நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 12 மே, 2026

சீன நிறுவனம் உலகின் அதிவேக மனித ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது

 

சீன நிறுவனம் உலகின் அதிவேக மனித ரோபோ போல்ட்டை ஜெஜியாங் பல்கலைக்கழகம் மற்றும் ஷாங்காய் ரோபாட்டிக்ஸ் நிறுவனமான ஜிங்ஷி டெக்னாலஜி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ரோபோ வினாடிக்கு 10 மீற்றர் (10 m/s) வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்துள்ளது. இது ஒரு மனித உருவ ரோபோ எட்டியுள்ள 
அதிகபட்ச வேகமாகும்.
175 சென்டிமீட்டர் உயரமும், 75 கிலோகிராம் எடையும் கொண்ட இந்த ‘போல்ட்’ ரோபோ, மனிதர்களைப் போன்றே முழு உருவ அமைப்பைக் 
கொண்டுள்ளது.
ஏற்கனவே நான்கு கால்களில் ஓடும் ரோபோவை உருவாக்கி சாதனை படைத்த சீனக் குழுவினர், தற்போது இரண்டு கால்களில் ஓடும் இந்த அதிநவீன ரோபோவை உருவாக்கி ரோபோடிக்ஸ் துறையில் மைல்கல் 
எட்டியுள்ளனர்.
சிக்கலான நிலப்பரப்புகளில் வேகமாக இயங்குவதற்கும், எதிர்காலத்தில் பல்வேறு மனிதப் பணிகளுக்கு உதவுவதற்கும் இத்தகைய அதிவேக ரோபோக்கள் பயன்படுத்தப்படலாம் என 
எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவியல் துறையில் சீனாவின் இந்த கண்டுபிடிப்பு, மனித உருவ ரோபோக்களின் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தொழில்நுட்ப ஆய்வாளர்கள்
 கருதுகின்றனர்.
உலகின் அதிவேக மனித ரோபோ போல்ட்டை ஜெஜியாங் பல்கலைக்கழகம் மற்றும் ஷாங்காய் ரோபாட்டிக்ஸ் நிறுவனமான ஜிங்ஷி டெக்னாலஜி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ரோபோ வினாடிக்கு 10 மீற்றர் (10 m/s) வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்துள்ளது. இது ஒரு மனித உருவ ரோபோ எட்டியுள்ள 
அதிகபட்ச வேகமாகும்.
175 சென்டிமீட்டர் உயரமும், 75 கிலோகிராம் எடையும் கொண்ட இந்த ‘போல்ட்’ ரோபோ, மனிதர்களைப் போன்றே முழு உருவ அமைப்பைக் 
கொண்டுள்ளது.
ஏற்கனவே நான்கு கால்களில் ஓடும் ரோபோவை உருவாக்கி சாதனை படைத்த சீனக் குழுவினர், தற்போது இரண்டு கால்களில் ஓடும் இந்த அதிநவீன ரோபோவை உருவாக்கி ரோபோடிக்ஸ் துறையில் மைல்கல்
 எட்டியுள்ளனர்.
சிக்கலான நிலப்பரப்புகளில் வேகமாக இயங்குவதற்கும், எதிர்காலத்தில் பல்வேறு மனிதப் பணிகளுக்கு உதவுவதற்கும் இத்தகைய அதிவேக ரோபோக்கள் பயன்படுத்தப்படலாம் என
 எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவியல் துறையில் சீனாவின் இந்த கண்டுபிடிப்பு, மனித உருவ ரோபோக்களின் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கருதுகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 26 மார்ச், 2026

பெருந்தொகை சட்டவிரோத புகையிலை கனடாவில் பறிமுதல்

கனடாவின் புளூ வாட்டர் பாலம் எல்லைச் சாவடியில் இடம்பெற்ற பெரியளவிலான பறிமுதல் நடவடிக்கை, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்டாரியோ மாகாணத்தின் சார்னியா நகரிலுள்ள பாயிண்ட் எட்வர்ட் நுழைவுத் துறையில் கடந்த 7 நாட்களில் 4.5 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள சட்டவிரோத புகையிலைப் பொருட்கள் மற்றும் நிக்கோட்டின் வேப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத பொருட்கள் அமெரிக்காவில் 
இருந்து கனடாவிற்குள் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டிற்குள் சட்டவிரோத பொருட்கள் நுழைவதைத் தடுக்கவும், ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றவியல் வலையமைப்புகளை 
முறியடிக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html