நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 23 டிசம்பர், 2013

நாடக வடிவில் கலக்க வருகிறது ஹாரி பாட்டர்


இங்கிலாந்தை சேர்ந்த ஜே.கே.ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் என்ற நாவல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.
ஹாரி பாட்டரில் 7 தொகுப்புகள் வரை எழுதிய ரௌலிங் இதற்கு மேல் இந்த தொடரை எழுதப் போவதில்லை என்று அறிவித்து விட்டார்.

எனவே இதனை நாடகமாக நடத்துவதற்கு ஏராளமானோர் அவரை அணுகியுள்ளனர்.
இந்நிலையில் விருது பெற்ற நாடகத் தயாரிப்பாளர்களான சோனியா பிரைட்மேன் மற்றும் கோலின் கேலண்டர் ஆகியோருடன் இணைந்து புகழ்பெற்ற ஹாரி பாட்டர் கதை வடிவங்களை நாடகமாக இயக்கப் போவதாக ரௌலிங் நேற்று தெரிவித்துள்ளார்.

யுகே தியேட்டர் எனப்படும் இந்த நிறுவனத்திருடன் தயாரிக்கப்படும் நாடகம் ஹாரி பாட்டர் ஹோக்வர்ட் பள்ளிக்கு வருவதற்குமுன் அனாதையாக இருந்த காலகட்டத்தையும், அவர் கடத்தப்பட்ட விதத்தையும் சித்தரிக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த நாடகத்தில் ரௌலிங் இணை தயாரிப்பாளராகப் பங்குபெறுகின்றார், ஆனால் வசனங்களை அவர் எழுதவில்லை என்று கூறப்படுகின்றது.

இதற்கான வசனகர்த்தாவையும், இயக்குனரையும் தேர்வு செய்யும்பணி தற்போது தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் இந்த நாடகத் திரையாக்கம் வரும் 2015-ல் அரங்கிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக