாவது தொடர்பில் இருந்தாலோ, உங்களுடைய இணைய வழி செயல்பாடுகளை சற்றே கவனத்துடன் அணுக வேண்டிய தருணம் இதுவாகும்.
ஃபேஸ்புக்குகளில் எந்தவித அறிமுகமும் இல்லாமல் தொடங்கிய பல்வேறு உறவுகளும், விவாகரத்து அல்லது பிரிந்து வாழ்தல் போன்ற நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நீங்கள் ஒரு மகிழ்ச்சியான இணையாக இருந்தாலோ மற்றும் காலம் முழுவதும் இவ்வாறே இணைந்திருக்க விரும்பினாலோ, இங்கே தரப்பட்டுள்ள குறிப்புகளை படித்து, பின்பற்ற வேண்டியது 
அவசியமாகிறது.
தங்களுடைய நண்பர்களுடைய பட்டியலை வைத்திருக்கும் உண்மையான கணக்கை ப்ரெஷ்சாகவும் மற்றும் சுத்தமாகவும் வைத்திருக்கும் பொருட்டாகவும், சில பேர் போலியான அடையாளங்களை கொண்டு கணக்குகளை தொடங்குவார்கள்.
இன்னும் சில பேர் தவறான காரணங்களுக்காக போலியான அடையாளம் கொண்ட கணக்குகளை பயன்படுத்துவார்கள்.
நீங்கள் இவ்வாறு போலி கணக்குகளை பயன்படுத்துபவர்களில் ஒருவராக இருந்தால், உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்.
இந்த வகை கணக்கை அழித்து விட்டு, உங்களுடைய துணைவருக்கு உண்மையானவராக நடந்து கொள்ளுங்கள்.
இந்த வகையான போலி அடையாளங்களை உங்களுடைய துணைவர் கண்டறிய மாட்டார் என்று நினைப்பது, நெடுநாட்களுக்கு நீடித்து இருப்பதில்லை.
உங்களுடைய இனிமையான மண வாழ்க்கை அல்லது உறவை தொந்தரவுக்குள்ளாக்கும் சில நண்பர்களை முகநூல் நட்பிலிருந்து வெளியேற்றுவது நல்லது.
இந்த வகை நண்பர்களிடம் தொடர்பில் இருப்பதை விட, பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கூட தொடர்பு கொள்ளாமல் 
இருப்பது நல்லது.
உங்களுடைய ஆண் நணர்பகளாக இருந்தவர்கள், இப்போதைய மண வாழ்க்கையை சூறையாடும் பகைவர்களாக மாறி விட
 வாய்ப்புகள் உண்டு.
இது ஒரு புத்திசாலித்தனமான அட்வைஸாக இருப்பதற்கு காரணம், பல கணவர்களும், மனைவிகளும் பிரிந்திருக்க காரணமாக இருப்பது வருத்தத்திற்குரிய இந்த வiயான நட்புகளே.
ஆரம்பத்தில், நண்பருடனான பிரிவு உங்களை வருத்தினாலும், பின்நாட்களில் திருமண உறபை பாதுகாத்ததற்காக நீங்கள் 
பெருமைப்படுவீர்கள்.
ஆரோக்கியமான உறவு என்பது துணைவருடன் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை பகிர்ந்து கொள்வது தான். நீங்கள் வெகு விரையில் திருமணம் புரிந்து கொள்வீர்கள் என்றால், உங்களுக்கான அறிவுரை அதீதமாக இரகசியம் காக்க தேவையில்லை என்பது தான்.
நீங்கள் அளவுக்கு அதிகமாக இரகசியம் காத்து நின்றால், உங்களுடைய துணைவரிடம் இருந்து எதையோ மறைக்க முயலுகிறீர்கள் என்பதை அவரும் உணர்ந்து கொள்வார். எனவே, உங்களுக்கு ‘ஓகே’ என்றால் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கூட துணைவருடன் பகிர்ந்து 
கொள்ளுங்கள்.
அதே போல, சில படங்கள் மற்றும் போஸ்ட்-களையும் உங்களுடைய துணைவரிடம் இருந்து மறைப்பதால், தேவையில்லாத சந்தேகங்களை வரவழைத்து, உறவை கெடுத்துக் கொள்வீர்கள். எனவே
 கவனம் தேவை
உங்களுடைய உறவில் நிலையை அனைவருக்கும் தெரியும் வகையில் நீங்கள் காட்டினால், அதாவது உங்களுடைய துணைவருடன் நிச்சயிக்கப்பட்டு விட்டீர்கள் அல்லது திருமணம் செய்யப் போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக காட்டுவதால் நம்பிக்கை கூடுமே தவிர, வேறெந்த ஆபத்துகளும் வருவதில்லை.
எனவே, நாம் ஏன் இதனை மறைக்க வேண்டும்? நம்முடைய உறவை வெளிப்படுத்தி, பெருமை கொள்வோம்!
உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை ஃபேஸ்புக் முழுமையும் பதிவேற்றம் செய்யலாம் என்று நான் அட்வைஸ் கொடுக்க விரும்புகிறேன்.
எனினும், சில படங்களை இவ்வாறு போடுவதால் எந்தவித பிரச்னைகளும் வரப்போவதில்லை.
இவ்வாறு பொதுவான தளங்களில் படங்களை போடுவதன் மூலம், அவருடன் நீங்கள் இருப்பதை விரும்புகிறீர்கள் என்றும், அதற்காக வெட்கப்படவில்லை என்றும் உலகுக்கும், துணைவருக்கும் உணர்த்திடவும்
 முடியும்.
எனினும், நெருக்கமான அல்லது தனிப்பட்ட படங்களை நீங்கள் பதிவிடும் போது கவனமாக இருக்கவும், பின் நாட்களில் உங்களுடைய துணைவரை தர்மசங்கடமான நிலைக்கு இந்த படங்கள் 
தள்ளி விடும்.
இவ்வாறு வித்தியாசமான படங்களை நீங்கள் பதிவிடும் முன்னர், துணைவருடன் ஒருமுறை கலந்து பேசி விடுவது நலம்
ஃபேஸ்புக்கில் உள்ள ‘டைம்லைன்’ பகுதியை வழங்கிய காரணத்திற்காக மார்க் ஸுக்கர்பெர்க்-ற்கு நீங்கள் நன்றி 
தெரிவிக்க வேண்டும்.
ஏனெனில், இந்த டைம்லைன் மூலம் உங்களுடைய துணைவர் உங்களுடைய கடந்த கால வாழ்க்கையை அவராகவே அறிந்து கொள்வார்.
இந்த டைம்லைனில், உங்களுடைய முன்னாள் காதலர்கள், குறும்புத்தனமான கமெண்ட்கள் அல்லது முன்னாள் காதலருடன் எடுத்துக் கொண்ட சில வெளிப்படையான படங்கள் என பல விஷயங்களையும்
 காண முடியும்.
நீங்கள் மணம் செய்து கொள்ளப் போகும் நபர், இந்த படங்களையும், கமெண்ட்களையும் பார்க்க முடியும், இவ்வாறு பார்க்கும் பொது உறவுக்கு அழிவு தரும் என்று நினைக்கும் போஸ்ட்கள், கமெண்ட்கள் மற்றும் படங்களை உடனடியாக அழித்து உங்களுடைய க்ளோசெட்டை சுத்தம் செய்வது நல்லது.
இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட ஃபுரோபைல் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள் என்று காட்ட வேண்டுமே தவிர, நீங்கள் யாராக இருந்தீர்கள் என்று காட்டத் தேவையில்லை..
அன்பு இணைய உறவுகளே இத்தகவல் யார் மனதைபுண்படுத்துவதற்கல்ல  நல்லதே நடக்கும் 
நன்றி!நன்றி!நன்றி!!!  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 21 செப்டம்பர், 2016

தமிழர்களால் பி.பி.சி செய்தியாளர் ரூ.97 லட்சம் இழப்பீடு பெற்றுக்கொண்டர்!

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தியாளருக்கு ரூ.97 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பிரித்தானிய நீதிமன்றம் அதிரடியாக
 உத்தரவிட்டது.
பிரித்தானிய நாட்டை சேர்ந்த பி.பி.சி என்ற தனியார் செய்தி நிறுவனத்தில் சந்தனகீர்த்தி பண்டாரா(57) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு யூலை 22-ம் திகதி இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தம்பதிக்கு குட்டி இளவரசர் ஜோர்ஜ் பிறந்துள்ளார்.
இந்த செய்தியை மறுநாளான 23-ம் திகதி சிறப்பு செய்தியாக வெளியிட பி.பி.சி தீர்மானித்துள்ளது.
அப்போது, செய்தியை வெளியிடும் பொறுப்பை சந்தனகீர்த்தி பண்டாரா பார்த்து வந்துள்ளார். இளவரசி ஜோர்ஜ் பிறந்த செய்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சந்தனகீர்த்திக்கு தகவல் 
அளிக்கப்பட்டது.
ஆனால், செய்தி வெளியிட வேண்டிய அதே யூலை 23-ம் திகதி இலங்கையில் ’கருப்பு யூலை’ அனுசரிக்கப்பட்டது. அதாவது, கடந்த 1983ம் ஆண்டு யூலை 23-ம் திகதி தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் 
கொல்லப்பட்டனர்.
எனவே, இலங்கை தமிழர்களின் செய்திக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் என்றும்  அதே நாளில் குட்டி இளவரசர் ஜோர்ஜ் பிறந்த செய்தி ‘சிறப்பு செய்தியில்’ வராது எனவும் சந்தனகீர்த்தி திட்டவட்டமாக 
கூறியுள்ளார்.
செய்தியாளார் கூறியது போலவே மறுநாள் இலங்கை தமிழர்களின் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பி.பி.சி நிறுவனம் சந்தனகீர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. மேலும், இதுபோன்ற தவறு மீண்டும் நிகழாமல் இருக்க அவரிடம் உறுதி பத்திரமும் எழுதி 
வாங்கப்பட்டது.
ஆனால், இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வருடத்திற்கு பின்னர் அதாதவது, கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி சந்தனகீர்த்தியை பி.பி.சி நிறுவனம் பணியில்
 இருந்து நீக்கியது.
பி.பி.சி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தனி மனித உரிமையை பறிப்பதாக இருப்பதாக கூறி சந்தனகீர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு 
தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது, 18 ஆண்டுகளாக பி.பி.சி நிறுனத்தில் பணியாற்றிய செய்தியாளர் மீது தனிப்பட்ட விரோதம் காரணமாக பி.பி.சி நிறுனம் நடவடிக்கை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
எனவே, செய்தியாளரின் உரிமையை பறிக்கும் விதத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது தவறு எனக் கூறிய நீதிபதிகள், சந்தனகீர்த்திக்கு 51,428 பவுண்ட்(97,63,855 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என பி.பி.சி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






புதன், 7 செப்டம்பர், 2016

கார் விபத்ல் கனடாவில் இலங்கை வம்சாவளி தாயும் மகளும் பலி

கனடா – ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கை வம்சாவளி தாயும்  அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே மற்றும் அவரின் மகளான 4 வயது சாவனி ஆகியோர்
 பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என 
குறிப்பிடப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>