நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 1 மார்ச், 2014

பல்பாருள் அங்காடியில் பந்தாடிய கத்தி


கனடாவின் எட்மன்டன் வடமேற்குப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இத்தாக்குதல் வெஸ்ரேன் குறொசர்ஸ் உள்ள பல்பொருள் அங்காடியில் நடைபெற்றுள்ளது. அங்கு 200 பேர்கள் வரையில் வேலை செய்கின்றனர்.

இச்சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதில் 29 வயதுடைய ஜேமி பசீக்கா என்ற பல்பொருள் அங்காடி ஊழியரே இக்கொலைக்கான சந்தேக நபர் என பொலிசாரால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது இந்த நபர் இரண்டு கத்திகள் வைத்திருந்ததோடு உடல் கவசமும் அணிந்திருந்ததாக அப்பகுதி இன்ஸ்பெக்டர் அலன் தெரிவித்துள்ளார்.
தற்போது கைதுசெய்யப்பட்ட நபர் 2009ம் ஆண்டில் கொலை குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்ததாக கூறப்படுகின்றது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக