நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 13 மே, 2022

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) தனியார் ஏர் அம்புலன்ஸ்

சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்புலன்ஸ் சேவைக்கு சொந்தமான SAZ52 என்ற தனியார் ஜெட் விமானம் 11-05-2022.அன்று காலை 9.51 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் 24 மணித்தியாலங்களுக்கு மேலாக விமான நிலைய ஹேங்கரில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள பிரபலமான ராஸ் அல் கைமா விமான நிலையத்திலிருந்து விமானம் வந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ விமானங்களில் தனியார் ஜெட் விமானத்தின் அடுத்த இலக்கு குறிப்பிடப்படாது மற்றும் விமானத்தின் வருகை குறிப்பிடப்படுவதில்லை.
அவசர நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக வேறு நாட்டுக்கு அழைத்துச் செல்ல விமான ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸில் 24 மணி நேரமும் ஏன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது? அது எங்கு செல்ல உள்ளது என்பதும் 
தெரியாத நிலை உள்ளது.
இந்நிலையில், நாட்டை விட்டு தப்பிச் செல்ல ராஜபக்ஷ அல்லது வேறு முக்கிய நபர்களை தனியார் ஆம்புலன்ஸ் ஜெட் விமானத்தில் கொண்டு செல்ல போகப் போகிறர்களா? என கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளதாக முகநூலில் Jeevan Prasad என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக