நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 5 ஆகஸ்ட், 2015

கண்ணாடி துண்டுகள் சிறுநீர் கலந்த தண்ணீர் அருந்திய பெண்???

ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த யாஸிதி பெண் ஒருவர் தான் அனுபவித்த துயரங்கள் குறித்து விவரித்துள்ளார்.
யாஸிதி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினரோடு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
இந்நிலையில் அங்கிருந்து தப்பி வந்த அவர் தனது துயரங்கள் குறித்து கூறுகையில், எனது 4 வயது மகனுக்கு வாளை பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொடுத்தனர்.
பயிற்சி முகாமில் என்ன கற்றுக்கொண்டாய் என்று என் மகனிடம் கேட்கையில், கையால் கழுத்தை வெட்டுவது போன்று என்மகன் செய்து காட்டினான்.
மேலும், எனது 14 வயது மூத்த மகளை தீவிரவாதி ஒருவனுக்கு விற்றுவிட்டார்கள், 12 வயது மகனை ஜிகாதி பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
அவர்களின் பாதுகாப்பில் இருந்து நாங்கள் தப்பியோடாமல் இருப்பதற்காக தீவிரவாதிகள் எங்களுக்கு போதைப்பொருள் கலந்த உணவுகளை கொடுத்தனர்.
நாங்கள் குடிக்கும் தண்ணீரில் சிறுநீரும், உணவில் கண்ணாடி துண்டுகளும் கலந்திருக்கும் என்று தெரிவித்தள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக