நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 24 டிசம்பர், 2013

சூடானுக்கு இரகசியமாக இலங்கை இராணுவம்


தென் சூடான் நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் அங்கே உள்நாட்டுப் போர் வலுவடைந்துள்ளது. தற்போது அது பூதாகரமாக எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ளது. இன் நிலையில் அன் நாட்டில் சுமார் 75 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களை இலங்கைக்கு மீட்டுக்கொண்டுவரவேண்டும் என்று இலங்கை அரசு கூறிவந்தது. எகிப்த்து நாட்டு அதிகாரிகளுன் இலங்கை அதிகாரிகள் இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதனையடுத்து, இலங்கையர் சிலரை எகிப்த்தினூடாக தென் சூடானுக்கு அனுப்பி அங்கே சிக்கியுள்ள 75 இலங்கையர்களை மீட்க்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசு இந்த 75 பேருக்காகவா இவ்வாறு செய்கிறது என்று கேட்டால் அது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. சாதாரண கூலி வேலைசெய்யும் இந்த 75 பேரையும் மீட்க்க இலங்கை இவ்வாறு செய்யுமா என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பாக சில இரகசிய தகவல்கள் கொழும்பில் இருந்து கசிந்துள்ளது. அதாவது நாடு கடந்த தமிழீழ அரசு, மற்றும் ஏனைய சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தென் சூடான சுதந்திரம் அடைந்த பின்னர் அன் நாட்டு அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு, தமிழர்களுக்கு உதவுமாறு கோரிவந்தது. இதனால் தென் சூடான் என்னும் புதிய நாடு ஈழத் தமிழர்கள் பக்கம் திரும்பிவிடும் என்று இலங்கை அரசு எண்ணியது.
இதன் காரணமாக இலங்கை அரசு சில முக்கிய சிங்கள இராஜதந்திரிகளை அன் நாட்டுக்கு அனுப்பி, லாபி செய்ய வைத்தது. அவர்களே தற்போது அங்கே சிக்கித் தவிக்கிறார்கள். இந்த 75 பேரில் குறைந்தது 4 இலங்கை இராஜதந்திரிகள் அடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர்களை பாதுகாப்பாக மீட்டு வர அதிகாரிகள் என்றபோர்வையில், இலங்கை அதிரடிப்படையினர் எகிப்த்துக்கு அனுப்பப்பட உள்ளதாக மேலும் அறியப்படுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !

திங்கள், 23 டிசம்பர், 2013

நாடக வடிவில் கலக்க வருகிறது ஹாரி பாட்டர்


இங்கிலாந்தை சேர்ந்த ஜே.கே.ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் என்ற நாவல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.
ஹாரி பாட்டரில் 7 தொகுப்புகள் வரை எழுதிய ரௌலிங் இதற்கு மேல் இந்த தொடரை எழுதப் போவதில்லை என்று அறிவித்து விட்டார்.

எனவே இதனை நாடகமாக நடத்துவதற்கு ஏராளமானோர் அவரை அணுகியுள்ளனர்.
இந்நிலையில் விருது பெற்ற நாடகத் தயாரிப்பாளர்களான சோனியா பிரைட்மேன் மற்றும் கோலின் கேலண்டர் ஆகியோருடன் இணைந்து புகழ்பெற்ற ஹாரி பாட்டர் கதை வடிவங்களை நாடகமாக இயக்கப் போவதாக ரௌலிங் நேற்று தெரிவித்துள்ளார்.

யுகே தியேட்டர் எனப்படும் இந்த நிறுவனத்திருடன் தயாரிக்கப்படும் நாடகம் ஹாரி பாட்டர் ஹோக்வர்ட் பள்ளிக்கு வருவதற்குமுன் அனாதையாக இருந்த காலகட்டத்தையும், அவர் கடத்தப்பட்ட விதத்தையும் சித்தரிக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த நாடகத்தில் ரௌலிங் இணை தயாரிப்பாளராகப் பங்குபெறுகின்றார், ஆனால் வசனங்களை அவர் எழுதவில்லை என்று கூறப்படுகின்றது.

இதற்கான வசனகர்த்தாவையும், இயக்குனரையும் தேர்வு செய்யும்பணி தற்போது தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் இந்த நாடகத் திரையாக்கம் வரும் 2015-ல் அரங்கிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சூடானில் பதற்றம் அதிகரிப்பு - இலங்கையர்களை திருப்பி அழைக்க!!

சூடானில் பதற்றம் அதிகரிப்பு - இலங்கையர்களை திருப்பி அழைக்க!! 
தென்சூடான் நாட்டிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சூடானில் இன மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

கோரிக்கை விடுத்துள்ளது. தென்சூடானில் இலங்கை பணியாளர்கள் 75 பேர் வரையில் பணியாற்றுகின்ற நிலையில் அவசியம் ஏற்படில் அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் துணை ஜனாதிபதி ரீக் மஷார் தன்னை பதவியிலிருந்து கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுவதாக ஜனாதிபதி சல்வா கீயர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அங்கு கடந்த ஞாயிறு முதல் நடந்துவரும் இன வன்முறைகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
 

சனி, 21 டிசம்பர், 2013

காதலர் தின ராட்சதனை மடக்கிய பிரான்ஸ் பொலிசார்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொடர் கொள்ளைகாரன் பிரான்ஸ் பொலிசாரிடம் சிக்கியுள்ளான்.
இத்தாலியை சேர்ந்த கேலியாரே என்பவன் “கிரிமினல் மனநோயாளி”.இவன் கடந்த 1980ம் ஆண்டு 3 விலைமாதுக்களை கொன்று மற்றொருவரை காயப்படுத்தினான்.
இதனடிப்படையில் இவன் பல வருடங்கள் மருத்துவமனையில் கிரிமினல் மனநோயாளிகளின் வார்டில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டான்.

இதனைதொடர்ந்து கடந்த 1990ம் ஆண்டு அம்மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய இக்கொலைகாரன் தன் பெண் நண்பர் ஒருவரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பித்துள்ளார்.
இதுகுறித்து அன்ஸா என்ற செய்திநிறுவனம் விடுத்த அறிக்கையில், இத்தாலியை சேர்ந்த கேலியாரே என்ற நபர் சைக்கோ கொலைகாரன் ஆவான். இவன் தொடர் கொலை செய்வது மட்டுமல்லாது

கொள்ளை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல் போன்ற பல்வேறு குற்றங்களை செய்த குற்றவாளி என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் கண்ணில் மண்ணை தூவ எண்ணிய கேலியாரே இத்தாலிய சிறையிலிருந்து தப்பி வந்து பிரான்ஸிலுள்ள “பிரெஞ்சு ரிவேரியாவில்” பதுங்கியுள்ளான்.
ஆனால் இத்தாலிய பொலிசார் அளித்த தகவலின் பெயரில் பிரெஞ்சு பொலிசார் இவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் இத்தாலிய ஊடகங்கள் இக்கொலையாளியை “வேலண்டைன் சீரியல் கில்லர்” (காதலர்தின தொடர் கொலைகாரன்) என்றும் ”வேலைடைன்ஸ் டே மான்ஸ்டர்” (காதலர் தின ராட்சதன்) எனவும் வர்ணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 19 டிசம்பர், 2013

பிரித்தானிய பாடகருக்கு 35 வருட சிறை பாலியல் துஷ்பிரயோக வழக்கில்!!

 இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த ராக் இசைக்குழு லாஸ்ட்புராபெட்ஸ் என்பதாகும். இந்த இசைக்குழுவின் பாடகர்களில் ஒருவரான இயன் வாட்கின்ஸ்(36) சிறுவர் பாலியல் குற்றங்களுக்காக நேற்று 35 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். இவர் மீது மொத்தம் 13 வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இவருடன் இரண்டு குழந்தைகளின் தாய்மார்களும் இந்தக் குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இவர்கள் அனைவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
   
தான் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரியும் கடந்த 28 வருடங்களில் இதுவே தன்னை மிகவும் பாதித்த வழக்காகும் என்று தெற்கு வேல்ஸ் பகுதியின் மூத்த காவல்துறை அதிகாரியும், துப்பறியும் நிபுணருமான பீட்டர் டோய்லே தெரிவித்துள்ளார். இதுதவிர ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் இதுபோன்ற குற்றங்களில் இயன் வாட்கின்ஸ் ஈடுபட்டுள்ளாரா என்பதையும் ஆராய்ந்து கொண்டிருப்பதாக இவர் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட இசைத்தட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்திருந்த இந்தக் இசைக்குழு வாட்கின்ஸ் மீது சுமத்தப்பட்ட குற்றத்தினால் கடந்த அக்டோபர் மாதம் பிரிந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது
 

திங்கள், 16 டிசம்பர், 2013

லஞ்சத்தில் மடங்கும் நாராயண் சாய் வழக்கு: குற்றவாளிகள் கைது

 பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாராயண் சாயின் மீதான வழக்கை பலவீனப்படுத்த வலியுறுத்தி லஞ்சம் கொடுக்க வந்த அவரது ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நாராயண் சாயின் வழக்கை வவிசாரித்து வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வந்த அவரின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யயப்பட்டனர். அவர்களிமிடருந்த 5 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் தங்கள் தகவலில், இப்பணத்தை அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கும், மருத்துவர்களுக்கும், நீதித்துறையை சார்ந்தவர்களுக்கும் வழங்க முன்வந்ததாக குறிப்பிட்டுள்ளது.
குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரி சி.கே.கும்பானியும் நாராயண் சாயின் ஆதரவாளர்களுடன் கைது செய்யட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

நாராயண் சாயின் கூட்டாளியான உதய் சாங்காணியிடமிருந்து ரூபாய் 1 கோடியும், சூரத்திலுள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கேத்தன் படேலிடமிருந்து ரூபாய் 4 கோடியும் கைப்பற்றப்பட்டதாக குற்றப்பிரிவு துணை ஆணையர் ஷோபா புட்டாடா தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 29 நவம்பர், 2013

உலகெங்கும் உள்ள தமிழாசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு


உலகெங்கும் உள்ள பல நாடுகளில் தமிழ் மொழியை கற்பித்து வரும் தமிழாசிரியர்களின் நலன் கருதி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஒரு டிப்ளோமா கற்கை நெறியை தமிழ் நாட்டின் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தோடு இணைந்து ஆரம்பித்துள்ளது.

உலகெங்கும் தமிழ் கற்பித்தலில் ஆர்வமுடைய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் ஆகியோர் மேற்படி கற்கை நெறியில் உடனடியாக இணைந்து எதிர்காலத்தில் ஒரு தகுதி வாய்ந்த தமிழாசிரியராகும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளுமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில், சென்னைக்கு அருகில் உள்ள மிகவும் பிரபலமான எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தோடு இணைந்தது முன்னெடுக்கும் அரிய வாய்ப்பு இது.முழுக்க முழுக்க புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ச்சிறார்கள், தமிழ்க் கல்வியை இலகுவாக பயிலவும், தமிழைப் பிழையின்றி பேசவும், படிக்கவும், எழுதவும் இப்பாடநெறி உதவும்.

அடிப்படை தமிழ் இலக்கணம், மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் இலக்கிய வரலாறு அத்துடன் கணனித் தமிழும், இணைய வழிக் கல்வியும் முக்கிய விடயமாகும்.
மேற்படி டிப்ளோமா கற்கை நெறியில் இணைந்து கொள்ளுவதற்கு தேவையான தகைமைகள் பின்வருமாறு அமைகின்றன.

இலங்கையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருந்தால் இந்தப் பாடத்திட்டத்தில் நீங்கள் இணையலாம்.

முழுக்க முழுக்க புதிதாக எழுதப்பட்ட பாடத்திட்டம். புலம் பெயர் சமூகத்தில் வாழும் தமிழ்ச் சிறார்கள் இரண்டாவது, மூன்றாவது மொழியாக தமிழ் மொழியை படிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் இலகுவாக படிப்பதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட முதலாவது பாடத்திட்டம்.

இந்த கற்கை நெறியை படித்து முடிப்பவர்கள் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். தற்போது இலங்கை, இந்தியாவில்

இருப்பவர்களும் இப்பயிற்சி நெறியை ஆரம்பிக்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த டிப்ளோமா கற்கை நெறியில் சேர ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை விண்ணப்பிக்குமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளி, 22 நவம்பர், 2013

58 இலட்சம் கி.கிராம் நிறையுடன் நகர்ந்த வாகனம் : பிரித்தானியாவின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து




 

 

     பிரித்தானியாவில் சுமார் 58 இலட்சத்து 598 கிலோ கிராம் நிறையுடைய பாரிய ஜெனரேட்டர் ட்ரான்ஸ்போமர் ஒன்று வீதி வழியாக சரக்கு வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

 இது பிரித்தானியாவின் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து என கூறப்படுகிறது.

100 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமானதுமான ட்ரெய்லரில் (சுமார் 10 பயணிகள் பஸ்ஸுக்கு சமமானது) இந்த ட்ரான்ஸ்போமர் டிட்கொட் மின்சார நிலையத்திலிருந்து மணிக்கு 4 மீற்றர் வேகத்தில் பிரிஸ்டலிலுள்ள அவொன்மௌத் டொக்ஸுக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது.

                            

                              

அதிகூடுதலாக மணித்தியாலத்துக்கு 6.44 கிலோமீற்றர் எனும் வேகத்தில் மட்டுமே சென்ற இப்போக்குவரத்துக்கு 2 நாட்கள் எடுத்துள்ளது. இத்திட்டத்தினை சரக்கு போக்குவரத்து வல்லுநர்கள் அறுவர் இணைந்து 9 மாதங்களாக திட்டமிட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் பிரிஸ்டலையடைந்த இந்த ட்ரான்ஸ்போமரை அங்கிரிருந்து கடல் வழியாக கொட்டம் மின்சார நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டவுள்ளது.

இந்த ட்ரான்ஸ்போமர் ஒக்ஸ்போர்ட்ஷயரிலுள்ள டிட்கொட் மின்சார நிலையத்தில் 43 வருடங்களாக பயன்படுத்தப்பட்டதாகும். 13 மைல் தூர பயணத்தில் சிறிய கோளாறு ஏற்பட்ட போதிலும் நெரிசல்களை எதிர்கொண்டு பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் -
 

சச்சினினின் பிரியாவிடை பேச்சில் எனது பெயரும் இடம்பெற்றிருக்கலாம் -


சச்சின் டெண்டுல்கரின் பிரியாவிடை பேச்சில் எனது பெயரும் இடம்பெற்றிருக்கலாம் என தான் விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் கம்ப்ளி கவலை வெளியிட்டுள்ளார்.

பாடசாலைக் கிரிக்கெட்டில் கம்பளியும் (349) சச்சினும் (326) இணைந்து ஆட்டமிழக்காமல் 664 ஓட்டங்களைப் பெற்றனர். இதனைத் தொடர்ந்தே சச்சினும் கம்பளியும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார்.

இருப்பினும் சச்சின் பெற்ற இடத்தினை கம்ப்ளியால் தொடர்ந்து பெறமுடியாதது துரதிஷ்டமே. இந்நிலையில் அண்மையில் சச்சின் பெரும் புகழுடன் தனது 200ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற சச்சின் டென்டுல்கரின் பிரியாவிடை பேச்சு பலரையும் மனமுருக வைத்தது.

ஆனால் சச்சினின் சிறுவயது நண்பர் கம்ப்ளியை ஆழமாக கவலையடைச்செய்துள்ளது.

இது குறித்து வினோத் கம்ப்ளி கூறுகையில், சச்சின் பிரியாவிடைப் பேச்சில் எனது பெயரும் இடம்பெற்றிருக்கலாம் என நான் விரும்புகிறேன். ஏனெனில் குறைந்தது எங்களது உலக சாதனை இணைப்பாட்டம் குறித்து குறிப்பிடுவார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஏனெனில் அங்கிருந்துதான் நாங்கள் ஆரம்பித்தோம். அது எமது எதிர்காலத்தை திருப்பிப்போட்ட இன்னிங்ஸ். உண்மையில் நான் மிகவும் கவலையடைந்தேன் என தொலைக்காட்சி சனல் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

புதன், 13 நவம்பர், 2013

பயணத்தை தொடங்கும் ஒரு கிரகத்தை போல மங்கல்யான்


செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட மங்கல்யான் திட்டமிட்டபடி வெற்றிகரமாக 1,20,000 கி.மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை

பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன்பின் கர்நாடக மாநிலம் ஹசனை அடுத்த பையலாலு என்ற கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, தொலையுணர்வு சாதனங்கள் மூலம் மங்கல்யான் விண்கலத்தின் மோட்டார் 3 முறை இயக்கப்பட்டது. இதனையடுத்து நீள்வட்ட சுற்றுபாதையில் 71,636 கி.மீட்டர் உயரத்திலும் பூமியில் இருந்து குறைந்தபட்ச தூரமாக 269 கி.மீட்டர் உயரத்திலும் பறந்தவாறு மங்கல்யான் சுற்றி வந்தது.

இந்நிலையில் 4வது முறையாக மங்கல்யான் விண்கலத்தை உயர்த்தும் முயற்சி தொழில்நுட்ப காரணங்களால் நேற்று பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இன்று காலை 5 மணி 3 வினாடிக்கு மங்கல்யானில் உள்ள லேம் மோட்டாரை 303 வினாடிகளுக்கு விஞ்ஞானிகள் இயக்கி பின்னர் நிறுத்தினர். இதன் மூலம் ஏற்கனவே திட்டிமிட்டப்படி பூமியிலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் மங்கல்யான் நிறுத்தப்பட்டது. இறுதியாக 30ம் தேதி மங்கல்யானை இரண்டரை லட்சம் கிலோ மீட்டர்

 உயரத்திற்கு எட்ட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின் மங்கல்யான் விண்கலம் ஒரு கிரகத்தை போல சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றியவாறு தனது விண் பயணத்தை தொடங்கும். விண்பயணத்தின் 300வது நாளை எட்டியபின்னரே செவ்வாய் கிரகத்தை மங்கல்யான் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

செவ்வாய், 29 அக்டோபர், 2013

அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்களின் !


 அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிப்பதில்லை என அந்நாட்டு புகலிடச் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ட்ரவர் க்ரான்ட் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிக்க வேண்டுமேன அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் வலியுறுத்தியிருந்தது.

எனினும், பிரதமர் டோனி அப்போட் தலைமையிலான புதிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகளை உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்படுவதன் மூலம் உள மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தாது, எதற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதனையும் அறியாது புகலிடக் கோரி;க்கையாளர்கள் துன்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கால வரையறையின்றி புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதானது அவர்களின் சிவில் மற்றும் அடிப்படை உரிமை மீறலாகும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மெல்பர்ன் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் தடுத்து

 வைக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிந்த ஒருவரே இவவ்hறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மெய்யான புகலிடக் கோரிக்கையாளர் என அடையாளம் காணப்பட்ட போதிலும், அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 50க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலனவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மெல்பர்ன் முகாமில் தற்கொலைக்கு முயற்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 

சனி, 26 அக்டோபர், 2013

ஜப்பானை தாக்கிய பூகம்பம்-ரிக்டர் அளவு 7.3


நில அதிர்வுகளுக்கு பெயர் பொன ஜப்பானை வெள்ளியன்று ஒரு நில நடுக்கம் தாக்கியது.இந்திய நேரப்படி வெள்ளி இரவு 10.40 மணிக்கு நிகழ்ந்த இந்த பூகம்பத்தின் அளவு 7.3 ரிக்டர் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஆயினும் இதுவரை சேதம் எதுவும் ஆனதாக தகவல்கள் இல்லை.
ஏற்கனவே 2011-ல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு பூகம்பத்தில் ஜப்பான் நிர்மூலமானது குறிப்பிடத்தக்கது

புதன், 23 அக்டோபர், 2013

திருமணப் பந்தத்தில் இணைந்த இரு இளம் பெண்கள்


பீகார் மாநிலத்தில் இரண்டு இளம்பெண்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிப்பருவம் முதலே நெருங்கிய தோழிகளாக இருந்த இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.
இவர்களின் இந்த நெருக்கத்தை கண்டித்த பெற்றோர்கள், இவர்களை பிரிக்க முயற்சி செய்துள்ளனர். ஆண் - பெண் காதலை போன்று அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்த இவர்கள் அக்டோபர் மாதம் 4ம் திகதி வீட்டை விட்டு வெளியேறினர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் இரு பெண்களில், ஒரு பெண்ணின் பெற்றோர் மற்றொரு பெண் வீட்டார் மீது கடத்தல் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு பெண்களையும் தேடிவந்த பொலிசார் அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டு, விடுதி ஒன்றில் வசித்துவருவதை தெரிந்துக்கொண்டனர்.

அவர்களது செல்போனை வைத்து இவர்களை கண்டுப்பிடத்த பொலிசார் இருவரையும் பாட்னா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

செவ்வாய், 22 அக்டோபர், 2013

கூடங்குளத்தில் மின் உற்பத்தி ஸ்டார்ட்!


கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் இன்று மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை அமைத்துள்ளது.

இந்த அணு மின் நிலைய கட்டுமான பணி முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இதற்கு எதிராக அந்த ஏரியா மக்கள் நடத்திய போராட்டத்தால் மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னா் ஒரு வழியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கியதை அடுத்து மின் உற்பத்திக்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இதனைத் தொடா்ந்து இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
 

திங்கள், 21 அக்டோபர், 2013

ஈராக்கில் இரட்டை குண்டுவெடிப்பு: 49 பேர் பலி

 
 பாக்தாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல்களில் .
ஈராக்கின் பாக்தாத் நகரில் ஷியா இஸ்லாமிய மக்கள் நிறைந்துள்ள அல்-அமில் பகுதியை ஒட்டிய ஒரு சிற்றுண்டி சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது.
அனைவரும் தொலைக்காட்சியில் சாக்கர் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிற்றுண்டி சாலையின் வாசல் பகுதியில் திடீரென புகுந்த வெடிகுண்டுகள் நிரம்பிய சிறுபேருந்து ஒன்று சாலையின் மீது மோதி வெடித்துச் சிதறியது.
இதில் 37 பேர் உயிரிழந்தனர், 42 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று பாக்தாத்தின் மேற்கு பகுதியில் அமிரியாஹ் எனும் இடத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர், 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை எந்தவொரு அமைப்பும் இந்த தாக்குதல்களுக்கு

பொறுப்பேற்கவில்லை, ஆனால் தங்களுக்கு எதிராக சன்னி இனத்தவர்களே இத்தாக்குதல்களை நடத்தியதாக ஷியா அமைப்பினர் கருதுகின்றனர்.
இந்தாண்டு மட்டும் ஈராக்கில் இதுபோன்ற தாக்குதல்களில் 7000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2006-07 காலகட்டங்களில் வன்முறை சம்பங்கள் முடிவை எட்டிய நிலையில் மீண்டும் தலைதூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

வெள்ளி, 11 அக்டோபர், 2013

கழிப்பறை செயல்படாததால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய


ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் மாஸ்கோவிலிருந்து டோக்கியோவிற்கு 141 பயணிகளுடன் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் விமானத்தின் கழிப்பறை வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. ஊழியர்கள் சோதனையிட்டபோது மின்னணுக் கோளாறினால் இந்தத் தடங்கல் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

தொலைதூரப் பயணத்தில் பயணிகளுக்கு ஒரு கழிப்பறை செயல்படாமல் இருப்பது அசௌகரியத்தை அளிக்கும் என்று கருதிய விமான நிறுவனம், விமானத்தை மீண்டும் மாஸ்கோவிற்கே திருப்புமாறு தகவல் அளித்தது. எனவே, புறப்பட்ட ஐந்து மணி நேரத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானத்தை தொழில்நுட்ப வல்லுனர்கள் சரி செய்ததாக விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வர்த்தக உலகில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே ட்ரீம்லைனர் விமானங்கள் தொடர்ந்து ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. பாட்டரியில் ஏற்பட்ட தீயினால் இந்த உயர்ரக வகை விமானங்கள் நடுவில் சிறிது காலம் இயக்கப்படாமல் இருந்தன.

போயிங் நிறுவனத்தின் வர்த்தக எதிரியான ஏர்பஸ் நிறுவனத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் இந்த வாரம் 9.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனப் பங்குகள் நேற்று காலை வரை 2.1 சதவிகிதம் விற்பனை மதிப்பில் உயர்ந்து காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழன், 10 அக்டோபர், 2013

2 சுரங்க தொழிலாளர்கள் உயிருடன் 10 நாள்களுக்குப் பின்பு மீட்பு


 
சீனாவில் சுரங்க விபத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 10 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 10 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி சீனாவில் உள்ள பென்யாங் நகர நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், காணாமல் போனவர்களில் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரை மீட்புக்குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிருடன் மீட்டனர்.

அவர்கள் இருவரும் நல்ல நிலையில் இருப்பதாகவும். உயிருக்கு ஆபத்து உண்டாகும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் சுரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது உள்ளூர் மருத்துவ மனையில் அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.{புகைப்படங்கள்,}





 

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

விமானம்திடீரென விழுந்து நொறுங்கியது !

                                                            
தீவிரவாதிகளின் சதி காரணமா? கொலம்பியாவில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்க இராணுவ படைக்கு தேவையான மருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு டிஹெச் 8 என்ற சிறிய ரக விமானம் ஒன்று கொலம்பியா வழியாக சென்றது.

இதில் விமானி உட்பட 6  பேர் பயணம் செய்தனர். பனாமா எல்லை பகுதி கொலம்பியா கபூர்கானா நகரம் அருகே அதிகாலை 1 மணியளவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது.

இதில் அமெரிக்கர்கள் 4 பேர் பலியாகினர், 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் ஆபத்தான நிலையில் பொகோடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சென்ற கொலப்பிய இராணுவ வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது மர்மமாக உள்ளது, கொலம்பியா தீவிரவாதிகள் யாராவது விமானத்தை சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

பிரான்சில் கடிகார திருடர்கள் கைது


பிரான்சில் ஆடம்பர கடிகாரத்தை திருடியதற்காக மூன்று நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சின் தலைநகரான பாரீசில் உள்ள ஆரம்பரக் கடையில் நேற்று இந்த திருட்டானது நடைபெற்றுள்ளது.

இவர்களை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களில் ஒருவர் ரோமானிய நாட்டையும், மற்றொருவர் மால்டோவா நாட்டையும் சேர்ந்தவர்கள் ஆவார்.

மேலும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆயிரக்கணக்கான யூரோக்கள் மதிப்புள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்

சனி, 5 அக்டோபர், 2013

பிரமிக்க வைத்த கொள்ளை!!! (காணொளி புகைப்படங்கள் )


நேற்று வெள்ளிக்கிழமை இது வரை நிகழ்ந்திராத மாதிரியான பிம்மிப்பை ஊட்டும் கொள்ளை ஒன்று நடந்துள்ளது. கிட்டத்தட்ட 15 கொள்ளைக்காரர்கள் வெள்ளி மதியம் பரிஸ்  2, rue de la Paix  இலிருக்கும் ஆபரணம் மற்றும் அதியுச்சப் பொறுமதியுள்ள ஆடம்பரக் கடிகாரங்களின் விற்பனை நிலையம் ஒன்றைக் கொள்ளை அடித்துள்ளனர். 20ற்கும் மேற்ப்பட்ட ஒவ்வொன்றும் இலட்சக் கணக்கில் பெறுமதி உள்ள கடிகாரங்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு நடந்தே தப்பிச் சென்றுள்ளனர். இவர்களில் இருவர் மட்டும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படியான கொள்ளை இதுவரை நடந்ததில்லை எனக் கூறியுள்ளனர்.

இத்துணிகரக் கொள்ளை பகல் 11h35 ற்கு நடந்துள்ளது. இதில் கொள்ளையடிக்கப்பட்ட கடிகாரம் ஒன்று மட்டுமே பல இலட்சம் யூரோக்கள் பெறுமதியானது எனக் கூறப்படுகின்றது. இக்கொள்ளை நடந்த இடம் பரிசில் உள்ள நீதி அமைச்சகத்திலிருந்து நூறு மீட்டர் தொலைவிலேயே உள்ளது.

2, rue de la Paix  இலுள்ள இந்த வருட ஆரம்பத்திலேயே புதிதாகத் திறக்கப்பட்ட  Vacheron Constantin கடையினுள் 11h35 அளவில் மிகவும் அழகாகவும் கௌரவமாகவும் உடையணிந்த இருவர் கடிகாரம் வாங்குவது போல் நுழைந்துள்ளார்கள். இரு கண்காணிப்பு ஒளிக்கருவிகளால் கண்காணிக்கப்படும் பாதுகாப்புக் கதவு இவர்களுக்காகத் திறக்கப்பட்டதும் இவர்கள் அந்தக் கதவை திறந்தபடியே பிடித்திருக்க மூன்றாவதாக ஆயுதத்துடன் நுழைந்த இவர்களின் கூட்டாளி மேலும் முகம் மூடிய கவசம் அணிந்தபடி கோடரிகள் மற்றும் பெரிய சுத்தியல்கள் தாங்கிய ஆறுபேரை உள்ளே நுழைய விட்டுள்ளார். இவர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கடிகாரங்களின் கண்ணாடிகளைச் சிதற உடைத்தும் மேலும் விற்பனைக்கு வைத்திருந்த கடிகாரங்களின் கண்ணாடிகளை உடைத்தும் அதியுச்சப் பெறுமதி வாய்ந்த 20 கடிகாரங்களைக் கொள்ளையடித்துள்ளனர்.

வெளியில் நின்ற முகமூடி அணிந்த மேலும் ஆறுபேர் கொள்ளயைடித்து வந்தவர்கள் தப்பிச் செல்வதற்காகப் புகைக் குண்டுகளை வீசி அவ்விடத்தினை எதுவும் தெரியாதபடி மறைத்தனர். இந்த அணி Boulevard Haussmann நோக்கித் தப்பியோடியதாகச் சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர். அங்கிருந்த பெண் விற்பனையாளர் அதிர்ச்சி அடைந்த நிலையில் வைத்திய சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 கொள்ளையைத் தொடர்ந்து அங்கு வந்த காவற்துறையின் குற்றத்தடுப்புப் பிரிவினர் (Brigade anti-criminalité - BAC) வாகனத்தில் துரத்தியதில் கொள்ளை நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள rue d'Anjou மற்றும் boulevard Haussmann சந்திக்கும் புள்ளியில் இரு கொள்ளையைரைக் கைது செய்துள்ளனர். இவர்களை Brigade de répression du banditisme (BRB) எனப்படும் கொள்ளையர் கூட்டத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டினைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பெரிய சுத்தியலும் கோடாரி ஒன்றும் அருகிலுள்ள வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளை முறை மிகவும் புதிய நடைமுறையாக உள்ளது எனக் காவற்துறை அத்தியட்சர் Vincenti தெரிவித்துள்ளார். 'இது ஒரு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கொமாண்டோத் தாக்குதல் அணி' என பிரான்ஸ் நகைக் கடைகள், ஆபரணம் செய்யும் இடம், முத்துக்கள், ரத்தினக் கற்கள்  பாதுகாப்பு ஒன்றியத்தின் (l'Union française de la bijouterie, joaillerie, orfèvrerie, des pierres et des perles - UFBJOP) சார்பில்  Jacques Morel தெரிவித்துள்ளார்..






 
 
 

வியாழன், 3 அக்டோபர், 2013

புவி வெப்பமடைவதற்கு மனித செயற்பாடுகளே காரணம்: ஐ.நா!


தற்போது புவி வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயற்பாடுகள் காரணம் என்பது உறுதியாகத் தெரிவதாக ஐ.நா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மாறிவரும் உலகப் பருவநிலை தொடர்பான சர்வதேச நிபுணர் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், புவி வெப்பமடைந்து வருவதற்கான முக்கியக் காரணம் மனிதச் செயற்பாடுகள்தான் என்பது விஞ்ஞானிகளுக்கு 95% உறுதியாகத் தெரிவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் கடைசியில் உலகக் கடல் மட்டம் தற்போது உள்ள அளவிலிருந்து 82 செண்டிமீட்டர்கள் உயரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டரீதியான உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு அரசாங்கங்கள் முயன்றுவரும் நிலையில், விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை மிகவும் அவசியமானது என ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இந்த நிபுணர் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உலகப் பருவநிலை தொடர்பான ஐ.நா உச்சிமாநாடு ஒன்றை அடுத்த வருடத்தில் தான் நடத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.
புவியின் சராசரி வெப்பநிலை இரண்டு பாகை செல்ஷியஸுக்கும் கூடுதலாக அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கங்களை சம்மதிக்க வைப்பதென்பது இந்த மாநாட்டின் இலட்சியமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 2 அக்டோபர், 2013

தலிபான்களுக்கு அலுவலகம் பாகிஸ்தானில்


 தலிபான்களுக்கு அலுவலகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் பாகிஸ்தானில் தொலைகாட்சி சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டி அளித்துள்ளார்.
 
அதில், பாகிஸ்தானில் அமைதி நிலவ வேண்டுமானால் தலிபான்கள் பாகிஸ்தானில் அலுவலகம் அமைத்து செயல்படுவதை அனுமதிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தையும், ஜனநாயக நடைமுறைகளையும் அவர்கள் பின்பற்றாவிட்டால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தினர் அலுவலகம் தொடங்குவது தொடர்பாக ஊடகங்கள் காட்டி வரும் விமர்சனம் பாரபட்சமானது.

மேலும் அவர்களுடன் நிபந்தனைகள் அற்ற பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் ராணுவமும், அரசியல் கட்சிகளும் பாரபட்சமாக நடந்து
கொள்ள கூடாது.

பழங்குடியின மக்களின் நலனுக்காக அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

7 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பாதிப்பு


அமெரிக்க அரசாங்கத்தின் சேவைகளில் ஒரு பகுதி ஸ்தம்பிதமடைந்துள்ளது.
குடியரசு கட்சி தலைமையிலான அந்நாட்டு பிரதிநிதிகள் சபை அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றாமையே அதற்கு காரணமாகும்.
இதற்கமைய அமெரிக்கா அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டுவதற்கு வழங்கப்பட்டிருந்த நேரம் முடிவடைந்தது.

இந்த நிலையில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் அனுப்பபப்டுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டாலும், அவர்களுக்கான சம்பளத்தை மீளச் செலுத்துவது தொடர்பில் எவ்வித உறுதிப்பாடும் இல்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அமெரிக்க குடியரசுக் கட்சி நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளது.

வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் ஜனாதிபதி ஒபாமா அறிமுகப்படுத்திய சுகாதார மறுசீரமைப்பு திட்டத்தை தாமதப்படுத்த வேண்டும் என அந்த கட்சி நிபந்தனை முன்வைத்துள்ளது
 

திங்கள், 30 செப்டம்பர், 2013

கழுத்தில் சுருக்கிட்டுபெண் தற்கொலை

கிருஷ்நப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய் ,கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு  SKYPEயில் கதைத்துக் கொண்டிருக்கும் போது

ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டு வளையில் தூக்கிட்டு மரணிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கணவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளையில் நைலோன் கையிறை இட்டுவிட்டு கணணியை OFF செய்துவிட்டு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

உடனடியாக இவரின் உறவினர்களுக்கு விடயத்தை கட்டாரிலிருந்து தொலைபேசி மூலம் அறிவித்தவுடன் ,உறவினர்கள் மிகவும் அவசரமாக இவரின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டுவளையில்தூக்கிட்டு மரணித்திருப்பதை அவதானித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிசார் இன்று மாலை பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்களோடு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்து,பிரேதப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

கட்டாரில் இப்பெண்ணின் கணவரோடு மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தொடர்பை ஏற்படுத்திய போது இதனை உறுதிப்படுத்தினார்.

நாளை பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

சனி, 28 செப்டம்பர், 2013

இரசாயான ஆயுதப் பயன்பாடு தொடர்பாக மறுபடியும்


 சிரியா மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டமைக்குக் காரணமான இரசாயன ஆயுதப் பயன்பாடு தொடர்பாக ஐ.நா சபை அங்கு மறுபடியும் மீளாய்வில் இறங்கியுள்ளது.

 ஐ.நா சபையைச் சேர்ந்த ஆயுதப் பரிசோதகர்கள் சிரியாவில் இடம்பெற்றதாகக் குற்றஞ் சாட்டப் பட்ட 7 இரசாயன ஆயுதத் தாக்குதல்களை தற்போது ஆய்வு செய்ய முனைந்துள்ளனர்.

 இதில் முக்கியமாக ஆகஸ்ட் 21 டமஸ்கஸ்ஸில் இடம்பெற்ற சம்பவத்துக்குப் பின்னரான 3 தாக்குதல்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. மேலும் இத்தாக்குதல்களை திருத்தமாக மீளாய்வு செய்யுமாறு சிரிய அரசு ஐ.நா இடம் விண்ணப்பித்து இருந்தது. இவை அனைத்திலும் முக்கியமானதாக ஆகஸ்ட் 21 ஆம் திகதி சிரிய அரசால் பிரயோகிக்கப் பட்டதாகக் கருதப் படும் இரசாயனத் தாக்குதலே கருதப்பட்டது. நூற்றுக் கணக்கான மக்களைப் பலி கொண்ட இத்தாக்குதலினால் தான் தனது இரசயான ஆயுதங்களை சிரியா மேலைத்தேய அரச மத்தியஸ்தத்தின் கீழ் ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
 
இந்நிலையில் சிரியாவில் ஐ.நா இன் தலையீடு சர்வதேச சமூகத்துக்கு அதன் மீது கிடைத்த அழுத்தமான வெற்றி என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் சிரிய அரசு தொடர்ந்து அனுமதி அளிக்கும் சந்தர்ப்பத்தில் புதிய ஆய்வாளர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் அங்கு சென்றடைய உள்ளனர்.
 
 இதேவேளை சிரிய வன்முறைகள் முடிவில்லாமல் தொடர்ந்து வருகின்றது. இறுதியாக டமஸ்கஸ்ஸுக்கு வடக்கே ரான்குஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் அருகே வெடித்த கார் குண்டு வெடிப்பில் 20 பொது மக்கள் வெள்ளிக்கிழமை கொல்லப் பட்டுள்ளனர்

கடவை விபத்து! தொடருந்துக்


தொடருந்துக் கடவை ஒன்றில் வாகனம் பழுதாகிய நிலையில் வாகனத்திலிருந்து இறங்க முடியாது பெண்ணொருவர் விபத்திற்குள்ளாகி உள்ளார். நேற்று 19 மணியளவில் Saint-Emilion (Gironde)  உள்ள கிராமத்தில்  Sarlat மற்றும் Bordeaux இற்குமிடையில்  போக்குவரத்தை மேற்கொள்ளும் பிராந்தியக் கடுகதித் தொடருந்துடன் (TER), Saint-Emilion தொடருந்து

நியைத்திற்குச் சிறிது முன்னதாக Libourne இற்கும் Saint-Emilion ற்கும் இடையிலுள்ள RUSTE தொடருந்துக் கடவையிலேயே இந்தப் பெண் விபத்திற்கு உள்ளாகி உள்ளளார். இந்தத் தொடருந்து மோதியதில் இப்பெண் படுகாயங்களிற்கு உள்ளாகி உயிராபத்தான நிலையில் உள்ளார்.
  
இவரது வாகனம் பழுதுபட்டுச் சரியாகக் கடவையில் நின்று விட்டது. பல தடவைகள் வாகனத்தை இயக்க முயன்றபோதும் முடியவில்லை. அதற்குள் தொடருந்து வாகனத்துடன் மோதியது. விபத்திற்குள்ளாகி வாகனத்திற்குள் சிக்கி இருந்த இவரை முதலுதவிப்படையினர் வாகனத்தினை வெட்டியே

வெளியே கொண்டு வந்துள்ளனர். 30 வயதுடைய இந்தப் பெண் உடனடியாக உலங்குவானூர்தியில் Bordeaux வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவரது உயிர் மிகவும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.
 
விபத்திற்குள்ளாகிய தொடருந்தில் 131 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பாடசாலை மாணவர்கள். பயணிகள் அனைவரும் எந்தக் காயங்களுமின்றித் தப்பி உள்ளனர். விபத்தின் பின்னர் பயணிகள் பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்நப் பாதையின்

தொடருந்துப் போக்குவரத்து மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நிலமட்டத் தொடருந்துக் கடவைகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்து இரண்டு நாட்களில் இந்த விபத்து நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மீண்டும் தாக்குதல் கென்யாவில் பயங்கரவாதிகள்


 
கென்யாவின் எல்லைப்பகுதிகளில் சோமாலியா பயங்கரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல் சம்பவங்களில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 காவலர்கள் உட்பட 7 பேர் காயமடைந்ததாகவும் கென்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கென்யாவின் எல்லைப்பகுதியிலுள்ள மந்தெரா நகரத்தில் தீவிரவாதிகள் நேற்று வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் காவலர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக புதன்கிழமை இரவு, அங்குள்ள மற்றொரு நகரமான வாஜிரில் தீவிரவாதிகள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர்.
கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள வெஸ்ட்கேட் வணிகவளாக தாக்குதலில் ஈடுபட்ட அல்-ஷஹாப் தீவிரவாத குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக கென்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சோமாலியாவிலுள்ள கென்ய படையினருக்கு, பயங்கரத் தாக்குதலை சந்திக்க தயாராக இருக்குமாறு அல்-ஷஹாப் தீவிரவாத பிரிவினர் ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தனர்.

இதனிடையே 67 பேரை பலி கொண்ட வெஸ்ட்கேட் வணிகவளாகத்தில் வியாழக்கிழமை முதல் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பன்னாட்டு தடயவியல் நிபுணர்கள் சோதனைகளில்

ஈடுபட்டுள்ளதாகவும் ஒருவாரத்திற்குள் தடயங்கள் சேகரிக்கப்படும் என்றும் கென்ய உள்துறை அமைச்சர் ஜோஸப் ஒலெ லெங்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெஸ்ட்கேட் வணிகவளாக தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டதாக அல்-ஷஹாப் தீவிரவாத அமைப்பினர் டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அல்-காய்தா சார்பு தீவிரவாத இயக்கம் ஒன்று, கென்ய படையினர் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளது
 

வியாழன், 26 செப்டம்பர், 2013

உலக நாடுகளுக்கு மலாலாவின் கோரிக்கை


ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த வந்த மலாலா மீது, கடந்தாண்டு அக்டோபர் மாதம் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

தலையிலும், கழுத்திலும் குண்டுகுள் பாய்ந்த நிலையில் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மலாலா மீண்டு வந்தார்.
இதனை தொடர்ந்து உலக நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 68வது ஐநா பொது
கூட்டம் நடந்து வருகிறது.

இதையொட்டி நேற்று நடந்த சமூக நல மாநாட்டில் மலாலா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு துப்பாக்கிகளை அனுப்புவதற்கு பதிலாக புத்தகங்களை அனுப்பி வையுங்கள்.

இராணுவ டேங்குகள் அனுப்புவதற்கு பதிலாக பேனாக்களை அனுப்புங்கள்.
இராணுவ வீரர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை அனுப்புங்கள், எல்லா குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதும் நைஜீரியா, சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதும் எனது கனவு.

பெண்களுக்கு முழு சுதந்திரமும், ஆண்களுக்கு நிகரான உரிமையும், நீதியும் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
 

புதன், 25 செப்டம்பர், 2013

சீனாவில் சூறாவளி : 25 பேர் பலி


 நேற்று சீனாவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 23 பேர் பலியானார்கள்.
சீனாவின் ஹாங்காங் அருகே உள்ள தெற்கு பகுதி மாகாணமான குவாங்டோங்கில் நேற்று 'யுசாகி' என்ற சூறாவளி தாக்கியது. 180 கி.மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட இந்த சூறாவளி தாக்கியதில் அப்பகுதியில் 7100  வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள் அடியோடு சாய்ந்தன. ரோடுகளில் நின்ற கார்கள் உருண்டன.

இந்த இடிபாடுகளில் சிக்கியும், வெள்ள நீரில் மூழ்கியும், காற்றில் தூக்கி வீசப்பட்ட பொருட்கள் தாக்கியதிலும் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளிக்கு 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், குவாங்டோங் மாகாணத்தில் உள்ள குவாங்ஜூ , ஷென்சென் மற்றும் ஹாங்காங் பகுதிகளுக்கு செல்லும் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் தரைவழி போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

வாஷிங்மிஷினில் மறைந்திருந்த இரு குழந்தைகள் பலி


சீனாவின், கியோசி நகரிலுள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகள், வாஷிங்மிஷினில் ஒளிந்த கொண்டிருந்தபோது மூச்சு திணறி இறந்தனர்.

வீ்ட்டில் இரண்டு மற்றும் மூன்று வயது கொண்ட இரு ச‌கோதரிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
தாய் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருக்க, தந்தை இசையை ரசித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், குழந்தைகள் இருவரும் திறந்திருந்த வாஷிங்மிஷினுக்குள் புகுந்து, மூடிக் கொண்டனர். அப்போது ஏற்பட்ட மூச்சு திணறலால் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
அதிர்ஷ்டவசமாக இக்குழந்தைகளின் ஒரு வயது தம்பி இந்த விபத்தில் இருந்து தப்பினான்.
 

திங்கள், 23 செப்டம்பர், 2013

தீவிரவாதிகள் தாக்குதல் : பலி எண்ணிக்கை 60ஆக


                       

 கென்யாவின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 1998-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள். தலைநகர் நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது அப்போது அவர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும் அதிகமான பேர் பலி ஆனார்கள்.

அதன்பிறகு இப்போது அங்கு மீண்டும் தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தி உள்ளனர். நைரோபியில் உள்ள இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான 'வெஸ்ட் கேட்' என்ற வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் முகமூடி அணிந்த சுமார் 15 தீவிரவாதிகள் புகுந்து கையெறி குண்டுகளை வீசியும், எந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

அப்போது அந்த வணிக வளாகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பேர் இருந்தனர். வளாகத்தின் ஒரு பகுதியில் சமையல் போட்டியும் நடந்து கொண்டு இருந்தது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியதும், கடைகளில் பொருட்கள் வாங்கிக்கொண்டு இருந்தவர்கள் உயிர் தப்புவதற்காக அங்கும், இங்குமாக ஓடினார்கள்.

இதனால் ஒரே களேபரமாக இருந்தது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் சுருண்டு விழுந்து செத்தனர். இந்த கொடூர தாக்குதலின் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 60 ஆக உயர்ந்தது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

வணிக வளாகத்தில் ஆங்காங்கே உடல்கள் சிதறிக்கிடந்தன. வணிக வளாகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது பற்றிய தகவல் கிடைத்ததும் கென்ய ராணுவத்தினர் விரைந்து சென்று வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

ராணுவ ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டன. தீவிரவாதிகளின் பிடியில் பிணைக்கைதிகளாக இருப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்றும் சண்டை நீடித்தது. அமெரிக்கா, பிரான்சு, கனடா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் உயிர் இழந்து உள்ளனர்.

கனடா தூதரக அதிகாரி ஒருவர், அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரின் மனைவி ஆகியோரும் பலியானவர்களின் பட்டியலில் உள்ளனர். இந்த தாக்குதலில் பலியானவர்களில் 2 பேர் இந்தியர்கள் என தெரியவந்தது. அவர்களில் ஒருவர் பெயர் ஸ்ரீதர் நடராஜன் (வயது 40).

சென்னையைச் சேர்ந்த என்ஜினீயரான இவர் கென்யாவில் உள்ள மருந்து கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இன்னொருவர் பரம்ஷு ஜெயின் (8) என்ற சிறுவன். இந்த சிறுவனின் தந்தை நைரோபியில் உள்ள ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார்.

தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஸ்ரீதர் நடராஜனின் மனைவி மஞ்சு என்ற மஞ்சுளா (36), பரம்ஷு ஜெயினின் தாயார் முக்தா ஜெயின், 12 வயது சிறுமி பூர்வி ஜெயின், நடராஜன் ராமச்சந்திரன் ஆகிய 4 இந்தியர்களும் படுகாயம் அடைந்தார்கள்.

நடராஜன் ராமச்சந்திரன் வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களில் மஞ்சுளா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கென்யாவில் சுமார் 70 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியதாக நைரோபியில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக கென்யா அதிபர் உகுரு கென்யட்டாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், இதுபோன்ற வன்முறை செயல்களை கட்டுப்படுத்த உலகளாவிய முயற்சிகள் தேவை என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிப்பதாகவும் கென்யா அரசுக்கும், அந்த நாட்டின் மக்களுக்கும் இந்தியா ஆதரவாக இருக்கும் என்றும் வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதின் தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரான்சு உள்ளிட்ட மேலும் பல நாடுகளும் இந்த தாக்குதலை கண்டித்து உள்ளன. சோமாலியா நாட்டில் செயல்படும், அல்கொய்தா ஆதரவை பெற்ற அல்-ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்று உள்ளது.

இது அல்கொய்தா ஆதரவு பெற்ற இயக்கம் ஆகும். அல் ஷபாப் இயக்க தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அபு மூசா மொம்பாசா என்ற தீவிரவாதி பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள கென்யா அதிபர் உகுரு

கென்யட்டா, தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தனிப்பட்ட முறையில் தனது குடும்ப உறுப்பினர்கள் சிலரை இழந்து இருப்பதாகவும் அவர் கூறினார்

தற்கொலை படைத் தாக்குதலில் 16 பேர் பலி

 
 ஈராக் நாட்டில் நேற்று தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியானார்கள்.

இராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியில் உள்ள டோராவில், சன்னி அமைப்‌‌‌பினரின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அப்போது தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 16 பேர் பலியானார்கள். மேலும் 35 பேர் பலத்த காயமடைந்தனர்.

முன்னதாக நேற்று முன் தினம் இராக்கில் நடைபெற்ற ஷியா பிரிவின் இறுதி ஊர்வலத்தின் போது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 65 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

வியாழன், 19 செப்டம்பர், 2013

கிணற்றில் சிக்கியிருந்த பெண் 15 நாட்களின்பின்பு மீட்பு


கிண­றொன்றில் விழுந்த பெண்­ணொ­ருவர் 15 நாட்­களின் பின் உயி­ருடன் மீட்­கப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.
ஸு கிஸியு (38 வயது) என்ற மேற்­படி பெண் ஹெனான் மகா­ணத்­தி­லுள்ள ஸொங்பெங் கிரா­மத்­தி­லுள்ள 12 அடி ஆழ­மான கைவி­டப்­பட்ட கிணற்றில் விழுந்­துள்ளார்.

அவர் சோளத்தை உண்டும், மழை நீரை அருந்­தியும் உயிர் பிழைத்­தி­ருந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து கடந்த திங்­கட்­கி­ழமை மாலை அவர் மீட்புப் பணி­யா­ளர்­களால் மீட்­கப்­பட்­டுள்ளார்.
அந்தக் கிணறு உய­ர­மாக வளர்ந்த சோளச் செடி­களால் மூடப்­பட்­டி­ருந்­த­துடன், கிணற்றின் உட்­புறச் சுவர் ஏற முடி­யாது வழு­வ­ழுப்­பாக இருந்­துள்­ளது.
அந்தப் பெண் கிணற்­றுக்குள் விழுந்­த­போது சோளச் செடி­களைப் பற்றி தொங்­கி­யுள்ளார்.

ஆனால், அவ­ரது பாரத்தை தாங்­காத சோள செடிகள் வேருடன் அறுந்து வந்­த­தை­ய­டுத்து, அவர் வரண்ட கிணற்­றுக்குள் விழுந்­துள்ளார்.
இந்­நி­லையில் அவ­ரது கணவர் லி குன்­மிங்கும் உற­வி­னர்­களும் ஸு கிஸி­யுவை தேடும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர். எனினும், அவர்­களால் அவரைக் கண்­டு­பி­டிக்க முடி­யாது போனது.

கடந்த 16ஆம் திகதி சோள அறு­வ­டைக்கு சென்ற விவசாயி ஒருவர் கிணற்றிலிருந்து கூச்­ச­லி­டு­வதைக் கேட்டு மீட்புப் பணி­யா­ளர்­க­ளுக்கு அது தொடர்பில் அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து மீட்­கப்­பட்ட ஸு கிஸியு தற்­போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நிறை கடந்த 15 நாட்களில் 16 இறாத்தலால் குறைந்துள்ளது.

திங்கள், 16 செப்டம்பர், 2013

அஸாஞ்சே கட்சி தோல்வி அவுஸ்திரேலியாவில்


 நடைபெற்ற செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்ததுடன், அவர் போட்டியிட்ட விக்டோரியா பகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளார்.

விக்கிலீக்ஸ் அதிபரான ஜூலியன் அஸாஞ்சே, அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி பிரபலமடைந்தார்.

இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் அவர் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பின. இதையடுத்து லண்டனில் உள்ள போர்ச்சுகல் நாட்டுத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார்.

இதனால் அவரை நாடு கடத்த முடியாமல் தவித்து வருகிறது இங்கிலாந்து அரசு. தொடர்ந்து போர்ச்சுகல் தூதரகத்திலேயே தங்கியிருக்கும் அஸாஞ்சே தனது சொந்த நாடான அவுஸ்திரேலியாவில் ஒரு கட்சி ஆரம்பித்தார்.

அங்கு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியை களம் இறக்கினார். அவரும் விக்டோரியா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அஸாஞ்சே உள்பட அவரது கட்சியை சார்ந்த அத்தனை பேரும் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் ஆதரவைப் பெற்ற செக்ஸ் கட்சிக்கு கிடைத்த ஆதரவை விட குறைவான வாக்குகளை பெற்று அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

விண்ணில் ஏவியது மிகவும் செலவு குறைந்த ராக்கெட்டை


 
ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா மிகவும் அணுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ராக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது.
எப்சிலான் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய

தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ராக்கெட்டின் எடையானது முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளின் எடையின் பாதியளவே உள்ளது.
37 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த அதி நவீன ராக்கெட் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது

தொலைநோக்கியை எடுத்துச்சென்றது. பின்னர் பூமியின் மேலே சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் அந்த டெலஸ்கோப்பை விட்டு ராக்கெட் பிரிந்தது.
பூமியின் சுற்றுவட்டப்பாதையில் விடப்பட்டுள்ள இந்த ஸ்பிரிண்ட்-ஏ-

தொலைநோக்கியானது வீனஸ், மார்ஸ், ஜூபிடர் கோள்கள் பற்றி ஆராய்ந்து படம் பிடித்து அனுப்பும். இது ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய தகவல்களை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்வெளி பற்றிய அறிய தகவல்களை தரும் என்று நம்பப்படுகிறது.

முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளை காட்டிலும் பாதியளவு எடையுள்ள செயற்கை நுண்ணறிவு கருவிகளை கொண்டு கட்டப்பட்ட இந்த எப்சிலான் ராக்கெட்டை அனுப்ப 8 விஞ்ஞானிகளே மட்டுமே தேவைப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பேசும் ரோபோக்களை சர்வதேச விண்வெளிக்கூடத்திற்கு அனுப்பும் முயற்சியை ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா எடுத்து வருகிறது.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

பிரதமரிடம் நோர்வே வாழ் பெற்றோர்

 

எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம்

நோர்வே நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் ERNA SOLBERG இற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்கள் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தாம்

எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காப்பகங்களில் சிக்கியுள்ள தமது பிள்ளைகளை தம்மிடம் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

நோர்வேயின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கிய கன்சர் வேட்டிவ் கட்சியின் தலைவியும் எதிர்க்கட்சித் தலையுமாக இருந்த IRON ERNA SOLBERG எட்டு வருடங்களின் பின்னர் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நோர்வேயின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.

இந்நிலையிலேயே புதிதாக தெரிவாகியுள்ள நோர்வே நாட்டு பிரதமரிடம் மேற்படி நோர்வேயில் வதியும் வெளிநாட்டு வதிவாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து குடிபெயர்ந்து நோர்வேயில் தஞ்சமடைந்துள்ள இலங்கை, இந்தியா, கானா, எத்தியோப்பியா, ரஷ்யா, போலந்து, கொங்கோ, லத்வியா, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தைகள் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களிடம்

 சிக்குண்டுள்ளன.
தமது குழந்தைகளை மீட்டுக்கொள்வதற்காக நோர்வேயின் முன்னைய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுவந்த கோரிக்கைகள் மற்றும்

வேண்டுதல்கள் அனைத்தும் கவனத்திற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கின்ற பாதிக்கப்பட்ட பெற்றோர் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ஓர் தாயார் என்பதால் கருணையும் மனிதாபிமானமும் கொண்டு தமது பிள்ளைகளை மீட்டுத் தருவதற்கு வழிவகை செய்யுமாறு வேண்டுகின்றனர்.

நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் நோர்வேயில் வதியும் வெளிநாட்டுப் பெற்றோர் தமது பிள்ளைகளை வருடக் கணக்கில் பிரிந்து வருவதாகவும் இதனால் தமது பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பலவந்தமாக பிரித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன், எட்டு வருடங்களின் பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ள கன்சர் வேட்டிவ் கட்சியின் அரசாங்கம் இவ்விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்பு- நோர்வே சிறுவர் விடயம் தொடர்பில் கடந்த பல வருடங்களாக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து கவனம் செலுத்துமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்