நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 23 மார்ச், 2014

வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி


அமெரிக்காவின் கொலம்பியா புறநகர் பகுதியான பால்டிமோரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று ஒரு மர்ம ஆசாமி புகுந்து, அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து எதிர் தாக்குதல் நடத்தினர்.இந்த துப்பாக்கி சூட்டில் உள்ளிட்ட 3 பேர் இறந்தனர். இதில் ஒருவன் அருகில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்து கிடந்தது. எனவே, அவன் தாக்குதல் நடத்திய ஆசாமியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது வணிக வளாகம் முழுவதும் பாதுகாப்பாக இருப்பதாகவும், துப்பாக்கி சூடு நடந்தபோது உயிருக்குப் பயந்து கடைகளிலும், உணவகங்களிலும் பதுங்கிய மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக