நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 29 ஜனவரி, 2014

பிரான்சில் வெள்ளம்: மக்கள் வெளியேற்றம்


பிரான்சின் தென் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்சின் தென் கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

இதுவரையிலும் 2 பேர் பலியாகி உள்ளனர், 150 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்ளூர் அதிகாரி Laurent Cayrel, தனது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் போது 73 வயது மதிக்கத்தக்க பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார் என்றும், தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக