நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஓமானில் இருக்கும் இலங்கை பெண் பாரிய மனித கடத்தலில் ஈடுபட்டுவந்தார்

ஓமானில் உள்ள இலங்கை பெண் ஒருவர், பாரிய மனித கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர் என்று குற்றம் 
சுமத்தப்பட்டுள்ளார்.
இந்திய உத்தர பிரதேசத்தில் உள்ள காவல்துறையினர், பல நாடுகளில் பரவியிருக்கும் ஒரு, பாரிய மனித கடத்தல் தொடர்பை 
கண்டுபிடித்துள்ளனர்.
இதன்மூலம், ஓமன், கட்டார் போன்ற வளைகுடா நாடுகளில் நல்ல வேதனத்துடன் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 24 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்று பிரஸ் டிரஸ்ட் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற பகுதிகளான பஞ்சாப், கோவா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து சென்றவர்கள்.
அதேநேரம் இலங்கை, நேபாளம், பங்காளதேஷ் , பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

இத்தாலியில் வீடொன்று ஒரு யூரோவுக்கு விற்பனை (இலங்கை நாணயம் 232 ரூபா)

இத்தாலியில் வீடொன்று 232 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து 70 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மென்சா என்கிற நகரிலேயே இவ்வாறு ஒரு யூரோவுக்கு (இலங்கை நாணய மதிப்பில் 232 ரூபா) வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன
1968 ஆம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பின் மக்கள் மென்சோ நகரில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர். இதனால் மென்சோ நகரத்தில் மக்கள் தொகை கணிசமான 
அளவு குறைந்துள்ளது.
இதையடுத்து இந்த நகரில் மீண்டும் மக்கள் அதிகளவில் குடியேற வேண்டும் என்பதற்காக, இத்தாலி அரசாங்கத்தினால் அங்குள்ள வீடுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து அந்நகரின் மேயர் கிளாடியோ ஸ்பெர்டி தெரிவிக்கையில், ”வீடுகளின் விற்பனைக்கான விண்ணப்பங்கள் 28 ஆம் திகதியுடன் முடிவடையும். தற்போது ஒரு சில வீடுகள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
நகரில் இருக்கும் கைவிடப்பட்ட அல்லது எவரும் குடியேறாத பல வீடுகள் எதிர்காலத்தில் விற்பனை செய்யப்படும்
எனக் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கம் விலை சில தினங்களாக குறைந்துவந்த நிலையில் திடீரென மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதன்படி சர்வதேச சந்தையில் கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றத்தினை கண்டு வருகின்றது
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை.18-08-2021. இன்று 1794.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.
ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கடந்த வார இறுதியில் 1763.50 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி முடிவடைந்திருந்தது.
இதேவேளை 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று யாழ்ப்பாணத்தில் ரூபா.123,000 வரையில் விற்பனையாகி வருகின்றது.
அத்துடன் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபா.112,000 வரையில் விற்பனையாகி உள்ளமை கூறத்தக்கது.
எவ்வாறாயினும் நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையிலேயே இருந்து வருகின்றது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



கபூல் விமானத்தில்இருந்து இருவர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து இருவர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான டுவிட்டர் காட்சிகள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில், அது கபூல் விமான நிலையத்திலிருந்து விமானமொன்று உயர எழும்போது, அதிலிருந்து இருவர் தவறுதலாக வீழ்வதை 
வெளிக்காட்டியுள்ளது
தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற, காபூலில் அமைந்துள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.விமான நிலையத்தின் வளாகத்தில் மக்கள் திரண்டதால், அமெரிக்கப் படைகள் வான் நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 9 ஆகஸ்ட், 2021

பெரும் ஆபத்தாம் இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி எரிமலை வெடித்ததால்


இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி என்ற எரிமலை அடுத்தடுத்து 7 தடவை வெடித்துள்ளதால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி என்ற ஆபத்தான எரிமலை ஜாவா தீவில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவில் 120 எரிமலைகள் 
இருக்கின்றன.
அதில் இது முக்கியமானதாகும். இந்த எரிமலையில் கடந்த சில நாட்களாக புகை கிளம்பி வந்தது. 08-08-2021.அன்று  திடீரென வெடித்து சிதறியது.
அடுத்தடுத்து 7 தடவை எரிமலை லாவா குழம்புகள் 
வெடித்து வெளியேறின.
இதனால் ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு புகை மூட்டமாக காட்சி அளித்தது. அருகில் உள்ள கிராமங்களுக்குள் சாம்பல்கள் புகுந்தன.
இதனால் எந்த நேரத்திலும் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
2010-ம் ஆண்டு இந்த எரிமலை வெடிப்பில் 350 பேர் பலியானார்கள். இதன் அருகே பழங்கால நகரம் யோக்யாத்ரா இருந்தது.
இந்த எரிமலை வெடித்து அந்த நகரமே அழிந்த போனதும் 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 4 ஆகஸ்ட், 2021

செக்க சிவந்த நிலா அமெரிக்க வானில் தோன்றிய அதிசயம்

அமெரிக்காவில் செக்கச் சிவந்த நிறத்தில் தோன்றிய நிலவை அதிகளவிலான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர் வாஷிங்கடனில் உள்ள வானுயர 
கட்டிங்களுக்கு பின் தோன்றிய நிலா சிவந்த நிறத்தில் காட்சி அளித்தது. முழு நிலவை பார்த்து ரசித்த மக்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் 
எடுத்து மகிழ்ந்தனர்
மேலும் ஒரு தரப்பினர் பற்றி எரியும் காட்டுத் தீயை பிரதிபலிக்கும் பிம்பமாக முழு நிலா சிவந்து காட்சியளித்ததாக 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>