நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 12 ஆகஸ்ட், 2015

தீவிரவாதிகளுடன் இணைய முயன்ற புதுமண தம்பதி கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவரவாத இயக்கத்தில் சேரும் திட்டத்துடன் துருக்கி நாட்டிற்கு புறப்பட்டு சென்ற புதுமண தம்பதியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவரவாத இயக்கத்தில் சேர 
திட்டமிட்டிருந்தனர். அங்கு சென்றடைவதற்காக முதலில் மிசிசிபி மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் இருந்து துருக்கியில் உள்ள இஸ்தாபுல் நகருக்கு செல்ல டிக்கெட்டுகளை கடந்த வாரம் வாங்கியுள்ளனர்.
ஸ்தான்புல் நகருக்கு சென்ற பின், அங்கிருந்து
 சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேரும் அவர்களது திட்டத்தை அறிந்த அமெரிக்க உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களின் ஒவ்வொரு செயல்களையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
 இந்நிலையில், துருக்கி புறப்படுவதற்காக கொலம்பஸ் விமான நிலையத்திற்கு வந்திருந்த அந்த புதுமண தம்பதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைதான புதுமண தம்பதியர் ஐ.எஸ்.ஐ.எஸ். ல் சேருவதற்காக துருக்கி செல்லவிருந்ததை ஒப்புக்கொண்டன்ர். சதிச்செயல், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவரவாத இயக்கத்தில் இணைதல், அவர்களுக்கு உதவ பொருட்களை வழங்க முயற்சித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக