நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

மத்திய தரைக்கடல் பகுதியில் கரை ஒதுங்கிய உடல்கள்???

ஐரோப்பா நோக்கி பயணப்பட்ட அகதிகள் குழு ஒன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவர்களில் சிலரது உடல்கள் லிபியா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது பதைபதைக்க வைத்துள்ளது. லிபியாவின் ஜுவாரா பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் பார்ப்பவர்கள் மனதை உலுக்குவதாக மட்டுமின்றி அகதிகள் படும் அவஸ்தைகளை 
வெளிச்சமிட்டு காட்டுவதாக உள்ளது. கரை ஒதுங்கிய சில உடல்களில் கடல் அரித்தது போக வெறும் எலும்புகளே காணப்படுகிறது, இருந்தும் அணிந்திருந்த உடைகள் அப்படியே உள்ளன.
மக்கள் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும்போது மட்டுமே புலம் பெயர ஆயத்தமாகிறார்கள், இது பாரிய கொடுமை என லிபியாவின் சுகாதாரத்துறை தலைவர்
 தெரிவித்துள்ளார். கடந்த சனியன்று லிபியா அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் அதிக பயணிகளுடன் பயணித்த படகிலிருந்த 40க்கும் மேற்பட்ட அகதிகள் மூச்சுத்திணறலால் மடிந்துள்ளனர்-
அந்த படகானது 400க்கும் அதிகமானவர்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இத்தாலிய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த படகை நெருங்கும்போது அது கடலில் மூழ்கத்துவங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக