நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 24 டிசம்பர், 2013

சூடானுக்கு இரகசியமாக இலங்கை இராணுவம்


தென் சூடான் நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் அங்கே உள்நாட்டுப் போர் வலுவடைந்துள்ளது. தற்போது அது பூதாகரமாக எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ளது. இன் நிலையில் அன் நாட்டில் சுமார் 75 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களை இலங்கைக்கு மீட்டுக்கொண்டுவரவேண்டும் என்று இலங்கை அரசு கூறிவந்தது. எகிப்த்து நாட்டு அதிகாரிகளுன் இலங்கை அதிகாரிகள் இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதனையடுத்து, இலங்கையர் சிலரை எகிப்த்தினூடாக தென் சூடானுக்கு அனுப்பி அங்கே சிக்கியுள்ள 75 இலங்கையர்களை மீட்க்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசு இந்த 75 பேருக்காகவா இவ்வாறு செய்கிறது என்று கேட்டால் அது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. சாதாரண கூலி வேலைசெய்யும் இந்த 75 பேரையும் மீட்க்க இலங்கை இவ்வாறு செய்யுமா என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பாக சில இரகசிய தகவல்கள் கொழும்பில் இருந்து கசிந்துள்ளது. அதாவது நாடு கடந்த தமிழீழ அரசு, மற்றும் ஏனைய சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தென் சூடான சுதந்திரம் அடைந்த பின்னர் அன் நாட்டு அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு, தமிழர்களுக்கு உதவுமாறு கோரிவந்தது. இதனால் தென் சூடான் என்னும் புதிய நாடு ஈழத் தமிழர்கள் பக்கம் திரும்பிவிடும் என்று இலங்கை அரசு எண்ணியது.
இதன் காரணமாக இலங்கை அரசு சில முக்கிய சிங்கள இராஜதந்திரிகளை அன் நாட்டுக்கு அனுப்பி, லாபி செய்ய வைத்தது. அவர்களே தற்போது அங்கே சிக்கித் தவிக்கிறார்கள். இந்த 75 பேரில் குறைந்தது 4 இலங்கை இராஜதந்திரிகள் அடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர்களை பாதுகாப்பாக மீட்டு வர அதிகாரிகள் என்றபோர்வையில், இலங்கை அதிரடிப்படையினர் எகிப்த்துக்கு அனுப்பப்பட உள்ளதாக மேலும் அறியப்படுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக