நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 23 மார்ச், 2014

வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி


அமெரிக்காவின் கொலம்பியா புறநகர் பகுதியான பால்டிமோரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று ஒரு மர்ம ஆசாமி புகுந்து, அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து எதிர் தாக்குதல் நடத்தினர்.இந்த துப்பாக்கி சூட்டில் உள்ளிட்ட 3 பேர் இறந்தனர். இதில் ஒருவன் அருகில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்து கிடந்தது. எனவே, அவன் தாக்குதல் நடத்திய ஆசாமியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது வணிக வளாகம் முழுவதும் பாதுகாப்பாக இருப்பதாகவும், துப்பாக்கி சூடு நடந்தபோது உயிருக்குப் பயந்து கடைகளிலும், உணவகங்களிலும் பதுங்கிய மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 

சனி, 1 மார்ச், 2014

பல்பாருள் அங்காடியில் பந்தாடிய கத்தி


கனடாவின் எட்மன்டன் வடமேற்குப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இத்தாக்குதல் வெஸ்ரேன் குறொசர்ஸ் உள்ள பல்பொருள் அங்காடியில் நடைபெற்றுள்ளது. அங்கு 200 பேர்கள் வரையில் வேலை செய்கின்றனர்.

இச்சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதில் 29 வயதுடைய ஜேமி பசீக்கா என்ற பல்பொருள் அங்காடி ஊழியரே இக்கொலைக்கான சந்தேக நபர் என பொலிசாரால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது இந்த நபர் இரண்டு கத்திகள் வைத்திருந்ததோடு உடல் கவசமும் அணிந்திருந்ததாக அப்பகுதி இன்ஸ்பெக்டர் அலன் தெரிவித்துள்ளார்.
தற்போது கைதுசெய்யப்பட்ட நபர் 2009ம் ஆண்டில் கொலை குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்ததாக கூறப்படுகின்றது.