நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 9 ஜனவரி, 2014

விண்வெளி நிலையத்தின் ஆயுள் 4 வருடங்களால் நீடிப்பு...

பூமியை பற்றி ஆராய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டு முயற்சியில் சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ம் ஆண்டு கட்டும் பணி தொடங்கப்பட்டது. பூமிக்கு மேலே 400 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையமானது வரும் 2020-ம் ஆண்டு வரை செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்

இதன் ஆயுளை 4 வருடங்களுக்கு நீட்டித்து 2024 ஆண்டுகள் வரை நீடிக்க அமெரிக்காவின் ஒப்புதலை நாசா நிறுவனம் பெற்றுள்ளது. இதைப்போன்று மற்ற நாடுகளும் ஒப்புதல் வழங்கவேண்டும். 100 பில்லியன் டாலர் திட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த விண்வெளி நிலையத்திற்கு அதிக நிதி

வழங்கியுள்ள ஜெர்மனி, அது நீண்டகாலத்திற்கு பணியாற்ற ஆர்வம் காட்டியுள்ளது. மற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இதற்கு நிதி வழங்க ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக