நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து???

கிழக்கு சீனாவின் ஷான்டங் மாகாணத்தில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து அங்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹீவண்டாய் கவுண்டியில் உள்ள ரங்சிங் என்ற நிறுனத்திற்குச் சொந்தமானான ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
ரசாயன பொருட்கள் இருந்த கிட்டங்கியில் தீவிபத்து ஏற்பட்டதால் பலத்த சத்ததுடன் ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதாக 
கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் தயாரிக்கும் ரசாயனமானது நெருப்பு பட்டால் வேதியல் மாற்றம் ஏற்பட்டு நச்சு வாயுவை உருவாக்கும் என அப்பகுதியில் உள்ள கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக தங்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்துள்ளனர்.
முதற்கட்ட தகவலின் படி, உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவர்களை மீட்டு போதிய முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 12-ம் தேதி, இதேபோன்று நடந்த ரசாயன விபத்தில் 121 பேர் உயிரிழந்தது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக