நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 29 ஜூலை, 2017

ஐந்து லட்சம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற வல்வைத் தமிழன்.!!

பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள்
பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருநாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் (தனலக்ஷ்மி) தம்பதிகளின் செல்வப்புதல்வன்   குறிஞ்சிகன்
 ஒன்பது வயது  
இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார். அங்கு பிரித்தானியா எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான
 பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளி  அமைப்பை வடி
வமைத்திருந்தார்.
அதனால் இவரது பாடசாலை முதலாவது இடத்தைப் பெற்று 150,000 பெறுமதியான பரிசினைத் தட்டிக்கொண்டது. இளைய தலைமுறையினரிடையே எரிவாயு சேமிப்பு, பசுமை பேணல் என்பன சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இங்கு ஐந்நூறுக்கு மேற்ப்பட்ட பாடசாலைகள் பங்கு பங்குபற்றியிருந்தன . ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முழுமையாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
அவர்களில் ஆறு பேர் முதற்சுற்றில் தெரிவு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் இவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது இச்சாதனையால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதன் காரணமாக எம்தமிழ் சமூகமும் பெருமைகொண்டு குறிஞ்சிகனை வாழ்த்துகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 25 ஜூலை, 2017

கர்ப்பிணி சிறுமியை திருமணம் செய்த 13 வயது சிறுவன்

சீனாவில் 13 வயது சிறுவனுக்கும், 13 வயது கர்ப்பிணி சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது.
Hainan மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கும், அதற்கு காரணமாக 13 வயது சிறுவனுக்கும் அந்த கிராம மக்கள் ஒன்றுகூடி திருமணம் செய்து 
வைத்துள்ளனர்.
இந்த கிராமத்தில் குழந்தைகள் திருமணம் என்பது வழக்கமாக நடந்து வருகிறது என்று குழந்தைகள் தொண்டு நிறுவன அமைப்புகள் குற்றம் சாட்டினாலும், இது எங்களுடைய பாரம்பரிய பழக்கம், ஒரு பெண் பருவம் அடைந்த பின்னர் அவளுக்கு திருமணம் செய்து வைப்பதில் எந்த தவறும் இல்லை என இந்த கிராம மக்கள் கூறி வருகின்றனர்.
மேலும், இந்த ஜோடிகள் முன்னரே ஒன்று சேர்ந்துவிட்டாலும், முறையாக இவர்கள் திருமணம் பதிவாகவில்லை. அதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இவர்களது பெற்றோர்
 தெரிவித்துள்ளனர்.


வியாழன், 13 ஜூலை, 2017

பிராந்தியத்திற்கு பேராபத்து லண்டனை விட நான்கு மடங்கு பெரிதான பனிப்பாறை உடைவு!

உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கண்டம் அண்டார்டிக்கா. புவியின் தென்முனையில் இந்த கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.
புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்வுகூடங்கள் மட்டுமே இருக்கின்றன.
புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகி வருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவது
 குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்கு அண்டார்டிக்காவில் அமைந்துள்ள லார்சன் சி பனியடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிளவால், பனிப்பாறை ஒன்று பிரிந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், பனிப்பாறையானது முழுவதுமாக உடைந்து பிரிந்து விட்டது நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம்
 உறுதியாகியுள்ளது.
5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட இந்த பனிப்பாறை லண்டனை விட நான்கு மடங்கு பெரியதாகும். இந்த பனித் தகர்வால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

​அண்டார்ட்டிக்காவின் வடக்கில் உள்ள பனியடுக்கான லார்சன் ஏ மற்றும் லார்சன் பி பகுதிகளில் இதுபோன்ற பனித் தகர்வுகள் ஏற்பட்டதால், அவை முற்றிலுமாக நொறுங்கிப் போயின. இதேபோன்று லார்சன் சி பகுதியிலும் நிகழுமோ என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

பனியடுக்கு உடைந்தால், இதே போன்ற உடைப்புகள் அண்டார்டிக்கா தீபகற்பம் முழுவதும் தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.

உலக வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், நமது பூமியானது ஒரு பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை இந்த பனித்தகர்வு நமக்கு காட்டுகிறது.

நாங்கள் கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்வை கண்காணிக்கின்றோம். இறுதி சில கிலோமீற்றர் பனிப்பாறை வெடிப்பதற்கு எடுத்து கொண்ட காலம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக Swansea பல்கலைக்கழகத்தின் Adrian Luckman என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இந்த தாக்கத்தை தீவிரமாக கண்காணிக்கின்றோம். எனினும் இறுதியில் மிதக்கும் பனிப்பாறை தோற்றமே இந்த பனிப்பாறையின் விதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படாத ஒரு இயற்கை நிகழ்வு ஆகும் என Martin O’Leary என்பவர் தெரிவித்துள்ளார். எனினும் இது மிகவும் பாதிக்கக்கூடிய நிலையில் உள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




வெள்ளி, 7 ஜூலை, 2017

திடீர் அதிகரிப்பு யூரோவுக்கு எதிராக பிரித்தானிய பவுண்டின் பெறுமதி

யூரோவுக்கு எதிராக பிரித்தானிய பவுண்டின் பெறுமதி இன்றைய தினம் அதிகபட்ச உயர்வை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் கொள்கை நடவடிக்கைகளின் மீதான புதிய நெருக்கடிக்கு மத்தியில் பவுண்ட் உயர்வை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜுன் 20ம் திகதிக்கு பின்னர் யூரோவுக்கு எதிராக பவுண்ட அதிகபட்ச பெறுமதியை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இன்று காலை மேற்கொள்ளப்பட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிட்ட கருத்துக்களினால் யூரோவின் பெறுமதி பாதிக்கப்பட்டு, பவுண்ட் வலுவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று சில குழப்பங்களை எதிர்கொண்ட பிறகு, இன்று காலை ஒரு பவுண்டின் பெறுமதி சுமார் 1.1415 யூராவாக பதிவாகியுள்ளது.
தற்போது பவுண்டின் பெறுமதி 1.1412 யூரோவாக உள்ளது. நேற்றுடன் ஒப்பிடும் போது 0.17 சதவீதம் அதிகரித்துள்ளது.
முந்தைய ப்ரெக்ஸிட் பரிமாற்றத்தின் போது பவுண்டின் பெறுமதி 1.1389 யூரோவாக காணப்பட்டமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 2 ஜூலை, 2017

சுவெற்றா நகரில் இணுவையூர் ஒன்றியத்தின் ஆண்டுவிழா 2017

யேர்மனி சுவெற்றா நகரில் இணுவையூர் ஒன்றியத்தின் 2 வது ஆண்டுவிழா (2017)சிறப்பாக பல்சுவைக்கலை நிகழ்வுகளுடன்
 இனிதே நடந்தேறியுள்ளது இளையோர் நெறிப்படுத்தி பல்சுவை குரலிசை ,நடனங்கள், பேச்சுக்கள், கவிதைகள் என சிறப்புற்ற நிகழ்வாக சிறந்து நின்றது வாழ்த்துக்கள்
நிலாவரை.கொம் செய்திகள் >>>