நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

இராணுவப்படை வீரர்களின் தலையை துண்டித்த தலிபான்கள்

பாகிஸ்தானில் எல்லை இராணுவப் படையை சேர்ந்த 23 வீரர்களின் தலையை துண்டித்து தலிபான்கள் கொலை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான்களின் ஒரு பிரிவினரான முகமது ஏஜென்சி நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், கடந்த 2010ம் ஆண்டில் கடத்திய எல்லை இராணுவப் படையை சேர்ந்த 23 வீரர்களின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிச்செய்யப்படாத பட்சத்தில்,

23 பேரை கொலை செய்ததற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக முகமது ஏஜென்சி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசுடன், தலிபான்களின் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இந்த வீடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

திங்கள், 10 பிப்ரவரி, 2014

அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரானிய யுத்த கப்பல்கள்

ஈரானின் பல யுத்தக்கப்பல்கள் அமெரிக்க கடற்பரப்பு எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஈரானிய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை கலங்கள் தரித்து நிற்பதற்கு பதிலடியாக ஈரானிய யுத்த கப்பல்களை அமெரிக்க கடற்படை எல்லையை நோக்கி நகருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஈரானிய கடற்படை அதிகாரியான அட்மிரல் அப்ஷின் ரெஸாயீ ஹதாத்தை மேற்கோள் காட்டி ஈரானின் பார்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு அருகிலிருந்து அத்திலந்திக் சமுத்திரத்தை நோக்கிய ஈரானிய யுத்த கப்பல்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அட்மிரல் ஹதாத் தெரிவித்துள்ளார். இந்நகர்வானது ஒரு சமிக்ஞையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வொஷிங்டனிலுள்ள தம்மை இனங்காட்ட விரும்பாத அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஈரானிய கப்பல்கள் அமெரிக்க கடல் எல்லையை நெருங்குவதாக கூறப்படுவது குறித்து சந்தேகம் தெரிவித்தார். ஆனால், சர்வதேச கடற்பரப்பில் இயங்குவதற்கு கப்பல்களுக்கு சுதந்திரம் உள்ளதாக அவர் தெரிவித்தாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
 

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

இலங்கையர் உட்பட 2000 பேர் சவூதியில் கைது


 சவூதி அரேபியா வழங்கிய பொதுமன்னிப்பு காலத்தில் அங்கிருந்து வெளியேறாது தொடர்ந்தும் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் உட்பட இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த வாரம் சவூதி அரேபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை, ஏமன், எகிப்து, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமாக சவூதியில் தொழில் புரிந்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சவூதி அரேபிய அரசு வழங்கிய பொது மன்னிப்பு காலத்தில் அங்கு சட்டவிரோதமாக தங்கிருந்த சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டவர்கள் தமது நாடுகளுக்கு திரும்பினர்

பொது மன்னிப்பு காலத்திற்கு பின்னரும் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை சவூதி அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.