நிலாவரை .கொம்

siruppiddy
ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 நவம்பர், 2022

நாட்டுக்கு செல்லமாட்டோம்; வியட்நாமில் கதறும் இலங்கையர்கள்

கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த நிலையில், பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் 303 சட்டவிரோத புகழிட கோரிக்கையாளர்களான இலங்கையர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என கண்ணீர் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் தங்களை மீட்ட அதிகாரிகள் தங்களை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், குடும்பத்தோடு நாம் இங்கேயே செத்து மடிகிறோம் எனவும் தப்பிப்பிழைத்த
 பெண்ணொருவர் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 26 ஜூலை, 2022

நாட்டுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் டொலர் பெறுமதி வீழ்ச்சி

2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்த நாடு பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களின் தொகை 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.  இது 51.6 வீத வீழ்ச்சியாகும். 
கடந்த ஆண்டு இதே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 478.4 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய தொகை 274.3 மில்லியன் 
டொலர்களாகும்.
வெளிநாட்டு தொழிலாளர் விசாரணைகள் ஏப்ரல் மாதத்தில் 249 மில்லியனாக டொலர்களாக இருந்தது மற்றும் மே மாதத்தில் 304 மில்லியனாக டொலராக உயர்ந்தது, ஆனால் ஜூன் மாதத்தில் 
மீண்டும் சரிந்தது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 13 மே, 2022

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) தனியார் ஏர் அம்புலன்ஸ்

சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்புலன்ஸ் சேவைக்கு சொந்தமான SAZ52 என்ற தனியார் ஜெட் விமானம் 11-05-2022.அன்று காலை 9.51 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் 24 மணித்தியாலங்களுக்கு மேலாக விமான நிலைய ஹேங்கரில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள பிரபலமான ராஸ் அல் கைமா விமான நிலையத்திலிருந்து விமானம் வந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ விமானங்களில் தனியார் ஜெட் விமானத்தின் அடுத்த இலக்கு குறிப்பிடப்படாது மற்றும் விமானத்தின் வருகை குறிப்பிடப்படுவதில்லை.
அவசர நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக வேறு நாட்டுக்கு அழைத்துச் செல்ல விமான ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸில் 24 மணி நேரமும் ஏன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது? அது எங்கு செல்ல உள்ளது என்பதும் 
தெரியாத நிலை உள்ளது.
இந்நிலையில், நாட்டை விட்டு தப்பிச் செல்ல ராஜபக்ஷ அல்லது வேறு முக்கிய நபர்களை தனியார் ஆம்புலன்ஸ் ஜெட் விமானத்தில் கொண்டு செல்ல போகப் போகிறர்களா? என கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளதாக முகநூலில் Jeevan Prasad என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 9 அக்டோபர், 2021

தென்னாப்பிரிக்காவுக்கு தமிழகத்திலிருந்து செல்ல முயன்ற இலங்கையர் கைது

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக,  தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி அதில் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம்.
இந்நிலையில் மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் இவா்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக, சா்வதேச பொலிஸாரிடம் சிக்கினராம். மாலைத்தீவு அருகே உள்ள டிக்கோ காா்சியா என்ற தீவு அமெரிக்காவுக்கு 
சொந்தமானதாக உள்ளது.
அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவா்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. எனினும் இதுவரை இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து 64 அகதிகள் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்ப முயன்றதாக வந்த தகவலையடுத்து க்யூ பிரிவு பொலிஸாா், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் , தற்போது வரை இந்த 64 போ் யாா் என்பதை உளவுத்துறை பொலிஸாரால் உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் கடற்பரப்பில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படும் 64 நபா்களின் விவரங்களைப் பெறுவதற்காக தமிழக பொலிஸார் சா்வதேச பொலிஸாா் உதவியை நாடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 7 மார்ச், 2021

இலங்கைக்கு அங்கீகாரம் வழங்கப்படாத 300,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகளை வழங்கும் சீனா

இலங்கைக்கு  மேலும் 300,000 டோஸ் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகளை  பரிசளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.ஏற்கனவே 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீனா உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இருப்பினும், சினோபோர்ம் தயாரிப்பாளரிடமிருந்து மேலும் சில விவரங்களுக்காக காத்திருப்பதனால், இலங்கையில் இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஒரு
 வார காலத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன 
தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசிக்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.கடந்த 3 ஆம் திகதி சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற 
சந்திப்பின்போது , 600,000 கொரோனா தடுப்பூசியை வழங்க சீனா உறுதியளித்திருந்தது என சீனாவிற்கான இலங்கை தூதுவர் குறிப்பிட்டார்.சீனா உருவாகியுள்ள சினோபோர்ம் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த 56 நாடுகளில் அங்கீகாரம் 
வழங்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 15 ஜனவரி, 2021

வலுவான தீர்மானம் இலங்கைக்கு எதிராக கொண்டு வரவேண்டும் மெக்டொனாக்

எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானத்தை பிரித்தானிய அரசு கொண்டு வர வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் வலியுறுத்தியுள்ளார். 
பிரித்தானியப் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் , மனித உரிமை மீறல்கள் மற்றும் இறுதிக்கட்ட போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 
உட்பட மனித உரிமைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பில் ராஜபக்ஷ சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இவ்வாறானதொரு
 நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் , நீதி மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாக்கும் வகையில் பிரித்தானிய அரசு ஜெனிவாவில் 
செயற்பட வேண்டும். 
ஆகவே இலங்கை விடயத்தில் புதிய தீர்மானமொன்றிக்கான உறுதிப்பாட்டை பிரித்தானிய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். அந்த தீர்மானத்தில் இலங்கையை கண்காணிக்கும் அலுவலகத்தை
 மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் ஸ்தாபித்தல்  என்ற 
விடயம் அமையப்பெற்று ஒரு சிறப்பு பொறிமுறை கொண்டுவரப்பட வேண்டும் 
என குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


திங்கள், 19 அக்டோபர், 2020

நிலச்சரிவில் சிக்கி வியட்நாமில் 22 இராணுவ வீரர்கள் மாயம்

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


குவாங் திரியில் இராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளனர்.


இந் நிலையில் அண்டை மாகாணமான துவா தியென் ஹியூ மாகாணத்தில் 3 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலச்சரிவில் இராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.¨

நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 14 அக்டோபர், 2020

நீங்கள் பழைய ஆடைகளை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும்?

ஆடைகளை எந்த மறுசுழற்சி தொட்டியில் இடுகிறீர்கள் எங்கள் இல்லத்தில், பழைய துணிகளை அவை கிழியும் வரை நாங்கள் அப்புறப்படுத்திடுவதில்லை. அவை கிழிந்தால், அவை அரதக் கந்தல் ஆகும் வரை, அவற்றை வீட்டைத் தூய்மை செய்யப் பயன் படுத்துகிறோம். அரத்தக் கந்தல் ஆனதும் அவற்றை எரித்துவிடுகிறோம். தேவையின்றித் துணிகளை 
வாங்குவதே இல்லை.
தொடர்புடைய கேள்விகள்
சரியான மற்றும் நேர்த்தியான முறையில் உடை அணிவது எப்படி என ஆண்களுக்கு சொல்ல முடியுமா?
ஆடையை நேர்த்தியாக மடிப்பது எப்படி?
பெண்களின் ஆடை‌ உடல் பாகங்களை வெளிக்காட்டும் விதமாக வடிவமைக்கப்படுகிறதே, ஏன்?
ஆடை வடிவமைப்பு பற்றிய புத்தகங்களை பெறுவது எப்படி?
வெள்ளை மற்றும் பிரகாசமாக தோற்றமளிக்க உட்புற ஆடைகளை எப்படி கழுவ வேண்டும்? ஏதாவது சிறப்பு சோப்பு தூள் அல்லது சோப்பு கிடைக்குமா? (பனியன் வெள்ளை நிறமாக தோற்றமளிக்க)
அழகைக் கூட்டும் ஆடைகளைத் தேர்வு செய்வது எப்படி?
பைகள் கொண்ட ஆடைகள் அதிகமாக 
இருப்பதில்லை ஏன்?
பருத்தி (cotton) துணிகளால் செய்யப்பட்ட ஆடைகள் எப்படி 100 ரூபாய்கும் கிடைகின்றது 10,000 ரூபாய்கும் கிடைக்கின்றது? பருத்தியில் 
பல வகைகள் உள்ளதா?
நீங்கள் அணிந்துக் கொண்டிருக்கும் ஆடையைப் பற்றிய எதை விரும்புகிறீர்கள்?
அணிவதற்குக் குறைவாக கவனத்தைக் கவர்கிற நிற ஆடை எது?
உங்களுக்குப் பிடித்த ஆடை முறை எது?
ஆண்கள் அவர்களின் பழைய ஆடைகளை என்ன செய்கிறார்கள்?
மாநிறமாக உள்ள பெண்களுக்கு எந்த நிற 
ஆடைகள் எடுப்பாக இருக்கும்?
பெண்களுக்கு எந்த ஆடைகள் மிகவும் அசௌகரியமாக இருக்கின்றன?
ஆண்கள் எந்த உடை அணிந்தால் பெண்களுக்கு பிடிக்கும்? பெண்கள் எந்த உடை அணிந்தால் ஆண்களுக்கு பிடிக்கும்?

நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 19 செப்டம்பர், 2020

ஈழத்து யுவதி தாயார் யுத்தத்தில் இறந்ததாக போலி மரணச்சான்றிதழ்ம்பலம்

பிரான்ஸில் குடியுரிமை பெறும் நோக்கில், உயிருடன் உள்ள தாய்க்கு மரணச் சான்றிதழ் வழங்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது.புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கிராம சேவகர், மரணவிசாரணை 
அதிகாரி, அதனை ஏற்பாடு செய்தவர் ஆகிய 
மூவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.மூவரும் மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொலீசாரால் நேற்றுமுன்தினம் (16-09-20) கைதுசெய்யப்பட்டிருந்தனர்.சந்தேகநபர்கள், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்கள், தலா இரண்டு இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்
 வழக்கு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தெரியவருவதாவது,
பிரான்ஸில் வசித்து வரும், புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரம், மல்லிகைத்தீவைச் சேர்ந்த யுவதி ஒருவர், பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவரது 
பெற்றோர்கள் போரின்போது உயிரிழந்துள்ளதாக மரண சான்றிதழ் தயாரித்துள்ளார்.யுவதியின் தந்தை 2014 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது 
தாயார் உயிருடன் வழ்ந்து வருகின்றார்.இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு தனது தாய் மற்றும் தந்தை ஆகியோர் இறுதிப் போரில் உயிரிழந்ததாக கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்தை 
பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து யுவதியினால் ஏற்பாடு செய்யப்பட்டவர், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மரணவிசாரணை அதிகாரியிடம் அதனை உறுதிப்படுத்த கோரியுள்ளார். எனினும், போர் நிகழ்ந்த காலப் பகுதியில் தான் அங்கு வாழாத காரணத்தினால் முள்ளியவளையில் உள்ள மரண விசாரணை அதிகாரியிடம் அதனைப் பெறுமாறு
 அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, தாயார் உயிருடன் உள்ள நிலையில் மரணச்சான்றிதழையும், உயிரிழந்த தந்தைக்கு இரண்டாவது மரணச் சான்றிதழையும் பெற்று, அதன் மூலப்பிரதிகள் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற
 தகவலையடுத்து, இது தொடர்பான விசாரணையினை முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு மேற்கொண்ட விசாரணையில் போலியாக மரணச் சான்றிதழ் தயாரித்துள்ளமை 
தெரியவந்துள்ளது.இது தொடர்பில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயல பதிவாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டபோது உயிருடன் உள்ள
 தாய்க்கு மரண சான்றிதழ் வழங்கியுள்ளமையும் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்த ஒருவருக்கு 2009 ஆம் ஆண்டு போரின்போது உயிரிழந்ததாக இரண்டாவது மரணச் சான்றிதழ் வழங்கியமையும் தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த 
கிராம சேவையாளர் ஒருவரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமாதான நீதவானும், மரணவிசாரணை அதிகாரியுமான முள்ளியவளையினை சேர்ந்தவரும், மரண சான்றிதழை கோரிய
 பிரான்சில் உள்ளவரின் சகோதரியும் கைதுசெய்யப்பட்டனர்.சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான வழக்கு விசாரணை 
எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும் நடவடிக்கைக்காக மேலதிக விசாரணைகள் மற்றும் ஆய்வு நடவடிக்கையினை
 முல்லைத்தீவு மாவட்ட விசேடகுற்ற விசாரணைப் பிரிவினர் ஈடுபட்டுள்ளார்கள்.இவ்வாறு பெறப்பட்ட ஆவணங்கள் பிரான்ஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த யுவதிக்கு குடியுரிமை இதுவரை கிடைக்கவில்லை எனத் 
தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 26 நவம்பர், 2018

மாப்பிள்ளை அடிக்கும் கூத்து மணமேடையில் வேறொரு பெண்ணுடன்

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாகும். திருமணத்தின் போது மணமக்கள் மகிழ்ச்சியுடனே இருப்பார்கள்.அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்பு இருவரும் தனக்கு வந்த சொந்தத்தினை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதையும் அவதானித்திருப்போம்.
ஆனால் இங்கு மணப்பெண்ணின் பரிதாபநிலையினை நீங்களே பாருங்க… மணமேடையில் மணமகளை அருகில் வைத்துக்கொண்டு மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். இதனை அவதானித்த மணப்பெண்ணும் எதுவும் பேசாமல்
 பார்த்துக் கொண்டிருக்கிறார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஆங்கிலேயர் தமிழ்ப் பெண்ணை மணந்து தமிழ்நாட்டிலேயே விவசாயத்தில்

நாம் நம் பாரம்பரியத்தை மறந்து பீட்சா, பர்கர் என பன்னாட்டு உணவுகளை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் பிரித்தானியாவை பிறப்பிடமாகக் கொண்ட கிருஷ்ணா, தமிழ் கலாச்சாரத்தின் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் கொண்டு தமிழ் பெண்ணை திருமணம் செய்து தமிழ்நாட்டின் மருமகன் ஆனார். தற்போது புதுச்சேரி அடுத்த
 ஆரோவி பகுதியில் 6 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் மீதும், உணவின் மீதும் தீரா காதல் என்றே கூறலாம்.அந்த காதலால் தன்னுடைய நிலத்தில் விளையும் காய், பழங்களை கொண்டு இயற்கை உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது இயற்கை உணவை விரும்பி சாப்பிடும் வெளிநாட்டவர்கள் ஏராளம்.
இந்த மண்ணை இவர் தெய்வமாக
 பார்க்கிறார்.
தமிழ்நாட்டு மண்ணின் பெருமை குறித்து அவர் கூறுகையில், சென்னையில் தண்ணீர் குடிப்பதற்கு லாரி வருகிறது. இப்படி எத்தனை வருடம் இருக்கமுடியும்.
தண்ணீர் தான் மிகவும் முக்கியம். அதுமட்டுமா எந்த காய்களில் பார்த்தாலும் மருந்து இருக்கிறது. இப்படி இருக்கும் காய்களை சாப்பிடும் போது புற்றுநோய், டையாபடிஸ், உயர் இரத்த அழுத்தம் வரும்.நாம்முடைய இயற்கை வழி பின்னோக்கி சென்றுவிட்டது.
இயற்கை காய்களை சாப்பிடுங்க, தமிழ் கலாச்சாரத்தில் இருக்கும் வாழை பூ, வாழை தண்டு, சுண்டைக்காய் போன்றவை மிகவும் உடலுக்கு நல்லது, அது எல்லாம் சாப்பிடுங்க, நம்முடைய மண் தான் தெய்வம், அதை பார்த்து கொள்ள வேண்டும்.இப்போது நான் என்னுடைய தோட்டத்தில் கிடைக்கும் காய்களை சமைத்து தரும் போது அவ்வளவு ருசி இருக்கும், ஆனால் 
கடைகளில் அது இருக்காது.
மேலும், தற்போது இருப்பவர் நாம் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அது எல்லாம் ஒரு மாயை அவ்வளவு தான் வரும் போகும்.
பிரித்தானியாவில் சாப்பட்டு டேபிளில் பீர் தான் கலாச்சாரம், நான் ஒரு வெள்ளைக்காரம் எனக்கு என்ன தெரியும் என்னை விட தமிழ் நாட்டு மக்களுக்கு நிறைய தெரியும், என்னுடைய மாமனார் விவசாயி, அதை நான் மீட்டு கொண்டு வர முயற்சிக்கிறேன் 
என்று கூறியுள்ளார்.
இவர் மனைவி தற்போது என்ன செய்கிறார், அவர் பெயர் என்ன என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 23 அக்டோபர், 2018

ஆலங்கட்டி மழையால் இத்தாலியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது

இத்தாலியில் ஆலங்கட்டி மழை பெய்த காரணமாக சாலைகள்  முழுதும் பனி மூடிக் காணப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தலைநகர் ரோம், பிசா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை புயலோடு மழையும் தாக்கியது. சாலைகளில் ஆலங்கட்டி மழைப் பொழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பனிக்கட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இறுக்கமாகி பாறை 
போல் மாறியது.
 இதனால் சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களை இயக்க முடியாமல் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இத்தாலிய தலைநகரின் கிழக்குப் பகுதியில் ஆலங்கட்டி மழை அதிகமாக பொழிந்தது. அங்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலைகள் முழுவதும்
 மூடி மறைந்தது.
மேலும் நகரத்தில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டின் மீது பனிக்கட்டி நீர் ஆறு போல ஓடியது. நகரில் பல்வேறு இடங்களில், பேருந்துகள் மற்றும் கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சில சாலைகளில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 
போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. புளோரன்ஸ், பிசா, மிலன் மற்றும் வடக்கு இத்தாலியின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனை சீரமைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக 
ஈடுபட்டு வருகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

சம்பளத்திற்கு எதிராக முறைப்பாடு: செய்து 52,000 டொலர்களைப் பெற்ற பெண்

பணிச்சுரண்டலுக்கு உள்ளாக்கிய முதலாளி மீது மெல்பேர்னைச் சேர்ந்த பூமிகா (வயது 29) முறைப்பாடு செய்ததன் மூலம் 52,000 டொலர்களைப் பெற்றுள்ளார்.
கடந்த 2014 மார்ச் மாதம் மெல்பேர்னில் குடியேறிய குறித்த பெண் மெல்பேர்ன் தென்கிழக்குப் பகுதியிலுள்ள இந்திய பலசரக்குக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.
குறித்த பெண் முழு நேரமாக வேலை செயத நிலையில், மணித்தியாலத்திற்கு 16.50 டொலர்கள் மட்டுமே சம்பளமாக பெற்றதாக தெரிவித்துள்ளார்.
சம்பள பற்றுச்சீட்டு வழங்கப்படாத அதேநேரம் சுப்பர் அனுவேசன் தொகையும் கட்டப்படவில்லை என்றும்அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகவீன மற்றும் வருடாந்த விடுமுறையும் தனக்கு வழங்கப்படவில்லை எனவும் குறித்த பெண் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்ககது.
இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரிடம் கேட்டதாகவும், பின்பு இரண்டரை ஆண்டுகள் குறித்த கடையில் வேலை செய்த பின்பு விலகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
பின்பு அக்கடையின் உரிமையாளர் மீது Fair Work Ombudsman (FWO) மற்றும் ATO-இடம் பூமிகா முறைப்பாடு செய்திருக்கிறார்.
இதையடுத்து கொடுக்கப்படாத சம்பள நிலுவையான 42,000 டொலர்களையும், சுப்பர் அனுவேசன் தொகையாக 10,000 டொலர்களையும் கடை உரிமையாளர் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதவேளை இன்னும் 10,000 டொலர்கள் கடை உரிமையாளர் தரவேண்டும் என்றும் அந்த பணத்தை பெறும் வரை ஓயப்போவதில்லை எனவும் பூமிகா கூறியுள்ளார்.
ணியிடங்களில் நீங்கள் சுரண்டப்படுவதாக உணர்ந்தாலோ அல்லது வேறேதும் சிக்கல்களை எதிர்கொண்டாலோ 13 13 94 என்ற இலக்கத்தில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு Fair Work தெரிவித்துள்ளது.
மொழிபெயர்ப்பு வசதி தேவைப்படும் தருணத்தில் 13 14 50 என்ற இலக்கத்தில் அழைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 27 அக்டோபர், 2017

நீங்கள் பிரிட்ஜில் முட்டை வைத்து சாப்பிடாதீங்க: தீமைகள் இதோ

 .அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, பிரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் மிகுந்த குளிர்ச்சியான இடத்தில் வைத்து முட்டையை பராமரிக்கும் போது, அது பால் போல் திரிந்து கெட்டு போய்விடும்.
பிரிட்ஜில் வைத்த முட்டையின் தீமைகள்?
முட்டையில் ஓடுகளில் சால்மோனெல்லா வகை பாக்டீரியா உருவாகும். இவை பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கும்.
முட்டை ஓட்டில் இருக்கும் சால்மோனெல்லா பாக்டீரியா குளிர்ச்சியான நிலையில் அதிகமாக பெருக்கம் அடைந்து, குடல் மற்றும் வயிறு தொடர்பான நோய்களை ஏற்படுத்தும்.
குறிப்பு
முட்டை பிரஷ்ஷாக இருந்து, அதன் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக் கொண்டிருந்தால், அந்த முட்டையை பிரிட்ஜில் 
வைக்கக் கூடாது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 24 செப்டம்பர், 2016

உங்க வீட்டு பெண்கள் முகநுாலில் இருக்கிறார்களா .?கவனிங்கள்..!!!

உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டாலோ, திருமணம் நடந்து விட்டிருந்தாலோ அல்லது யாருடனாவது தொடர்பில் இருந்தாலோ, உங்களுடைய இணைய வழி செயல்பாடுகளை சற்றே கவனத்துடன் அணுக வேண்டிய தருணம் இதுவாகும்.
ஃபேஸ்புக்குகளில் எந்தவித அறிமுகமும் இல்லாமல் தொடங்கிய பல்வேறு உறவுகளும், விவாகரத்து அல்லது பிரிந்து வாழ்தல் போன்ற நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நீங்கள் ஒரு மகிழ்ச்சியான இணையாக இருந்தாலோ மற்றும் காலம் முழுவதும் இவ்வாறே இணைந்திருக்க விரும்பினாலோ, இங்கே தரப்பட்டுள்ள குறிப்புகளை படித்து, பின்பற்ற வேண்டியது 
அவசியமாகிறது.
தங்களுடைய நண்பர்களுடைய பட்டியலை வைத்திருக்கும் உண்மையான கணக்கை ப்ரெஷ்சாகவும் மற்றும் சுத்தமாகவும் வைத்திருக்கும் பொருட்டாகவும், சில பேர் போலியான அடையாளங்களை கொண்டு கணக்குகளை தொடங்குவார்கள்.
இன்னும் சில பேர் தவறான காரணங்களுக்காக போலியான அடையாளம் கொண்ட கணக்குகளை பயன்படுத்துவார்கள்.
நீங்கள் இவ்வாறு போலி கணக்குகளை பயன்படுத்துபவர்களில் ஒருவராக இருந்தால், உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்.
இந்த வகை கணக்கை அழித்து விட்டு, உங்களுடைய துணைவருக்கு உண்மையானவராக நடந்து கொள்ளுங்கள்.
இந்த வகையான போலி அடையாளங்களை உங்களுடைய துணைவர் கண்டறிய மாட்டார் என்று நினைப்பது, நெடுநாட்களுக்கு நீடித்து இருப்பதில்லை.
உங்களுடைய இனிமையான மண வாழ்க்கை அல்லது உறவை தொந்தரவுக்குள்ளாக்கும் சில நண்பர்களை முகநூல் நட்பிலிருந்து வெளியேற்றுவது நல்லது.
இந்த வகை நண்பர்களிடம் தொடர்பில் இருப்பதை விட, பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கூட தொடர்பு கொள்ளாமல் 
இருப்பது நல்லது.
உங்களுடைய ஆண் நணர்பகளாக இருந்தவர்கள், இப்போதைய மண வாழ்க்கையை சூறையாடும் பகைவர்களாக மாறி விட
 வாய்ப்புகள் உண்டு.
இது ஒரு புத்திசாலித்தனமான அட்வைஸாக இருப்பதற்கு காரணம், பல கணவர்களும், மனைவிகளும் பிரிந்திருக்க காரணமாக இருப்பது வருத்தத்திற்குரிய இந்த வiயான நட்புகளே.
ஆரம்பத்தில், நண்பருடனான பிரிவு உங்களை வருத்தினாலும், பின்நாட்களில் திருமண உறபை பாதுகாத்ததற்காக நீங்கள் 
பெருமைப்படுவீர்கள்.
ஆரோக்கியமான உறவு என்பது துணைவருடன் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை பகிர்ந்து கொள்வது தான். நீங்கள் வெகு விரையில் திருமணம் புரிந்து கொள்வீர்கள் என்றால், உங்களுக்கான அறிவுரை அதீதமாக இரகசியம் காக்க தேவையில்லை என்பது தான்.
நீங்கள் அளவுக்கு அதிகமாக இரகசியம் காத்து நின்றால், உங்களுடைய துணைவரிடம் இருந்து எதையோ மறைக்க முயலுகிறீர்கள் என்பதை அவரும் உணர்ந்து கொள்வார். எனவே, உங்களுக்கு ‘ஓகே’ என்றால் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கூட துணைவருடன் பகிர்ந்து 
கொள்ளுங்கள்.
அதே போல, சில படங்கள் மற்றும் போஸ்ட்-களையும் உங்களுடைய துணைவரிடம் இருந்து மறைப்பதால், தேவையில்லாத சந்தேகங்களை வரவழைத்து, உறவை கெடுத்துக் கொள்வீர்கள். எனவே
 கவனம் தேவை
உங்களுடைய உறவில் நிலையை அனைவருக்கும் தெரியும் வகையில் நீங்கள் காட்டினால், அதாவது உங்களுடைய துணைவருடன் நிச்சயிக்கப்பட்டு விட்டீர்கள் அல்லது திருமணம் செய்யப் போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக காட்டுவதால் நம்பிக்கை கூடுமே தவிர, வேறெந்த ஆபத்துகளும் வருவதில்லை.
எனவே, நாம் ஏன் இதனை மறைக்க வேண்டும்? நம்முடைய உறவை வெளிப்படுத்தி, பெருமை கொள்வோம்!
உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை ஃபேஸ்புக் முழுமையும் பதிவேற்றம் செய்யலாம் என்று நான் அட்வைஸ் கொடுக்க விரும்புகிறேன்.
எனினும், சில படங்களை இவ்வாறு போடுவதால் எந்தவித பிரச்னைகளும் வரப்போவதில்லை.
இவ்வாறு பொதுவான தளங்களில் படங்களை போடுவதன் மூலம், அவருடன் நீங்கள் இருப்பதை விரும்புகிறீர்கள் என்றும், அதற்காக வெட்கப்படவில்லை என்றும் உலகுக்கும், துணைவருக்கும் உணர்த்திடவும்
 முடியும்.
எனினும், நெருக்கமான அல்லது தனிப்பட்ட படங்களை நீங்கள் பதிவிடும் போது கவனமாக இருக்கவும், பின் நாட்களில் உங்களுடைய துணைவரை தர்மசங்கடமான நிலைக்கு இந்த படங்கள் 
தள்ளி விடும்.
இவ்வாறு வித்தியாசமான படங்களை நீங்கள் பதிவிடும் முன்னர், துணைவருடன் ஒருமுறை கலந்து பேசி விடுவது நலம்
ஃபேஸ்புக்கில் உள்ள ‘டைம்லைன்’ பகுதியை வழங்கிய காரணத்திற்காக மார்க் ஸுக்கர்பெர்க்-ற்கு நீங்கள் நன்றி 
தெரிவிக்க வேண்டும்.
ஏனெனில், இந்த டைம்லைன் மூலம் உங்களுடைய துணைவர் உங்களுடைய கடந்த கால வாழ்க்கையை அவராகவே அறிந்து கொள்வார்.
இந்த டைம்லைனில், உங்களுடைய முன்னாள் காதலர்கள், குறும்புத்தனமான கமெண்ட்கள் அல்லது முன்னாள் காதலருடன் எடுத்துக் கொண்ட சில வெளிப்படையான படங்கள் என பல விஷயங்களையும்
 காண முடியும்.
நீங்கள் மணம் செய்து கொள்ளப் போகும் நபர், இந்த படங்களையும், கமெண்ட்களையும் பார்க்க முடியும், இவ்வாறு பார்க்கும் பொது உறவுக்கு அழிவு தரும் என்று நினைக்கும் போஸ்ட்கள், கமெண்ட்கள் மற்றும் படங்களை உடனடியாக அழித்து உங்களுடைய க்ளோசெட்டை சுத்தம் செய்வது நல்லது.
இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட ஃபுரோபைல் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள் என்று காட்ட வேண்டுமே தவிர, நீங்கள் யாராக இருந்தீர்கள் என்று காட்டத் தேவையில்லை..
அன்பு இணைய உறவுகளே இத்தகவல் யார் மனதைபுண்படுத்துவதற்கல்ல  நல்லதே நடக்கும் 
நன்றி!நன்றி!நன்றி!!!  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

வங்கிகளை சட்டவிரோத நடத்தி வந்த 450 பேர் கைத!

சீனாவில் சட்டவிரோத வங்கிகளை நடத்தி வந்த 450 பேரை அந்த நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டிய தொகை, அரசு அதிகாரிகள் பொதுநல நிதியிலிருந்து மோசடி செய்த தொகை போன்றவற்றுக்கு வங்கிச் சேவை அளித்து வந்த அந்த வங்கிகள், 3,000 கோடி டாலர் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 28 ஏப்ரல், 2016

இலங்கைப் பணிப்பெண் நகைகளை திருடியதாக முறைப்பாடு`!

துபாயில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண் ஒருவர், தங்க நகைகளை திருடிய பின்னர், இலங்கைக்கு சென்றுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துபாயின் பொதுமகன் ஒருவர் இந்த முறைப்பாட்டை துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி தாம் வெளிநாடு ஒன்றுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்த போது குறித்த இலங்கை பணிப்பெண், தமது 40 ஆயிரம் திர்ஹாம் பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டதாக 
தெரிவித்துள்ளார்.
பணிப்பெண் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டமையை தமது மகன் தமக்கு அறியத் தந்ததாகவும் துபாயின் பொதுமகன் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

அழகிய நாய் குட்டியை வாங்கி வளர்த்த தம்பதியினர் ?

ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை. அதனால் அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய் குட்டியை வாங்கி வந்தனர், அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர்.
அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டியது.
நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம் கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன் பிறந்தான்.
இப்போதெல்லாம் அந்த குழந்தையுடன் தான் அந்த தம்பதியினர் நேரத்தை செலவிடுகின்றனர் .நாய் இப்போதெல்லாம் தனிமையிலே தன் பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் வளர்த்த நாய்க்கு அந்த குழந்தை மேல் பொறாமை உண்டாயிற்று
ஒரு நாள் அந்த தம்பதியினர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு மாடியில் நின்று பேசி கொண்டு இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து நாயின் சத்தம் கேட்டதும் மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர். படி அருகில் நாய் வாயில் ரத்தக்கறையுடன் நின்று கொண்டு இருந்தது.இதைப் பார்த்ததும் அதன் எஜமானர் ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாயை சுட்டு வீழ்த்தினார்.
பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.குழந்தையின் அருகில் நல்ல பாம்பு இரண்டு துண்டுகளாக கிடந்தது .குழந்தையை காப்பாற்ற அவர்கள் வளர்த்த நாய் அந்த பாம்பை கடித்து போட்டுள்ளது, அந்த பாம்பின் ரத்தக் கறை தான் நாயின் வாயில் இருந்தது என்று அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது.
தங்கள் குழந்தையை காப்பாற்றிய நாயை அநியாயமாக கொன்று விட்டனே என்று கதறி அழுதனர்.
முன்கோபம் முட்டாள் தனத்தில் போய் முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு.
எப்ப நாம ஒரு முடிவு எடுப்பது என்றாலும் நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 29 ஜனவரி, 2016

படகு மூழ்கி 10 குழந்தைகள் உட்பட 24 அகதிகள் பலி

கிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 24 அகதிகள் இறந்தனர். மேலும் சுமார் 11 பேரை காணவில்லை.ஏஜியன் கடற்பகுதியிலிருந்து 10 அகதிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, இராக் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர். ஆபத்தான கடல்பயணத்தில் இவர்களின் படகு விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் துருக்கியில் இருந்து ஏஜியன் கடலில் கிரீஸ் நோக்கி சென்றுகொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று, கிரீஸ் நாட்டின் சாமோஸ் தீவுக்கு அருகில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 24 பேர் 

இறந்ததாகவும் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கிரீஸ் கடலோர காவல்படை தெரிவித்தது. மேலும் சுமார் 11 பேரை தேடும் பணி நடைபெறுவதாக கிரீஸ் கூறியுள்ளது.

24 உடல்களையும் கடலோர காவற்படையினர் அடையாளம் கண்டனர்.
கிரீஸ் நாட்டின் கோஸ் தீவு அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த படகு விபத்தில் 2 குழந்தைகள் உள்பட7 பேர் இறந்தனர். இந்நிலையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் கிரீஸ் வந்துள்ளதாகவும் சுமார் 200 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளதாகவும் ஐ.நா. கூறுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 27 ஜனவரி, 2016

குடியேறுவோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தால் குறையும்!!!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் மொத்த குடியேற்றம் ஒரு இலட்சத்தால் குறைவடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொழில் அனுமதிகளை வழங்க வேண்டும் என குடியேற்ற கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான நகர்வு மொத்த குடியேற்றத்தை குறைக்கும் என்பதுடன், நாட்டிற்குள் வரும் மற்றும் வெளியேறும் மக்களின் எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரம் வரை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டும் என கருதுவோர் இந்த தகவலை
 நிராகரித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் 2017ஆம் ஆண்டின் இறுதிக்குள் சர்ஜன வாக்கெடுப்பை நடத்த பிரித்தானிய அரசாங்கம் 
திட்டமிட்டுள்ளது
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதால் குடியேற்றத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து எந்தவொருவராலும் உறுதியாக கூறமுடியவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>