நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 22 நவம்பர், 2013

சச்சினினின் பிரியாவிடை பேச்சில் எனது பெயரும் இடம்பெற்றிருக்கலாம் -


சச்சின் டெண்டுல்கரின் பிரியாவிடை பேச்சில் எனது பெயரும் இடம்பெற்றிருக்கலாம் என தான் விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் கம்ப்ளி கவலை வெளியிட்டுள்ளார்.

பாடசாலைக் கிரிக்கெட்டில் கம்பளியும் (349) சச்சினும் (326) இணைந்து ஆட்டமிழக்காமல் 664 ஓட்டங்களைப் பெற்றனர். இதனைத் தொடர்ந்தே சச்சினும் கம்பளியும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார்.

இருப்பினும் சச்சின் பெற்ற இடத்தினை கம்ப்ளியால் தொடர்ந்து பெறமுடியாதது துரதிஷ்டமே. இந்நிலையில் அண்மையில் சச்சின் பெரும் புகழுடன் தனது 200ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற சச்சின் டென்டுல்கரின் பிரியாவிடை பேச்சு பலரையும் மனமுருக வைத்தது.

ஆனால் சச்சினின் சிறுவயது நண்பர் கம்ப்ளியை ஆழமாக கவலையடைச்செய்துள்ளது.

இது குறித்து வினோத் கம்ப்ளி கூறுகையில், சச்சின் பிரியாவிடைப் பேச்சில் எனது பெயரும் இடம்பெற்றிருக்கலாம் என நான் விரும்புகிறேன். ஏனெனில் குறைந்தது எங்களது உலக சாதனை இணைப்பாட்டம் குறித்து குறிப்பிடுவார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஏனெனில் அங்கிருந்துதான் நாங்கள் ஆரம்பித்தோம். அது எமது எதிர்காலத்தை திருப்பிப்போட்ட இன்னிங்ஸ். உண்மையில் நான் மிகவும் கவலையடைந்தேன் என தொலைக்காட்சி சனல் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக