நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 30 நவம்பர், 2021

மியாமில் விமானத்தை இறக்க உதவும் சக்கரத்தில் பதுங்கியிருந்த மர்ம நபர்

விமானத்தின் தரையிறங்கும் கியரில் மர்ம நபர் ஒருவர் பதுங்கிருந்ததும், அவர் அந்த கியரில் வெளியாகும் அதிகப்படியான வெப்பத்தை எவ்வாறு தாங்கினார் என்பது பெரும் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது.
26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் விமானத்தின் தரையிறங்கும் கியரில் மறைந்திருந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் 27-11-2021.அன்று  Guatemala வில் இருந்து மியாமிக்கு சென்றது. காலை 10 மணிக்கு மியாமி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
அப்போது விமானத்தின் லேண்டிங் கியருக்குள் (விமானத்தை இறக்க உதவும் சக்கரம்) Guatemala-வைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க நபர் பதுங்கியிருப்பது அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.
இவற்றையெல்லம் தாண்டி குறித்த நபர் எப்படி வந்தார் என்று அதிகாரிகளுக்கே வியப்பாக இருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக வைத்தியர்களை அழைத்து அவரை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு காயங்கள் 
எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து அவர் உள்ளூர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும் பிடிபட்ட நபர் யார்? அவர் எப்படி பதுங்கியிருந்தார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை 
வெளியாகவில்லை.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


 

புதன், 17 நவம்பர், 2021

தொடர்மழையால் கனடாவில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

னடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையால் நிலச்சரிவு ஏற்பட்டமையின் காரணமாகப் பலபகுதிகளில் வீதிகள் மூடப்பட்டுள்ளது.
அங்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் ஒரு நகர மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் அப்பகுதியினூடாக செல்லும் எண்ணைக் குழாய்களும் மூடப்பட்டுள்ளன
வான்கூவருக்கு வடகிழக்கே உள்ள மெரிட் நகரத்திலேயே அங்கு வசிக்கும் 7100 பேரும் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>