நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

ஜனாதிபதி மனைவியை விவகாரத்து செய்தார்..

. பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்த் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒலாந்த் ஏற்கனவே திருமணமாகி மனைவி செகோலின் ராயலை விவாகரத்து பெற்றிருந்தார், அந்த திருமணம் மூலம் 4 குழந்தைகள் உள்ளனர்.
தற்போது ஜனாதிபதி ஒலாந்த் வாழ்ந்து வரும் காதலியும் இரண்டாவது தடவை விவாகரத்து ஆனவர், இவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் ஜனாதிபதியுடன் சேர்ந்து வாழ்வதால் பிரான்சின் முதல் பெண் என்ற அந்தஸ்து பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நடிகையும், சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவாளருமான  ஜூலி கெயட்டுடன் ஒலாந்துக்கு தொடர்பு என பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட வைலர் 8 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த விஷயத்தில் தொடர்ந்து மெளனம் காத்து வந்த ஜனாதிபதி, நாட்டின் முதல் பெண்ணான வைலரை விட்டு பிரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொருளாதார திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஒல்லாந்தின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர்.
இந்த பிரிவு பற்றி வாலெரி வைலர் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், அறப்பணிகள் தொடர்பாக இன்று இந்தியாவுக்கு அவர் புறப்பட திட்டமிட்டுள்ளார். முன்னதாக அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கலாம் என கூறப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக