நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 29 நவம்பர், 2020

காரை வழிமறித்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட அணுவிஞ்ஞானி

காரை வழிமறித்து ஈரானின் ராணுவ ஆலோசகரும், மூத்த அணு விஞ்ஞானியுமான மொஹ்சென் பக்ரிசாதே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது. இதனால், ஈரான் தலைவர்கள் அதிர்ச்சி 
அடைந்துள்ளனர். இந்த படுகொலையால் ஆவேசம் அடைந்துள்ள ஈரான் அதிபர் ரவுகானி, ‘இதற்கு சரியான நேரத்தில் பழி தீர்ப்போம்’
 என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘ராணுவத்தினர் பதுங்கிப் பாய்ந்து தாக்குவது போல, ஒரு விஞ்ஞானியை மறைந்திருந்து வழி மறித்துக் கொன்றுள்ளனர். கவனமாகத் திட்டமிட்டு இந்த படுகொலை நடந்துள்ளது. பக்ரிசாதேவை கொன்று விட்டதால் ஈரானின் அணுசக்தித் திட்டம் முடங்கி விடாது. மேற்கத்திய நாடுகள் ஈராக்கின் அணுசக்தி
 திட்டத்தின் மீது கொண்டுள்ள பயத்தையே 
இந்த தாக்குதல் காட்டியுள்ளது. பக்ரிசாதே படுகொலைக்கு உரிய நேரத்தில் பழி தீர்க்க்பபடும்,’’ என்றார். இந்த படுகொலைக்கு 
இஸ்ரேல் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் சந்தேகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி 
வரும் ஈரான் அணுசக்தி திட்டத்தின் சூத்ரதாரி பக்ரிசாதே. டெக்ரானிலிருந்து 40 கிமீ தொலைவிலுள்ள கிழக்குப் பகுதியில் 28-11-20.அன்று  காரில் சென்று கொண்டிருந்தார் பக்ரிசாதே.அ.ப்போது 
வெடிபொருட்கள் கொண்ட ஒரு பழைய லாரி அவரது கார் அருகில் வந்து பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த
 அவரது ஓட்டுநர் காரை நிறுத்தியுள்ளார். அப்போது
 மறைந்திருந்த ஆயுதம் தாங்கிய 5 பேர் காரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் பக்ரிசாதே உயிரிழந்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 24 நவம்பர், 2020

இந்தியா மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது

இந்திய அரசு மேலும் 43 சீன செயலிகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பதாக 24-11-20.இன்று (செவ்வாய்க்கிழமை)  அறிவித்துள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு 69-ஏ பிரிவுக்கு உட்பட்டு இந்த அரசாணை 
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செயலிகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடும் காரணத்தால் முழுவதுமாக தடை செய்யப்படுகின்றன என்று அரசாணையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது,
உட்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் விரிவான அறிக்கைகள் பெறப்பட்டே இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருடம் ஜூன் 29ஆம் திகதி 59 செயலிகளும் செப்டம்பர் இரண்டாம் திகதி 118 செயலிகளும் இதே சட்டப்பிரிவின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திடீரென பிரான்ஸில் தன்னார்வலர்களால் அமைக்கப்பட்ட அகதி முகாம்கள்

பிரான்ஸில் திடீரென பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் இணைந்து, அகதி முகாம்களை அமைத்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Place de la République என்ற பகுதியில் 23-11-20.அன்று  (திங்கட்கிழமை) மாலை மாலை 7 மணி அளவில் இங்கு வந்து சேர்ந்த பல நூறு வரையான தன்னார்வ தொண்டர்கள், சிறிய கூடாரங்களை அமைத்து அதற்குள் இருந்து 
ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கிருந்த கூடாரங்களை அப்புறப்படுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கடந்த வார இறுதியில் செந்தனியில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை அரசாங்கம் வெளியேற்றியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் 
இடம்பெற்றது.
அகதிகளுக்கான போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் அவர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக குற்றம் சாடிய அமைப்பினர், விரைவில் அவர்களுக்கான பாதுகாப்பான தங்குமிடத்தை அமைத்துக்கொடுக்கும்
 படியும் கோரினர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 16 நவம்பர், 2020

பராக் ஒபாமா பதில் என் மனைவி என்னைப் பிரிந்து சென்றுவிடுவார்

ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம் பெற்றால் தனது மனைவி பிரிந்து சென்று விடுவார் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 
தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று தெற்காசியாவை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை 
அதிபராகிறார்.
இதனால், அடுத்த ஆண்டு ஜனவரியில் பைடன் புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறுவது பற்றி ஒபாமாவிடம் கேள்வி
 எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஒபாமா, பைடனுக்கு எனது ஆலோசனை தேவைப்படாது. அவர் தனது அமைச்சரவையில் எனக்கு
 ஓரிடம் அளிக்கிறார் என்றால், அதில் நான் இடம் பெறமாட்டேன். ஒருவேளை பைடன் அமைச்சரவையில் சேர்ந்து 
விட்டால், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விடுவார் என ஒபாமா அச்சம் தெரிவித்து உள்ளார்.
ஆனால், பைடனுக்கு தன்னால் முடியும் பட்சத்தில் உதவி செய்வேன் என்று ஒபாமா உறுதியுடன் கூறியுள்ளார். வெள்ளை மாளிகை பணியாளராக உடனடியாக செயல்பட நான் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என்றும் ஒபாமா என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 44வது அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. இவரது தலைமையின் கீழ் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை துணை அதிபராக பைடன் இருந்தார் என்பது 
குறிப்பிடத்தக்கது.

 இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 14 நவம்பர், 2020

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய 
உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவக்கிரி http://lovithan.blogspot.com/ இணையம் நவக்கிரி.கொம் நவக்கிரி நவக்கிரி .கொம்    .நிலாவரை.கொம்  இணையங்களின் 
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேசங்களில் வாழும் அனை வரும்
 கொண்டாடி மகிழ்வார் 
 ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். 
மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.
வாழ்கவளமுடன் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 9 நவம்பர், 2020

தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை, அவரது மனைவி மெலானியா விவாகரத்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை, அவரது மனைவி மெலானியா விவாகரத்து செய்ய உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்புக்கும் அவரது மூன்றாவது மனைவி மெலானியாவுக்கும் இடையே மனக் கசப்பு இருந்ததாகவும் ட்ரம்ப் அதிபராக இருக்கும் போது விவகாரத்து பெற்றால் தான் தண்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் தற்போதுவரை காத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலானியா விவாகரத்து செய்வார் என, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
 தெரிவித்துள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 6 நவம்பர், 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களம்..வெள்ளை மாளிகையை கைப்பற்றப் போவது யார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என மாநில செயலாளர் கெத்தி புக்வோர் தெரிவித்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
பைடனுக்கு 50.4 வீத வாக்குகள் கிடைத்துள்ள 
நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி ட்ரம்பிற்கு 47.9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.பைடன் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு ஆறு 
வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது.வாக்கு எண்ணும் பணிகளில் முறைக்கேடு நடந்துள்ளதாகவும் அதனால் மீள தேர்தலை நடத்துமாறும் கோரும் ட்ரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.அதனடிப்படையில் 
எலெஸ்கா மாநிலத்தில் 3 தேர்தல் தொகுதிகளும், ஜோர்ஜியா மாநிலத்தில் 16 தேர்தல் தொகுதிகளும், நெவாடா மாநிலத்தில் 6 தேர்தல் தொகுதிகளும், வட கரோலினா மாநிலத்தில் 15 தேர்தல் தொகுதிகளும் 
மற்றும் பென்சில்வேனியா மாநிலத்தில் 20 தேர்தல்கள் உள்ளனஆகவே இந்த ஐந்து மாநிலங்களின் முடிவுகளின் முடிவைப் பொறுத்தே இறுதி முடிவு அமையும் என கூறப்படுகின்றது.
பைடன் ஓரளவு முன்னிலை வகிக்கும் நெவாடா மாநிலம் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அதிலும், குறிப்பாக 20 தேர்தல் வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி 
பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இங்கு ஆரம்பத்தில் ட்ரம்ப் 1,08,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார்.இதனால், ஜோ பைடன் பென்சில்வேனியாவில் நிச்சயம் வெற்றி பெறுவார் என ஜனநாயக கட்சி பிரசாரக்குழு 
கூறுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி 
முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என
 மாநில செயலாளர் தெரிவித்துள்ளர் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 5 நவம்பர், 2020

தேர்தல்..2020- பராக் ஒபாமாவின் சாதனையை முறியடித்து வெற்றி நடை போடும் ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், ஜோ பிடன் 264 தேர்தல் சபை வாகுகளுடன் முன்னிலையில் உள்ளார்.தற்போதுவரை
 ஜோ பிடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271 (50.3%)என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை 67,567,559 (48%) வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளைவிடவும், 2012-ல் அதிபர் பராக் ஒபாமா பெற்ற வாக்குகளைவிடவும் அதிகமாகும்.வாக்குகளை
 பெறுவதில் ஜோ பிடன் சாதனை 
புரிந்தாலும், தேர்தல் சபை வாக்குகள் அடிப்படையில் அதிபர் தேர்வு நடைபெறுவதால், இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தங்கள் வேட்பாளரே இறுதியில் ஆட்சியை
 கைப்பற்றுவார் என கூறி வருகின்றனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெள்ளை மாளிகையை கைப்பற்ற, ஒரு அமெரிக்க
 வேட்பாளர் மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில் 270 ஐ வெல்ல வேண்டும். நவம்பர் 3 ம் திகதி தேர்தல் நாளுக்கு முன்னதாக 10 கோடி அமெரிக்கர்கள் வாக்களித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 4 நவம்பர், 2020

விண்வெளியிலிருந்து அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்தர் கேட் ரூபின்ஸ்

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்தே இரண்டாவது முறையாக பதிவுசெய்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான தனது வாக்க‍ை விண்வெளியிலிருந்து பதிவுசெய்தார் ரூபின்ஸ். குறை புவி சுற்றுப்பாதையில் இருந்துகொண்டு இவர் தனது வாக்கைப் ப
திவுசெய்தார்.¨

நிலாவரை.கொம் செய்திகள் >>>





ஞாயிறு, 1 நவம்பர், 2020

பிரித்தானியா..அடுத்த வாரம் முழுமையாக லொக்டவுணுக்கு செல்கிறது

அதிதீவிரமாக மாறும் கொரோனா.. வேறு வழியில்லாமல் அடுத்த வாரம் முதல் நாடு தழுவிய ரீதியில் லொக் டவுனை அறிவிக்க பொறிஸ் ஜேன்சன் தயாராகி வருவதாக  செய்திகள் வெளியாகி உள்ளது. இது நாள் வரை லொக் டவுன் என்னும் பிரச்சனை
 இழுபறி நிலையில் இருந்தது.
ஆனால், மருத்துவ விஞ்ஞானிகள் கொடுத்த அறிக்கை ஒன்றை முற்றாக படித்துப் பார்த்த பிரித்தானிய பிரதமர், லொக் டவுன் ஒன்றை கொண்டு வந்தால் தான், நிலையை கட்டுப்பாட்டினுள் கொண்டு
 வர முடியும் என்ற முடிவை எட்டியுள்ளார் என்று சற்று முன்னர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அரசை மேற்கோள் காட்டி, பிரித்தானிய MP க்கள் பலர் லொக் டவுனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். காரணம் என்னவென்றால், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நாடுகளில் அரசின் திறைசேரியில் பணம் இல்லை என்பது தான். இந்த 2 நாடுகளும் ஏற்கனவே வங்குரோத்தில் சென்று தற்போது கடன்கார நாடாக 
மாறியுள்ளது
. எனவே பிரித்தானியாவையும் லொக் டவுன் செய்தால், பிரித்தானியா பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என பல MP க்கள் கருத்து 
தெரிவித்து வந்தார்கள்.இன் நிலையில் தான், மருத்துவ விஞ்ஞானிகளின் அறிக்கை ஒன்று வெளியாகி, உண்மை 
நிலையை உணர்த்தியுள்ளது.
 இதனால் அடுத்த வாரம் முழு அளவிலான லொக் டவுன் வரப்போகிறது.. பிரித்தானிய மக்களே  பிரித்தானியத்தமிழ்மக்களே .உங்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து 
வைத்தால் நல்லது

நிலாவரை.கொம் செய்திகள் >>>