நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 5 ஆகஸ்ட், 2015

காட்டுத்தீயினால் 13 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் !!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், 20 இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். சான்பிரான்சிஸ்கோவில் 90 சதுர மைல் பரப்பில் தீ பரவி 
உள்ளது. காற்றும் கடுமையாக வீசி வருகிறது. 9 ஆயிரம் வீரர்கள் நேற்று முன்தினம் முதல், தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 24 வீடுகள்
 தீக்கிரையாகின.
விக்கி எஸ்ட்ரெல்லா என்பவர் பரவி வரும் காட்டுத்தீ பற்றி குறிப்பிடுகையில், “என் வாழ்நாளில் இப்படி ஒரு தீயை பார்த்தது கிடையாது. 300 அடி உயரத்துக்கு புகை மண்டலம் உருவாகி உள்ளது” என்றார். இந்த தீ விபத்தின் 
காரணமாக 13 ஆயிரம் பேரை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடுமாறு கலிபோர்னியா மாகாண நிர்வாகம் 
அறிவுறுத்தி உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக