பிரான்சில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் வரலாற்றில் இல்லாத அளவில் 16 மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், பல முறை பிரான்சில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், வாத்துகள் அதிகம் வளர்க்கப்படும் பகுதிதான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த ஆண்டு முதன்முறையாக பாதிக்கப்பட்ட பிரான்சின் தெற்குப் பகுதியிலிருந்து காட்டுப்பறவைகள் புலம்பெயர்ந்து வந்துள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு பறவைக்காய்ச்சல் அலை உருவாகி, இப்போதுதான் அது முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் பிரான்சில், சுமார் 1,400 இடங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதாக வேளாண்மை அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
அதேவேளை , மார்ச் இறுதியில் பறவைக்காய்ச்சல் உச்சம் தொட்ட நிலையில், இப்போது தொற்று பரவும் வேகம் குறைந்து வருவதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.











0 கருத்துகள்:
கருத்துரையிடுக