நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

இலங்கையர் உட்பட 2000 பேர் சவூதியில் கைது


 சவூதி அரேபியா வழங்கிய பொதுமன்னிப்பு காலத்தில் அங்கிருந்து வெளியேறாது தொடர்ந்தும் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் உட்பட இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த வாரம் சவூதி அரேபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை, ஏமன், எகிப்து, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமாக சவூதியில் தொழில் புரிந்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சவூதி அரேபிய அரசு வழங்கிய பொது மன்னிப்பு காலத்தில் அங்கு சட்டவிரோதமாக தங்கிருந்த சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டவர்கள் தமது நாடுகளுக்கு திரும்பினர்

பொது மன்னிப்பு காலத்திற்கு பின்னரும் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை சவூதி அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக