நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 27 மே, 2022

குரங்கு அம்மையால் கனடாவில் 16 பேருக்குபாதிப்பு உறுதி

கனடாவில்16 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிப்புக்குள்ளான 16 பேரும் அங்குள்ள கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டு, உள்ளூர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுவதாக கனடா பொது சுகாதார துறை 
தெரவித்துள்ளது.
அவர்களிடம் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கியூபெக் மாகாணத்துக்கு பொது சுகாதார துறை சிறிய அளவில் ‘இம்வாமுனே’ தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஐரோப்பாவில் பரவத் தொடங்கியது
குரங்கு அம்மை நோய் முதலில் ஐரோப்பாவில் பரவத் தொடங்கியது. முதலில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சிலருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக