நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 8 டிசம்பர், 2022

பணக்காரர் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தை இழந்த எலான் மஸ்க் - முதலிடத்தில் யார்?

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை எலான் மஸ்க் இழந்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான அவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3½ லட்சம் கோடிக்கு 
விலைக்கு வாங்கினார். 
இதையடுத்து அவர் டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார். இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தில் ரூ.3½லட்சம் கோடி முதலீடு செய்ததாலும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததாலும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்தது. 
இதையடுத்து எலான் மஸ்க்கை முந்தி பிரான்ஸ் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற 
இடத்தை பிடித்தார். 
போர்ப்ஸ் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் ரூ.15.29 லட்சம் கோடி சொத்துடன் முதலிடத்தில் உள்ளார். எலான் மஸ்க் ரூ.15.28 லட்சம் கோடியுடன் 2-வது இடத்துக்கு இறங்கினார். 
இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகின் நம்பர் ஒன் இடத்தை எலான் மஸ்க் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எலான் மஸ்க்குக்கும் பெர்னார்ட் அர்னால்ட்டுக்கும் இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மிக குறைந்த அளவிலேயே உள்ளது. 
இதனால் எலான் மஸ்க்கின் நிறுவனங்களின் பங்கு சற்று உயர்ந்தாலும் அவர் மீண்டும் முதலிடத்தை பிடிக்க அதிக 
வாய்ப்பு உள்ளது. 
டெஸ்லாவின் பங்குதாரர்கள் கூறும் போது, 'டுவிட்டரில் எலான் மஸ்க் அதிக கவனம் செலுத்தியதே டெஸ்லாவின் பங்கு குறைய காரணமாக
 இருந்தது' என்றார். 
டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். சுமார் 4 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 7 டிசம்பர், 2022

சீனாவின் ஷாங்காய் மாகாணத்த்தில் காரமான உணவை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த சோகம்

காரமான உணவை சாப்பிட்டுவிட்டு இருமிய பெண்ணின் 4 விலா எலும்புகள் உடைந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹுவாங். இவர் காரமான உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென இருமல் ஏற்பட்டுள்ளது. வேகமாக இருமியபோது மார்புப்பகுதியில் ஏதோ நொறுங்குவது
 போன்று சத்தம் கேட்டுள்ளது. 
இருப்பினும் ஹுவாங் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. ஆனால், அதன்புறகு அவருக்கு மார்பு பகுதியில் எப்போதும் வலி இருந்ததுடன், சாப்பிடவும், மூச்சுவிடவுமே மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மருத்துவரை சென்று சந்தித்துள்ளார்.
அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்துப்பார்த்த மருத்துவர்கள் ஹுவாங்கின் மார்பு விலா எலும்புகள் உடைந்திருந்ததை கண்டறிந்தனர். ஒன்றல்ல, இரண்டல்ல; நான்கு எலும்புகள் உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். 
உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது இருமியதையும், அப்போது நொறுங்கும் சத்தம் கேட்டதையும் அவர் கூறியுள்ளார். அதன்பிறகு மார்புப்பகுதியில் கட்டுப்போட்ட மருத்துவர்கள் ஒரு மாதத்திற்கு ஓய்வெடுக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.
ஹுவாங் மிகவும் ஒல்லியாக பலவீனமாக இருப்பதே இந்த எலும்பு முறிவுக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஹுவாங்கின் உயரம் 171 செ.மீ ஆனால் அவருடைய எடை 57 கிலோதான். மேலும், அவருடைய மேற்புற உடல் மிகவும் மெலிந்தே இருக்கிறது எனவும் ஹுவாங் வருத்தம் தெரிவித்துள்ளார். உடல் எடையை அதிகரிக்க உடற்பயிற்சி செய்யவிருப்பதாக கூறுகிறார் ஹுவாங்.
ஹுவாங்கிற்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறுகையில், 'உங்களுக்கு தோலுக்கு அடியிலிருக்கும் மார்பெலும்புகள் வெளியே தெரிகிறது. எலும்புகளை தாங்கிப்பிடிக்க சதை இல்லை. எனவே, இருமும்போது எலும்பு முறிவு எளிதாக ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்திருக்கிறார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 28 நவம்பர், 2022

பிரிட்டனில் பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ள உள்ள 100 நிறுவனங்கள்


உலகில் பல நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற கொள்கைக்கு மாறிவருகின்றன. அந்த வகையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நாட்களை 4 நாட்களாக 
மாற்றியுள்ளன. 
இதனால் பணியை தவிர்த்து மற்ற நாட்களில் பணி நேரம் நீட்டிக்கப்படாது எனவும் சம்பளம் குறைப்பு நடவடிக்கையும் கிடையாது எனவும் அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் பணி நேர குறைப்பால் இந்த 100 நிறுவனங்களில் பணியாற்றும் 2 ஆயிரத்து 600 பணியாளர்கள் பயனடைவார்கள் என 
தெரிவிக்கப்படுகிறது. 
4 நாட்கள் வேலை என்ற மாற்றத்தில் இணைந்திருக்கும் அவின் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதம் ரோஸ் பேசுகையில், நிறுவனத்தின் வரலாற்றில் தான் பார்த்த மிகவும் மாற்றத்தக்க முயற்சிகளில் ஒன்றாகும் என நெகிழ்ந்து பேசியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 11 நவம்பர், 2022

நாட்டுக்கு செல்லமாட்டோம்; வியட்நாமில் கதறும் இலங்கையர்கள்

கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த நிலையில், பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் 303 சட்டவிரோத புகழிட கோரிக்கையாளர்களான இலங்கையர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என கண்ணீர் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் தங்களை மீட்ட அதிகாரிகள் தங்களை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், குடும்பத்தோடு நாம் இங்கேயே செத்து மடிகிறோம் எனவும் தப்பிப்பிழைத்த
 பெண்ணொருவர் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சனி, 29 அக்டோபர், 2022

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்கு

சீனாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென 
உச்சம் தொட்டது. 
இதன் காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் 2 மாதங்கள் வரை 
அமலில் இருந்தன. 
இதன் காரணமாக அங்கு பொருளாதார சீர்குலைவு, உணவு தட்டுப்பாடு போன்ற சிக்கல்கள் எழுந்தன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ஷாங்காய் நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. 
இந்த நிலையில் ஷாங்காய் நகரில் சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட யாங்பூ மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
இதையடுத்து அந்த மாவட்டத்தில் .28-10-2022.நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள 13 லட்சம் பேரும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
மேலும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்
 நபர்கள் முடிவுகள் வெளியாகும் வரை வீடுகளை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்ட உகான் நகரில் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து, அங்கு 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 23 அக்டோபர், 2022

பரிதாப நிலையில் 120 இலங்கையர்கள் பிரித்தானியாவின் முடிவால்

தாய் நாட்டிற்கு தன்னிச்சையாக திரும்ப மறுத்தால், அவர்களை இடம் மாற்ற பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் புகலிடக்கோரிக்கையாளர்களை இன்னொரு மூன்றாவது நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், எந்த நாட்டிற்கு என உறுதியான தகவலை வெளியிட பிரித்தானிய நிர்வாகம் மறுத்துள்ளது.
தற்போது சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
தற்போது சாகோஸ் தீவில் தான் இலங்கையர்கள் 120 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தஞ்சமளிக்க பிரித்தானியா மறுப்பதுடன் மூன்றாவது நாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் தற்போது விவாதத்தை 
ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, விவாதத்திற்குரிய சாகோஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த 60 இலங்கையர்கள் தன்னிச்சையாக சொந்த நாடு திரும்பியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அமைச்சர் ஜெஸ்ஸி நார்மன் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 15 செப்டம்பர், 2022

இலங்கையர்கள் நியூசிலாந்திற்கு வருகை தந்து வாழலாம்: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு

 
இலங்கையை போன்று இரு மடங்கு பரப்பளவுள்ள நியூசிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் என்று நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தின் நிதியளிப்பினால் ஸ்தாபிக்கப்பட்ட, காத்தான்குடி உளநல ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் நேற்று முன்தினம்(13) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கான அழைப்பு
மேலும் தெரிவிக்கையில்,“இலங்கையை போன்று இரு மடங்கு பரப்பளவையும் சுமார் 5 மில்லியன் மக்களையும் கொண்ட நியூசிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம்.

ஏற்கெனவே அங்கு 20 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்கின்றார்கள். அங்கு இலங்கையர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.
இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் இலங்கையில் இருக்கும் மக்கள் நியூசிலாந்துக்கு வரமுடியும் அங்கே வாழ முடியும். இன்றைய நிகழ்வில் பங்கு கொண்ட சிறுமிகள், இளம் பெண்கள் நியூசிலாந்துக்கு வருவதை நான் ஊக்குவிக்கின்றேன்.

எதிர்காலத்தில் ஒரு சிலரை நியூலாந்தில் காண முடியும் என நம்புகின்றேன். அது ஒரு நீண்ட பயண வழிமுறையாக இருந்தாலும் அது நடக்கலாம். நடப்பதற்கு சாத்தியமுள்ளது.

நான் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு இங்கு இலங்கையிலிருந்து பணியாற்றுவேன். அந்தவேளையில் நான் மீண்டும் கிழக்குக்கு வந்து உங்களை சந்திப்பேன். இந்தத் திட்டம் வெற்றியளித்து உங்கள் வாழ்வு மேம்பட வேண்டும்.”என கூறியள்ளார்.

காத்தான்குடியில் பெண்களுக்கான திட்டம்
இதேவேளை வேறு நூற்றுக்கணக்கான திட்ட முன்மொழிவுகள் நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நிதியுதவி அளிப்பதற்கு நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர், காத்தான்குடியில் பெண்களுக்கான இந்த உள நல ஆற்றுப்படுத்தல் மற்றும் சுய கற்றலுக்கான திட்டத்தைத் தெரிவு செய்துள்ளமை 
குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 3 செப்டம்பர், 2022

நிலவும் எரிசக்தி கட்டண உயர்வால் பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நிறுத்த தீர்மானம்

பிரித்தானியாவில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரும் நகரங்களில்  ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வண்ண வண்ண விளக்குகளால் கலை கட்டும். ஆனால் 
இந்த வருடம் 
பிரித்தானியாவில் மின் சக்தி கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் மில்லியன் கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை
 ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்  வணிக நிறுவனங்களும் இந்த முறை வண்ண வண்ண அலங்காரங்கள் செய்யாது என கூறியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் உள்ள கவுன்சில்களில்  கிறிஸ்துமஸ் தெரு காட்சிகள் மற்றும் பண்டிகை தொடர்பான அலங்காரங்களை ரத்து செய்வதாக
 தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய போா்டு எஸ்காா்ட் கார் ரூ.6 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

உலக புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த கார் 
விபத்தில் பலியானார். 
அவரது 25-வது நினைவு தினம் விரைவில் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் இளவரசி டயானா 1985 முதல் 1988 வரை பயன்படுத்திய போா்டு எஸ்காா்ட் வகையைச் சேர்ந்த ஒரு கார் இங்கிலாந்தில் 28-08-2022.அன்று  ஏலத்தில் விடப்பட்டது. 
இந்த ஏலத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் பலர் கலந்து 
கொண்டனர். 
1 லட்சம் பவுண்டில் (சுமார் ரூ.93 லட்சம்) ஆரம்பிக்கப்பட்ட ஏலம், பலத்த போட்டிக்கிடையே 6 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டில் (சுமார் ரூ.6 கோடியே 10 லட்சம்) நிறைவடைந்தது. இங்கிலாந்தை சேர்ந்த நபர் காரை 
ஏலத்தில் எடுத்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் தூங்கிய எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானிகள்

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 விமானமானது சூடான் நாட்டின் கர்டொம் நகரில் இருந்து எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபபா நகரத்திற்கு பயணிகளை ஏற்றி  
சென்று கொண்டிருந்தது. 
அப்போது விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் 37,000 அடி உயரத்தில் தானியங்கி விமானம் இயக்கியை  செலுத்தி விட்டு தூங்கி இருக்கின்றார்கள். இந்த சூழலில் அட்டிஸ் அபாபா நகருக்குள்
 நுழைந்த விமானம் தரையிறங்குவதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பையும் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்காமல் தொடர்ந்து பறந்து
 கொண்டே இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான கட்டுப்பாட்டு  அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் விமானிகள் கடுமையான உறக்கத்திலிருந்ததால்  கட்டுப்பாட்டு அறையின்  அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை. 
இந்த சூழலில் தரையிறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பயணித்ததால் தானியங்கி விமான இயக்கி பலத்த  ஓசை எழுப்பி நின்றிருக்கின்றது. மேலும் இந்த சத்தத்தினால் தூக்கம் கலந்த விமானிகள் விமானத்தை திசை திருப்பி மீண்டும் ஓடு பாதைக்கு கொண்டு சென்று கரை இறக்கி உள்ளனர். 
விமானிகளின் தூக்கத்தால் 2.5 மணி நேரம் பயணிகள் வானில் பறந்தபடியே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  சம்பவத்தால் அங்கு  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



புதன், 17 ஆகஸ்ட், 2022

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா அழிந்த டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் கொண்டுவர முயற்சி

ஆஸ்திரேலியாவின் 'டாஸ்மேனியன் புலி' உலகில் அழிந்துபோன விலங்கினங்களில் ஒன்றாகும். இவை தைலசின் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த புலிகள் 1930-ல் வரை பூமியில் வாழ்ந்தன. அதன்பின்னர் வேட்டையாடுதல், ஒருவகையான நோய் காரணமாக இந்த வகை புலி இனங்கள் அழித்தன. 
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி 1936-ம் ஆண்டில் இறந்தது. 
இந்த நிலையில், ஸ்டெம் செல், ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். 
டாஸ்மேனியன் புலியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த சமீபத்திய திட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக 
விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் வந்துள்ளது. 
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரிவ் பாஸ்க் பேசும்போது, "இதற்காக டாஸ்மேனியன் புலியை போன்ற ஜீன் அமைப்புடைய விலங்கின் ஸ்டெம் செல்லை பிரித்து எடுக்க இருக்கிறோம். 
பின்னர் ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் டாஸ்மேனியன் புலியை மீண்டும் பார்க்க முடியும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


 

வெள்ளி, 29 ஜூலை, 2022

கொழும்புத் துறைமுகத்தை திடீரென வந்தடைந்த ஜெர்மனிய போர் கப்பல்

பயர்ன் (Bayern) எனப்படும் ​ஜெர்மனியின் போர் கப்பல், நேற்றைய தினம் (17) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் நாட்டை விட்டு வௌியேறுவதற்கு முன்னதாக இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில்
 ஈடுபடவுள்ளது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜெர்மனியின் போர் கப்பல் நாட்டிற்கு வந்தடைந்துள்ளது.
ஜெர்மனியின் பயர்ன் போர் கப்பல் 1996 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்டது.
அத்துடன், கடற்பரப்பு மற்றும் வான் பரப்பை கண்காணிப்பதற்கான வசதிகளும் அதி சக்தி வாய்ந்த ரேடார் கட்டமைப்பும் 
இதில் உள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 26 ஜூலை, 2022

நாட்டுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் டொலர் பெறுமதி வீழ்ச்சி

2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்த நாடு பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களின் தொகை 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.  இது 51.6 வீத வீழ்ச்சியாகும். 
கடந்த ஆண்டு இதே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 478.4 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய தொகை 274.3 மில்லியன் 
டொலர்களாகும்.
வெளிநாட்டு தொழிலாளர் விசாரணைகள் ஏப்ரல் மாதத்தில் 249 மில்லியனாக டொலர்களாக இருந்தது மற்றும் மே மாதத்தில் 304 மில்லியனாக டொலராக உயர்ந்தது, ஆனால் ஜூன் மாதத்தில் 
மீண்டும் சரிந்தது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



திங்கள், 25 ஜூலை, 2022

இரத்தினக் கற்களை வயிற்ருக்குள் கடத்திச்சென்ற இலங்கையர் சென்னையில் கைது

சென்னை விமான நிலையத்தில் வயிற்றில் இரத்தின கற்களை கடத்திச்சென்ற இலங்கை இளைஞன் ஒருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பில் இருந்து, 19ஆம் திகதி ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் சென்னை சென்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை ரகசியமாக கண்காணித்தபோது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர்.
அதில், இலங்கையை சேர்ந்த நைமுதீன் (வயது 28) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் சிறிய பாக்கெட்டுகளாக ரத்தின கற்களை விழுங்கியிருந்தமை தெரியவந்தது.
அதன் பின்னர் அவருக்கு இனிமா கொடுத்து அவற்றை வெளியே எடுத்த போது 56 சிறிய பாக்கெட்டுகளில் பளபளக்கும் ரத்தின கற்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்
இதன்போது சுமார் ரூ.94 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 8 ஆயிரத்து 309 கரட் கொண்ட 1,746 இரத்தின கற்களை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து இரத்தினக் கற்களை கடத்தி வந்த இலங்கை இளைஞனைகைது செய்த அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

செவ்வாய், 5 ஜூலை, 2022

பணியிட வெற்றிடங்கள் கனடாவில் அதிகரிப்பு விபரங்கள் இதோ

கனடாவில் தற்போது 1,001,100 வேலைக்கான வெற்றிடங்கள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை ஒன்றில் இது குறித்த விபரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சுகாதாரம் மற்றும் சமூக உதவித் துறைகளில் வெற்றிடங்கள் 136,800 என்ற சாதனையை எட்டியுள்ளன. கட்டுமானத் துறையில் மட்டும் 81,500 வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் உருவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது உதவியாளர் மற்றும் தொழிலாளர் பணிக்கான வெற்றிடங்கள் 97 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், தச்சரருக்கான வெற்றிடங்கள் 149.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
உற்பத்தி மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் முறையே 5.3 சதவீதம் மற்றும் 12.8 சதவீதம் உயர்ந்து சாதனை 
உச்சத்தை எட்டியுள்ளன.
கனடாவில் வேலையின்மை பெருமளவில் சரிவடைந்துள்ள நிலையில், பல நிறுவனங்கள் தகுதியான ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதில் தடுமாறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1976க்கு பின்னர் கனடாவில் வேலையின்மை சதவீதம் மிகக் குறைந்த எண்ணிக்கையில், 5.1% என பதிவாகியுள்ளது. இருப்பினும் பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியிடத்தை நிரப்ப 
தடுமாறி வருகின்றன.
மக்கள் கொரோனா பரவலுக்கு பின்னர் தங்களுக்கான வேலையை தெரிவு செய்வதில் அதிக கவனம் செலுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 24 ஜூன், 2022

தல்கஸ்பிடியவில் இரண்டரை வயதில் சாதனை படைத்த சிறுவன்

இலங்கை கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய எனும் ஊரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் கண்டு சர்வதேச சாதனைப் புத்தகத்தில் (International Book of Records) தனது பெயரினை பதிவு செய்து உலக சாதனை படைத்து தனது பொற்றோர்களுக்கும், நாட்டுக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது உலகச் சிறுவன் எனும் அந்தஸ்தையும் அவர் தனதாக்கிகொண்டார்.
ஏற்கனவே இதையே சாதனையை நிகழ்த்தி ஆசியா சாதனை புத்தகத்தில் தன் பெயரை பதிவு செய்த இச் சிறுவன் அண்மையில் உலக சாதனைக்கு விண்ணப்பித்ததுடன் இவரது திறமையை பரிசீலனை செய்து உலக சாதனை சிறுவனாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டதுடன் தற்போது இவருக்கான பரிசில்கள், பதக்கங்கள் என்பன வீடு
 வந்து சேர்ந்துள்ளன.
முஹம்மட் நுஸ்கி, பாத்திமா ரஸீனா ஆகிய தம்பதிகளின் செல்வப் புதல்வனான இச்சிறுவன் இரண்டு வயதில் இச் சாதனையை நிகழ்த்தி இருப்பதுடன் தனது ஊரில் இவ்வுலக சாதனையை நிகழ்த்திய முதலாவது சிறுவனாக இருப்பது விசேட
 அம்சமாகும்.
மேலும் இந்த குழந்தை சென்ற வருடம் எ.எம்.ஆர் டோக் அமையத்தின் மூலம் சிறந்த தேர்ச்சி மிக்க குழந்தை என தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



புதன், 15 ஜூன், 2022

பிரித்தானிய பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம்

பிரித்தானியாவில் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பிரித்தானியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் ரயில்கள் சேவையில் இருக்காது
அத்துடன், ரயில் சேவைகள் 07:30 மணி முதல் 18:30 மணி வரை முன்னதாகவே தொடங்கி முடிவடையும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் கிளாஸ்கோ அல்லது எடின்பர்க் மற்றும் கார்ன்வாலில் உள்ள பென்சன்ஸ் வரை பல இடங்களில் ரயில்கள் சேவையில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டோர்செட்டில் உள்ள போர்ன்மவுத், சவுத் வேல்ஸில் உள்ள ஸ்வான்சீ, வடக்கு வேல்ஸில் உள்ள ஹோலிஹெட், செஷயரில் உள்ள செஸ்டர் மற்றும் லங்காஷயரில் உள்ள பிளாக்பூல் உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகள் சேவைகள் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பர்மிங்காம் மற்றும் மான்செஸ்டர் போன்ற இடங்கள் வழியாக லண்டனில் இருந்து ஸ்காட்லாந்திற்கு செல்லும் வெஸ்ட் கோஸ்ட் மெயின் லைன் திறந்திருக்கும் பாதையில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி செய்யப்படும் கால அட்டவணை
இருப்பினும், வேலைநிறுத்த நாட்களில் ரயில்கள் குறைந்த மணிநேரம் இயங்குவதால், இறுதிப் புறப்பாடுகள் வழக்கத்தை விட மிகவும் முன்னதாகவே இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்லும் கடைசி ரயில் 14:47 மணிக்கும், நார்விச்சிலிருந்து லண்டனுக்கு 16:00 மணிக்கும் கடைசி ரயில் 15:00 மணிக்கு லண்டனிலிருந்து எடின்பரோவுக்கும் 
புறப்படும்.
ஜூன் 20 முதல் ஜூன் 26ம் திகதி வரையிலான கால அட்டவணை இறுதி செய்யப்படுகிறது. பொதுவாக 20,000 ரயில் சேவைகளுடன் ஒப்பிடும்போது ரயில் சேவைகளின் எண்ணிக்கை சுமார் 4,500 ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 60 வீத சேவைகள் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படும் வாரத்தில் வேலைநிறுத்தம் இல்லாத நாட்களில் இடையூறுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




சனி, 11 ஜூன், 2022

கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கோவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான தீர்மானம் ஒன்றை அமெரிக்க எடுத்துள்ளது.இதன்படி, நாளை முதல் கோவிட் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வேறொரு நாட்டிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு, கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், கோவிட்-19 தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினை கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கோவிட்  தொற்றுக்கு உள்ளாகவில்லை என்ற சான்றிதழை கொண்டிருப்பது அவசியமற்றது என அமெரிக்கா 
அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




சனி, 4 ஜூன், 2022

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் உணவிலிருந்து சிமென்ட்தயாரிப்பு

வீணாக்கப்படும் உணவுக் கழிவுகளில் இருந்து கட்டுமானத்திற்கு தேவையான சிமென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றுக் கூறினால் நம்ப முடிகிறதா?
‘நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம்’
ஆம். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் தொழில்துறை அறிவியல் ஆராய்ச்சியாளர்களான கோட்டா மச்சிடா, யுயா சகாய் ஆகிய இருவரும் இணைந்து வீணாகும் உணவுக்கழிவுகளை கொண்டு கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமென்ட்டை தயாரித்திருக்கிறார்கள்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில்
 உணவு பொருட்களில் இருந்து முற்றிலும் சிமென்ட் தயாரித்திருப்பது உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.
 இந்த வகை
 சிமென்ட் வழக்கமாக பயன்படுத்தப்படும் கான்க்ரீட்டை விட நான்கு மடங்கு அதிகம் என மச்சிடாவும், சகாயும் கூறுகிறார்கள்.
உணவுக் கழிவுகள் அழுகி, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மீத்தேன் போன்ற வாயுக்களாக வெளியேறி, அதனால் ஏற்படும் புவி வெப்பமயமாதல், இந்த கண்டுபிடிப்பின் மூலம் குறையும் என நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் மச்சிடா, சகாய் தெரிவித்துள்ளனர்.
உலகின் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் 8 சதவிகிதம் சிமென்ட் உற்பத்தியால் ஆனது என இங்கிலாந்தின் சாதம் ஹவுஸ் என்ற சிந்தனைக் குழு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய டோக்கியோ
 பல்கலைக்கழக தொழில்துறை அறிவியலின் இணை பேராசிரியரான சகாய், வழக்கமாக பயன்படுத்தும் சிமென்ட் அடிப்படையிலான 
கான்க்ரீட்டுக்கு மாற்றாக நிலையான திறன் கொண்ட பொருட்களை ஆராய்ச்சி செய்தபோதுதான் இந்த தொழில்நுட்பத்தை
 உருவாக்கினோம் என்றார்.
முதலில் மரத்துகள்களை பொடியாக்கி அதனை சுருக்கி, பின்னர் உலர்த்துகள், தெளித்தல் போன்ற செயல்முறைகளை சந்தையில் கிடைக்கும் கலவைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்தப் பொருட்கள் ஒட்டிக்கொள்ள பிளாஸ்டிக்குகள் தேவைப்பட்டன.
பல மாத தோல்விகளுக்கு பிறகு உணவுக்கழிவுகளை கொண்டு அதன் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை சரி செய்ததன் மூலம் சிமென்ட்டை பிணைக்க முடியும் என்பதை கண்டறிந்தோம்.
ஒவ்வொரு வகை உணவுக் கழிவுகளுக்கும் வெவ்வேறு வெப்பநிலை மற்றும் அழுத்த அளவுகள் தேவைப்பட்டதாகவும், அதனை சீராக்கும் பணி கடினமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ள அவர்கள், தேயிலை
 இலைகள், ஆரஞ்சு மற்றும் வெங்காயத் தோல்கள், காபி கொட்டைகள், சீன முட்டைக்கோஸ் போன்றவற்றை பயன்படுத்தி வெற்றிகரமாக உணவு சிமென்ட்டை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர்.
சிமென்ட்டில் நீர் புகாமல் இருக்கவும், அதனை கொறித்திண்ணிகள் உள்ளிட்ட பிற பூச்சியினங்கள் உண்ணாமல் பாதுகாக்க, அதன் மேல் ஜப்பானிய அரக்கு பூசலாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
கோட்டா மச்சிடா Fabula Inc என்ற நிறுவனத்தை தொடங்கினார். அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மற்ற நிறுவனங்களுடன் இணைந்து உணவுக் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட சிமென்ட்டை கொண்டு கட்லரிகள், அறைகலன்களை தயாரிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு
 வருகிறார்களாம். அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களை அமேசான் மூலமும் வாங்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்களாம்.
முன்னதாக, உலகளவில் உணவு பொருட்களை
 வீணாக்கப்படுவது மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மட்டுமே கடந்த 2019ம் ஆண்டு 5.7 மில்லியன் டன் உணவுக் கழிவுகள் உற்பத்தியாகியிருக்கிறது. அதனை 2030ம் ஆண்டுக்குள் 2.7 மில்லியன் டன்களை குறைக்க அந்த நாட்டு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதும்
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 3 ஜூன், 2022

தாய்லாந்தில் ஒருவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்

தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்து உள்ளார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் ஒன்று, அந்த மனிதரின் 
தொண்டைக்குள் விழுந்துள்ளது.
5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்து முன்னேறி உள்ளது. ஆனால், குறுகலான பகுதியில் அதனால் வெளியே வர முடியவில்லை. தொண்டைக்கும், சுவாச குழிக்கும் இடையில் அந்த மீன் சிக்கி கொண்டது. இதனால், பிராணவாயு செல்லும் வழி அடைப்பட்டது. இதில் திணறி போன அந்த நபர் தொண்டையை இறுக
 பிடித்து கொண்டார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. மீன் சிக்கி இருந்த சரியான இடம் கண்டறியப்பட்டு, அவசரகால அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதுபற்றி மருத்துவமனையின் அதிகாரி செர்ம்ஸ்ரீ பாத்தோம்பனிகிராட் கூறும்போது, நீரில் இருந்து துள்ளி குதித்து ஒருவரின் தொண்டையில் மீன் சிக்கிய சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.
இதற்கு முன் இதுபோன்ற விசயங்களை நான் கேள்விபட்டதே இல்லை. எங்களது நோயாளியின் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாத வகையில் மருத்துவர்கள் செயல்பட்டனர். அவரை காப்பாற்றி விட்டனர் 
என கூறியுள்ளார். இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், தாய்லாந்தின் ஆவோ டான் கூ பீச்சில், நீச்சலில் ஈடுபட்டிருந்த சுற்றுலாவாசியான நொப்படோல் ஸ்ரீங்கம் என்பவரின் தொண்டையில் ஊசி மீன் ஒன்று குத்தியது. இதில், அவரது நிலைமை மோசமடைந்தது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 27 மே, 2022

குரங்கு அம்மையால் கனடாவில் 16 பேருக்குபாதிப்பு உறுதி

கனடாவில்16 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிப்புக்குள்ளான 16 பேரும் அங்குள்ள கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டு, உள்ளூர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுவதாக கனடா பொது சுகாதார துறை 
தெரவித்துள்ளது.
அவர்களிடம் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கியூபெக் மாகாணத்துக்கு பொது சுகாதார துறை சிறிய அளவில் ‘இம்வாமுனே’ தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஐரோப்பாவில் பரவத் தொடங்கியது
குரங்கு அம்மை நோய் முதலில் ஐரோப்பாவில் பரவத் தொடங்கியது. முதலில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சிலருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>