நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

வயிற்றில் 50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்

அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் வந்த பெண்ணின் வயிற்றில் 400 கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து அரபு எமிரேட்டுக்கு சொந்தமான ஒரு விமானம் துபாய் வழியாக ஹைதராபாத்துக்கு நேற்று வந்துள்ளது.
அதில் பயணித்த மூசா (32) என்ற பெண்ணுக்கு விமானத்தில் வரும்போதே கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஹைதராபாத்தில் விமானம் தரையிறங்கியதும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவரது வயிற்றை ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில் அவரது வயிற்றில் சிறிய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து 4 சிறிய வகை பாக்கெட்டுகளில் 400 கிராம் கொண்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள ‘பிரவுன் சுகர்’ என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சிகிச்சைக்கு பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்றும், அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்படும் என்றும் 
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

எம்மவர் கோன் திரைப்படம் வெளியிடப்படுகிறது (29.08.2015)

கனடா மொன்றியல் எம்மவர் முழு நிளத்திரைப்படம் வெளியாக உள்ளது அதன் அழை தயாரிப்பாளரால் விடப்பட்டுள்ளது அன்பார்ந்த கனடா வாழ் தமிழ் மக்களே Jena K Siva இயக்கிய திரைப்படம் KONN திரையிடல் எதிர்வரும் Saturday August 29th,2015 at 9:00pm at Decari cinema. உங்கள் அனைவரது ஆதரவும் “Konn” திரைப்படத்திற்கு கிடைக்கும் என நம்புகின்றோம்.அந்த அழைப்புக்காணொளியை இங்கே காணலாம்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 26 ஆகஸ்ட், 2015

இளவரசராக மாற ஆசைப்பட்ட வாலிபர்: வீதியில் உலா வந்த விநோதம் (காணொளி இணைப்பு)

 
அமெரிக்க வாலிபர் ஒருவர், பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜ் போன்று ஆடையணிந்து அதனை காணொளி வடிவில் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதியினரின் மூத்த மகன் ஜோர்ஜ் ஆவார்.

ஊடகங்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தது இவர் மட்டுமல்ல, இவர் அணியும் ஆடைகளும் தான். பிரித்தானியாவின் ஜிக்பு என்ற பத்திரிகை, சிறந்த ஆடையணியும் ஆணாக இளவரசர் ஜோர்ஜை 49வது இடத்தில் தெரிவு செய்தது.

இந்நிலையில், இவரது ஆடைகளால் கவரப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த மேக்ஸ் க்னோப்லாச்(23) என்பவர், ஜோர்ஜ் போன்று ஒருவாரத்திற்கு ஆடையணிந்து இளவரசராக நியூயோர்க் நகரில் உலா வந்துள்ளார்.

ஆனால், ஜோர்ஜ் போன்ற ஆடைகள் கிடைக்காவிட்டாலும், ஏறத்தாழ அதே மாதிரியான ஆடைகளை அணிந்துகொண்ட இவர், அதனை காணொளி எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மேக்ஸ் கூறியதாவது, இளவரசரை போன்று வாழ முயற்சிசெய்வதும் ஜாலியாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



 

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

வாலிபர் நிர்வாணபடுத்தப்பட்டு தாக்கபட்டார்???

மங்களூர் மார்க்கெட்டில் இந்து மத பெண் பெண் ஒருவரிடம்  பேசி கொண்டிருந்த  இஸ்லாமிய வாலிபர் ஒருவர் நிர்வாணபடுத்தப்பட்டு  கைகள் கட்டபட்டு கடுமையாக தாக்கபட்டார்.  
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சமபவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.லோக்கல் டெலிவிஷன் சேனல் இதனை படம் பிடித்தனர்.  வாலிபரை தாக்கிய பஜ்ரங் தள தொண்டர்கள் 14 பேர் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கபட்ட மனிதர் அங்குள்ள ஒரு கடையின் மானேஜர் ஆவார். அந்த பெண் அதே கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். 
இது குறித்து பாதிக்கபட்டவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். அதில் அந்த பெண் சம்பள முன்பணமாக ரூ.2 ஆயிரம் கேட்டு உள்ளார்.நாங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றோம் அப்போது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதாக கூறினார்.அந்த பெண்  எந்த வித பாதிப்பும் இல்லாமல் தப்பி விட்டார் அந்த பெண்ணிற்கு பாதுகாப்புக்காக வந்த நான்  தண்டிக்கபட்டு உள்ளேன்.என கூறினார்.
கடந்த காலங்களில் பஜ்ரங்க்தளம்,ஸ்ரீராம சேனா, இந்து ஜகரன வேடிக்கி  மற்றும் இஸ்லாமிய குழுக்கள்  பாப்புலர் பிரண்ட் அப் இந்தியா,ஆகியவை மங்களூர், உடுப்பி, ஹொன்னவர, பதக்கல்,கார்வார் ஆகிய பகுதிகளில் மோதி கொண்டுள்ளன.
கர்நாடகாவில் 2008 முதல் 2013 பாரதீய ஜனதா ஆட்சியின் போது இந்து குழுக்கள்  பல குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம்  சாட்டி உள்ளனர்.எனினும் இன்னும் இது போன்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட வில்லை என தெரிகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து???

கிழக்கு சீனாவின் ஷான்டங் மாகாணத்தில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து அங்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹீவண்டாய் கவுண்டியில் உள்ள ரங்சிங் என்ற நிறுனத்திற்குச் சொந்தமானான ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
ரசாயன பொருட்கள் இருந்த கிட்டங்கியில் தீவிபத்து ஏற்பட்டதால் பலத்த சத்ததுடன் ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதாக 
கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் தயாரிக்கும் ரசாயனமானது நெருப்பு பட்டால் வேதியல் மாற்றம் ஏற்பட்டு நச்சு வாயுவை உருவாக்கும் என அப்பகுதியில் உள்ள கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக தங்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்துள்ளனர்.
முதற்கட்ட தகவலின் படி, உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவர்களை மீட்டு போதிய முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 12-ம் தேதி, இதேபோன்று நடந்த ரசாயன விபத்தில் 121 பேர் உயிரிழந்தது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 20 ஆகஸ்ட், 2015

ஒரே கிராமத்தை சேர்ந்த 2000 மக்கள் இரவில் திடீர் மாயம்:

கனடாவில் அமைந்துள்ள Angikuni Lake என்ற ஏரியின் அருகே, Angikuni என்றழைக்கப்பட்ட கிராமத்தில் வாழ்ந்த 2000 குடியிருப்புவாசிகள் மாயமான சம்பவம் மர்மமாகவே நீடிக்கிறது.
Angikuni கிராமத்தில் சுமார் 2000 எஸ்கிமோக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் விலங்கின் தோல்களை விற்று அதன் மூலம் தங்கள் வாழ்வை நடத்தி வந்துள்ளனர்.
எனவே அவர்கள் விலங்கை வேட்டையாடுவதற்காக வேட்டை நாய்களையும் வளர்த்து வந்துள்ளனர்.
அந்த கிராமத்தினரிடம் இருந்து விலங்கின் தோல்களை வாங்கி செல்ல எண்ணற்ற வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், அந்த கிராமத்தில் கடந்த 1930ம் ஆண்டு, நவம்பர் மாத பனி காலத்தில் ஒரு வினோத சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
அன்று கனடாவை சேர்ந்த ஜோ லேபலே என்னும் விலங்கு தோல் சேகரிக்கும் நபர், அந்த கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அவர் அந்த கிராமத்தை அடைந்த போது அங்கு ஒரு அமானுஷ்ய அமைதி மட்டுமே நிலவியுள்ளது.
ஜோ லேபலே கண்ணில் ஒரு கிராம வாசி கூட காணப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்த அவர்களது கூடாரங்களை தேடி சென்றுள்ளார்.
தெருக்கள் மட்டுமல்லாமல் அனைத்து கூடாரங்களும் ஆட்கள் இல்லாமல் காலியாகவே இருந்துள்ளது.
மேலும் அவர்கள் வளர்த்த வேட்டை நாய்கள் ஒன்று கூட அந்த கிராமத்தில் இல்லை.
வறுமை மற்றும் பஞ்சம் காரணமாக அவர்கள் அந்த கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்திருக்கலாம் என்று நினைத்த அவர், அவர்களுடைய தானிய கிடங்கினை சோதனையிட்டுள்ளார்.
ஆனால் அங்கிருந்த அனைத்து கூடாரங்களிலும் போதுமான அளவில் உணவும், மீன்களும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்துள்ளன.
இதனால் மேலும் குழப்பமும் அதிர்ச்சியும்டைந்த ஜோ, கிராமத்தினரின் காலடி தடங்கள் எதுவும் உள்ளதா அதன் மூலம் அவர்கள் எந்த திசையில் சென்றார்கள் என்று அறிய அந்த பனி பிரதேசத்தில் தேடியுள்ளார்.
ஆனால் எங்குமே அந்த கிராமத்தினரின் கால் தடங்கள் கூட இல்லாதது மேலும் அவரது அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது.
பயத்தில் தந்தி அலுவலகம் நோக்கி ஓட்டமெடுத்த அந்த நபர், கனடிய பொலிசாருக்கு நடந்த சம்பவத்தை பற்றி தந்தி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர். எவ்வித தடையமும் கிடைக்காததை அடுத்து பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டு சோதனை நடந்துள்ளது.
அப்போது அந்த பனி பிரதேசத்தின் குறிப்பிட்ட இடத்தில், 12 அடி ஆழத்தில் வேட்டை நாய்கள் அனைத்தும் பட்டினியால் இறந்து கிடந்தது தெரியவந்தது.
மேலும் அங்கிருந்த கல்லறைகளை தோண்ட முயற்சித்த போது, பனிக்கட்டிகள் பாறையை விட கடுமையாக இருந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த கல்லறைகள் அனைத்தும் காலியாக இருந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு புதைக்கப்பட்டிருந்த உடல்கள் யாரால், எதற்காக அகற்றப்பட்ட்து என்ற சந்தேகம் எழுந்தது.
எனவே இந்த வினோத சம்பவத்தில் வேற்றுக் கிரகவாசிகளின் தொடர்பு இருக்கலாம் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் தோன்ற தொடங்கியது.
பல நாட்களாக தேடியும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், அந்த கிராம வாசிகள் சமைத்த உணவை வைத்து அவர்கள் 2 வாரங்களுக்கு முன்பாகவே சென்றிருக்கலாம் என்று பொலிஸ் கூறினர்.
அப்படியெனில் பனியால் சூழ்ந்த அந்த கிராமத்தில் ஜோ நுழைந்த போது, எரிந்த தீப் பந்தங்கள் யாரால் கொளுத்தப்பட்டது என்பது போன்ற எண்ணற்ற விடை தெரியா கேள்விகள் மிச்சம் இருந்தன.
இந்த சம்பவம் உண்மை சம்பவம் அல்ல என்றும், புனைவு கதை தான் என்றும் கூறப்படுவதால் எது உண்மை என்ற முடிவுக்கு வருவதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பாலியல் சித்ரவதை செய்து குதிரையை குத்தி கொன்ற மர்ம நபர்:???

பிரித்தானிய நாட்டில் பெண் குதிரை ஒன்றை பாலியல் சித்ரவதை செய்து கொடூரமாக குத்தி கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஸ்கொட்லாந்தில் உள்ள அபெர்டீன்ஷைர் நகரை சேர்ந்த சோ ரைட் என்ற பெண்மணி வசித்து வருகிறார்.

குதிரைகள் மீது அதிக பிரியம் கொண்ட இவர், பிளேஸ் எனப் பெயரிடப்பட்ட ஒரு பெண் குதிரையை கடந்த 18 ஆண்டுகளாக செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 17ம் திகதி இரவு வேளையில், அவரது பண்ணைக்கு நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவன் வந்துள்ளான். பின்னர், அங்கு கட்டப்பட்டு இருந்த குதிரைக்கு பாலியல் ரீதியில் சித்ரவதை அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த மர்ம நபர் குதிரையின் மார்பில் சரமாரியாக கத்தியால் குத்தியதில் குதிரை மயங்கியுள்ளது.

மறுநாள் காலையில், தனது குதிரை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த சோ ரைட் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பின்னர், தன்னுடைய குதிரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதால், குதிரை உரிமையாளர்கள் தங்களது குதிரைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த பெண் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளார்.

குதிரையை கொன்ற நபரை கண்டுபிடிக்கும் முயற்சிக்காக அவருக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் 1000 பவுண்ட் நிதியை வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய New Pitsligo நகர பொலிசார், பெண் அளித்துள்ள புகாரை தொடர்ந்து குற்றவாளியை தேடி வருவதாகவும், குதிரையை கொடூரமாக கொன்று மற்ற விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த மர்ம நபர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பயங்கர குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்து கோயிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது. இதில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
இதனை பாங்காக் போலீஸாரும், மீட்புப் படையினரும் தெரிவிக்க, அரசு தரப்பும் உறுதி செய்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை 27 என்று வேறு சில அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன, காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்கள் சிலரும் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இன்று மாலை 6.30 மணியளவில் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் பெருமளவில் கோயிலுக்கு வந்திருந்த நேரத்தில் மோட்டார்சைக்கிள் வாகனத்திலிருந்து குண்டு வெடித்தது.
முதல் குண்டு கோயில் வளாகத்தினுள் இருந்தது. இரண்டாவது குண்டு வளாகத்துக்கு எதிர்ப்புறம் இருந்தது.
“இப்போதைக்கு கூற முடிவதெல்லாம் மோட்டார்சைக்கிள் குண்டு வெடித்தது இதில் பலர் பலியாகியுள்ளனர், விவரங்களை இப்போதைக்கு என்னால் தெரிவிக்கவியலாது” என்று தாய்லாந்து உயர் போலீஸ் அதிகாரி அங்சானனந்த் என்பவர் தெரிவித்தார்.
இதில் 12 பேர் பலியாகியுள்ளனர், 78  பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்புப் பகுதியில் இருந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், மனித உடல் பாகங்களும் ரத்தம் தோய்ந்த சதைகளும் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்ததாக தெரிவித்துள்ளது. 2-வது குண்டு வெடிக்கலாம் என்ற சந்தேகம் எழ அங்கு பரப்பரப்பு கூடியது.
இந்தக் குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்த இந்த நாசவேலை செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிண்ட்லோம் மாவட்டத்தில் புகழ்பெற்ற எரவான் என்ற இந்தக் கோயிலுக்கு சுற்றுலாப்பயணிகள், குறிப்பாக கிழக்காசிய பயணிகள் வருவது வழக்கம், உள்ளூர் தாய்லாந்து வாசிகளுக்கும் பிடித்தமான ஒரு தலம் இது. இது இந்துக் கடவுள் பிரம்மாவுக்கான கோயில் என்றாலும் தினசரி ஆயிரக்கணக்கான பவுத்தர்களும் இங்கு வழிபாடு செய்ய வருகின்றனர்.
பாங்காக்கின் வணிகவீதியில் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களுக்கு இடையே பிரம்மா கோயிலுக்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

மத்திய தரைக்கடல் பகுதியில் கரை ஒதுங்கிய உடல்கள்???

ஐரோப்பா நோக்கி பயணப்பட்ட அகதிகள் குழு ஒன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவர்களில் சிலரது உடல்கள் லிபியா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது பதைபதைக்க வைத்துள்ளது. லிபியாவின் ஜுவாரா பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் பார்ப்பவர்கள் மனதை உலுக்குவதாக மட்டுமின்றி அகதிகள் படும் அவஸ்தைகளை 
வெளிச்சமிட்டு காட்டுவதாக உள்ளது. கரை ஒதுங்கிய சில உடல்களில் கடல் அரித்தது போக வெறும் எலும்புகளே காணப்படுகிறது, இருந்தும் அணிந்திருந்த உடைகள் அப்படியே உள்ளன.
மக்கள் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும்போது மட்டுமே புலம் பெயர ஆயத்தமாகிறார்கள், இது பாரிய கொடுமை என லிபியாவின் சுகாதாரத்துறை தலைவர்
 தெரிவித்துள்ளார். கடந்த சனியன்று லிபியா அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் அதிக பயணிகளுடன் பயணித்த படகிலிருந்த 40க்கும் மேற்பட்ட அகதிகள் மூச்சுத்திணறலால் மடிந்துள்ளனர்-
அந்த படகானது 400க்கும் அதிகமானவர்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இத்தாலிய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த படகை நெருங்கும்போது அது கடலில் மூழ்கத்துவங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் பப்புவா அருகே மாயமானது

இந்தோனேசியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளது.
பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது விமானம் காணாமல் போனதை தேசிய மீட்புக்குழு உறுதி செய்ததாக ரொய்ட்டரில் செய்தி வெளியாகி உள்ளது.
விமானத்தின் சமிக்ஞைகளுக்காக காத்திருக்கும் அதேசமயம், அதனை தேடும் பணியையும் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
ட்ரைகானா விமான நிறுவனத்திற்கு சொந்தமான இந்த பயணிகள் விமானம், ஜெயபுராவின் சென்டானி விமான நிலையத்திற்கும் ஆக்சிபில் பகுதிக்கும் இடையே பயணித்துக் கொண்டிருந்த போதே தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் 44 பயணிகள், 5 குழந்தைகள் மற்றும் 5 ஊழியர்கள் இருந்ததாக தேசிய மீட்புக்குழு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் எயார் ஏசியா பயணிகள் விமானம் 162 பயணிகளுடன் இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்தனர்.
இதையடுத்து, விமான பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விமானம் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்! அதிக தமிழர்கள் போட்டியிடும் தேர்தல் களம்

கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பலத்த முக்கியத்துவம் பெறப் போகின்றது. 30 புதிய பாராளுமன்றத் தொகுதிகள் இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்தத் தொகுதிகள் 338 ஆக்கப்பட்டிருக்கின்றன.
கனடாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தமிழர்கள் இந்த முறை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக மூவரும் லிபரல் கட்சி, கண்சவேட்டிக் கட்சி சார்பாக தலா ஒவ்வொருவரும் போட்டியிடுகின்றனர்.
இத்தத் தேர்தல் கனடாவில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்ன? இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்கள் விபரித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 12 ஆகஸ்ட், 2015

தீவிரவாதிகளுடன் இணைய முயன்ற புதுமண தம்பதி கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவரவாத இயக்கத்தில் சேரும் திட்டத்துடன் துருக்கி நாட்டிற்கு புறப்பட்டு சென்ற புதுமண தம்பதியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவரவாத இயக்கத்தில் சேர 
திட்டமிட்டிருந்தனர். அங்கு சென்றடைவதற்காக முதலில் மிசிசிபி மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் இருந்து துருக்கியில் உள்ள இஸ்தாபுல் நகருக்கு செல்ல டிக்கெட்டுகளை கடந்த வாரம் வாங்கியுள்ளனர்.
ஸ்தான்புல் நகருக்கு சென்ற பின், அங்கிருந்து
 சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேரும் அவர்களது திட்டத்தை அறிந்த அமெரிக்க உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களின் ஒவ்வொரு செயல்களையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
 இந்நிலையில், துருக்கி புறப்படுவதற்காக கொலம்பஸ் விமான நிலையத்திற்கு வந்திருந்த அந்த புதுமண தம்பதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைதான புதுமண தம்பதியர் ஐ.எஸ்.ஐ.எஸ். ல் சேருவதற்காக துருக்கி செல்லவிருந்ததை ஒப்புக்கொண்டன்ர். சதிச்செயல், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவரவாத இயக்கத்தில் இணைதல், அவர்களுக்கு உதவ பொருட்களை வழங்க முயற்சித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டொர்செட் நகரத்தின் மேயராக 3 வயது சிறுவன் தேர்வு???

அமெரிக்காவின் வடக்கு மின்னசொட்டா மாகாணத்தின் டொர்செட் நகரத்தின் மேயராக 3 வயது சிறுவன் தேர்வு செய்யப்பட்டுள்ளான். இவனது 6வது சகோதரனும் இதற்கு முன் 2 ஆண்டுகளாக மேயராக இருந்துள்ளானாம்.அமெரிக்க தேர்தல் விதிமுறையின்படி, யார் வேண்டுமானாலும் ஒரு 
நகரத்தின் மேயராக போட்டியிடலாம். டொர்செட் நகரத்தில் 22 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நகரத்தின் மேயர் தேர்தல் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்றது. இதில் போட்டியிட்ட 3 வயது சிறுவன் ஜேம்ஸ், நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளான்
மேயர் தேர்தலை பொறுத்த வரை, ஒரு கூடையில் தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் சீட் எழுதி போடப்படும். குலுக்கல் முறையில் அவர்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர் அடுத்த ஓராண்டிற்கு அந்நகரத்தின் மேயராக இருப்பார். ஜேம்சின் சகோதரர் ராபர்டும் (6) இதே போன்று தேர்வு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் மேயராக இருந்துள்ளார்.
பால்மனம் மாறாத பச்சிளம் பாலகனான தற்போது மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜேம்சிற்கு, பத்திரிக்கையாளர்களிடம் எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அவரது சகோதரர் ராபர்ட் தான் பயிற்சி அளித்து வருகிறாராம். தனது மகன்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளதாக அவர்களது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

திடீர் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை தற்காலிமாக நிறுத்தம்

ஜம்முவில்- காஷ்மீர் பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அமர்நாத் யாத்திரை உடனே நிறுத்தப்பட்டது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தில்சமீபத்தில், 
கடும் மழை பெய்து வருகின்றது. பலத்த மழை காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அமர்நாத் யாத்திரை உடனே நிறுத்தப்பட்டது.
இந்த நிலச்சரிவு குறித்து, ஜம்மு போக்குவரத்துக் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் கோட்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உதம்பூர் மாவட்டத்தின் கேரி பகுதியில் கடும் மழை
 காரணமாக, கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் பாதுகாப்பு கருதி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதன் காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக 
நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு அடிவார முகாமிலும், அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. சாலை சீரமைப்புக்கு பின்பு, அமர்நாத் யாத்திரைக்கு 
அனுமதி வழங்கப்படும் என்றார்.
நிலாவரை

புதன், 5 ஆகஸ்ட், 2015

காட்டுத்தீயினால் 13 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் !!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், 20 இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். சான்பிரான்சிஸ்கோவில் 90 சதுர மைல் பரப்பில் தீ பரவி 
உள்ளது. காற்றும் கடுமையாக வீசி வருகிறது. 9 ஆயிரம் வீரர்கள் நேற்று முன்தினம் முதல், தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 24 வீடுகள்
 தீக்கிரையாகின.
விக்கி எஸ்ட்ரெல்லா என்பவர் பரவி வரும் காட்டுத்தீ பற்றி குறிப்பிடுகையில், “என் வாழ்நாளில் இப்படி ஒரு தீயை பார்த்தது கிடையாது. 300 அடி உயரத்துக்கு புகை மண்டலம் உருவாகி உள்ளது” என்றார். இந்த தீ விபத்தின் 
காரணமாக 13 ஆயிரம் பேரை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடுமாறு கலிபோர்னியா மாகாண நிர்வாகம் 
அறிவுறுத்தி உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கண்ணாடி துண்டுகள் சிறுநீர் கலந்த தண்ணீர் அருந்திய பெண்???

ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த யாஸிதி பெண் ஒருவர் தான் அனுபவித்த துயரங்கள் குறித்து விவரித்துள்ளார்.
யாஸிதி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினரோடு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
இந்நிலையில் அங்கிருந்து தப்பி வந்த அவர் தனது துயரங்கள் குறித்து கூறுகையில், எனது 4 வயது மகனுக்கு வாளை பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொடுத்தனர்.
பயிற்சி முகாமில் என்ன கற்றுக்கொண்டாய் என்று என் மகனிடம் கேட்கையில், கையால் கழுத்தை வெட்டுவது போன்று என்மகன் செய்து காட்டினான்.
மேலும், எனது 14 வயது மூத்த மகளை தீவிரவாதி ஒருவனுக்கு விற்றுவிட்டார்கள், 12 வயது மகனை ஜிகாதி பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
அவர்களின் பாதுகாப்பில் இருந்து நாங்கள் தப்பியோடாமல் இருப்பதற்காக தீவிரவாதிகள் எங்களுக்கு போதைப்பொருள் கலந்த உணவுகளை கொடுத்தனர்.
நாங்கள் குடிக்கும் தண்ணீரில் சிறுநீரும், உணவில் கண்ணாடி துண்டுகளும் கலந்திருக்கும் என்று தெரிவித்தள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






நடுத்தர வயதில் தந்தையானால் இளம் வயதில் மரணம் !!!

சமீபத்தில் பின்லாந்தை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், இளம் வயதில் தந்தையாகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக 
தெரியவந்துள்ளது. 25 
வயதிற்குள்ளாகவே திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்கள் மற்றவர்களைவிட இளம் வயதில் கணவன், தந்தை மற்றும் குடுமபத்
 தலைவர் போன்ற பொறுப்புகளை சுமக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் தங்கள் உடல் நலத்தை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். இது தான் நடுத்தர 
வயதில் மரணம் அடைவதற்கான காரணம் என கூறப்படுகிறது.
22 வயதில் தந்தை ஆகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 26 சதவீதம் உள்ளது என அந்த ஆய்வில் 
தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

உங்கள் நாட்டை முதலில் திருத்துங்கள்”:ஒபாமாவிற்கு பதிலடி???

ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்று உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபரான ஒபாமாவிற்கு கென்யா மற்றும் எத்தியோபிய இளைஞர்கள் சூடான கேள்விகள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதிபர் ஒபாமாவின் தந்தை பிறந்த நாடான கென்யாவிற்கு ஒபாமா சில தினங்களுக்கு முன்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து உரை நிகழ்த்தியுள்ளார்.
ஒபாமாவின் உரையில், ஆப்பிரிக்க மக்கள் மீது தனக்குள்ள அன்பு மற்றும் மனித உரிமைகளை பற்றி ஒபாமா உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.
கென்யாவில் உள்ள நைய்ரோபியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், ஒபாமாவின் உரை அந்நாட்டு மக்களிடையே எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒபாமாவின் உரை குறித்து பேசிய Shiferaw Tilahun(31) என்ற நபர், பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு மற்றவர்கள் பிரச்சனைகள் குறித்து தான் விவாதிக்க விரும்புவார்களே தவிர அவர்களுடைய பிரச்சனைகளை பற்றி விவாதிப்பதில்லை.
இன்று முதல் அமெரிக்காவில் குடியேறியுள்ள கருப்பின மக்கள் நிம்மதியான வாழ்க்கையை நடத்த முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.
Teresa Mbagaya(28) என்ற பெண் கூறுகையில், ஆப்பிரிக்க 
மக்களுக்கு ஒபாமா அறிவுரை கூறுவதற்கு முன் தன்னுடைய நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து விட்டு பிறகு அவர் எங்களை பற்றி அவர் கவலை கொள்ளட்டும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Alifie Amalia(37) என்ற பெண் கூறுகையில், கென்யாவில் இருக்கும் துப்பாக்கி வன்முறையை விட அமெரிக்காவில் தினந்தோறும் நிகழும் துப்பாக்கி சூடு எங்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்துகிறது என்றார்.
பள்ளி, தேவாலயம் என காணும் இடத்தில் எல்லாம் கருப்பின மக்களாகிய எங்கள் சகோதர, சகோதரிகளை சுட்டு கொல்லும் அந்த வன்முறையை தீர்த்து விட்டு பிறகு ஆப்பிரிக்க நாடுகள் மீது அமெரிக்கா கவனம் செலுத்தட்டும் என அவர் காரசாரமாக பதில் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>