நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 19 டிசம்பர், 2019

பேஸ்புக்இருப்பிட அமைப்புகள் முடக்கப்பட்டிருந்தாலும் பயனாளர்களைக் கண்காணிப்பதை ஒப்புக்கொண்டது

பயனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின்தொடரக் கூடாது என்று தேர்வு செய்து வைத்திருந்தாலும், பேஸ்புக்கால் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என அந்நிறுவனமே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனாளர்கள் இதில் பகிர்ந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் CCPA என்ற சட்டத்தின் படி சமூக வலைதளங்கள் பயனர்களிடமிருந்து 
என்னென்ன தகவல்களை எடுத்துக்கொள்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை பயனர்களுக்கு உள்ளது.அதன்படி பயனாளர்களின் தகவல்களை சேகரித்து விளம்பர நோக்கத்திற்காக பேஸ்புக் பயன்படுத்துகிறது என அமெரிக்கா 
உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், பேஸ்புக்கில் லொகேஷனை பகிர்ந்துகொள்ளும் முறையை முடக்கி வைக்கப்பட்டிருந்தாலும், பயனர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் அறிய முடியும் என 
செனட் சபையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களுடைய செல்போன் ஐபி முகவரியை வைத்து அவர்களுடைய லொகேஷனை பேஸ்புக் கண்டுபிடிக்கிறது. விளம்பர நோக்கத்திற்காகவே பயனர்களின் லொகேஷனை, அவர்களுக்கே 
தெரியாமல் எடுத்துக்கொள்வதாக செனட் அவையில் கடிதம் மூலம் பேஸ்புக் விளக்கமளித்துள்ளது.போட்டோக்களில் டேக் செய்யப்படுவது, குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதை செக் இன்னாக பதிவு செய்வது போன்றவற்றையெல்லாம் மீறி, பயனர்களின் ஐபி முகவரிக்குள் பேஸ்புக் ஊடுருவுவது அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வானில் பறந்து சென்ற விமானத்தில் பெண் செய்த செயல் அச்சத்தில் பயணிகள்

துருக்கியில் விமானத்திற்குள் இருந்த பெண் ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்கச் செய்யப்போவதாக கூறி பீதியைத் தூண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கென் விமான நிலையத்திலிருந்து துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸில் உள்ள எர்கன் சர்வதேச விமான நிலையத்திற்கு 
புறப்பட் விமானம் தயராக இருந்தது.
அப்போது, விமானத்திற்குள் கருப்பு கண்ணாடி மற்றும் நீல நிற முக்காடு அணிந்திருந்து பெண் ஸ்ரீ, தான் FETO இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கத்தி, கோபமாக குரானை படித்து விமானத்தை வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தியதில் பயணிகள் பீதியில் உறைந்துள்ளனர்.
மேலும், தன்னிடம் ஐந்து வெடிக்குண்டுகள் இருப்பதாக அப்பெண் பீதியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், 
சர்ச்சைக்குரிய இயக்கத்தின் பின்னணியில் உள்ள இஸ்லாமிய மதகுருவான ஃபெத்துல்லா குலனின் படத்தையும் அவர் கையில் வைத்திருந்துள்ளார்.
பெண்ணின் பயங்கரமான செயலுக்கு பிறகு பயணிகளால் கட்டுப்படுத்தப்பட்டு விமானத்திலிருந்து வெளியேறப்பட்டார் என்று
 உள்ளுர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.பின்னர், பாதுகாப்பு குழு விமானத்திற்குள் நுழைந்து சோதனை 
செய்துள்ளது, எனினும் சந்தேகத்திற்கிடமான 
எதுவும் சிக்கவில்லை.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 17 டிசம்பர், 2019

ஆழ்கடலில் கடலுக்குள் மூழ்கிய வீரருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விசித்திர மிருகம்


பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கிய வீரரை சீல் எனப்படும் கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காண்பது பலருக்கும் பிடித்தமான செயல் 
எனலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் கண்டிராத அரிய வகை உயிரினங்களும் நம் கண்களை
 கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண மீன்களும் இருக்கும். அதே நேரத்தில் ஆபத்துகளும் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம்.
கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பிட்ட பகுதியில் கடலின் தன்மை, புதை படிமங்கள் போன்றவற்றை கண்டறிய
 நீர் மூழ்கி வீரர்களும் கடலுக்குள் செல்வது உண்டு. அவ்வகையில், பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கி வீரரை சீல் எனப்படும் கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.-

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

                

வெள்ளி, 13 டிசம்பர், 2019

இலங்கைப் பெண் இத்தாலி இளைஞனை ஏமாற்றி செய்த மோசடி

இத்தாலியில் தொழில் செய்யும் இளைஞர் ஒருவரை பேஸ்புக் மூலம் ஏமாற்றி, 35 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கம்பளையை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்
 கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து இரண்டு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்திற்குள் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் மோதலுக்கு முக்கிய காரணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான இந்த இளைஞன் நீண்ட காலமாக இத்தாலியில் சேவை செய்துள்ள நிலையில் பேஸ்புக் மூலம் இலங்கையில் உள்ள இந்தப் பெண்ணை அறிந்து கொண்டுள்ளார்.இளம் வயதுடைய யுவதி போன்று நடந்து கொண்ட இந்த பெண் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி வழங்கி இளைஞனை ஏமாற்றி பல முறை பணம்
 பெற்றுள்ளார்.தங்கள் இருவருக்கும் வீடு கட்ட வேண்டும் எனக் கூறி பல முறை பணம் பெற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறு பணம் பெற்று கம்பளை – நுவரெலியா வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை வாங்கி அதனை வாடகைக்கு வழங்கி வந்துள்ளதாக 
தெரியவந்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அவுஸ்திரேலியாவில் நடந்த உயர் பரீட்சையினல் சாதனை படைத்த ஈழத்து தமிழ் மாணவி

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா,
 மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ் மொழியில் இவ்வாறானதொரு சாதனையை நிகழ்த்தியமை தொடர்பில் பலரும்
 பாராட்டுக்களைத் தெரிவித்து
 வருகின்றனர்.அவுஸ்திரேலியாவில், 21 வருடகால தமிழ் மொழிப் பரீட்சை வரலாற்றில் இந்த சாதனை முதல் முறை 
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 10 டிசம்பர், 2019

இராணுவ விமானம் நடுவானில் மாயம்!!…தீவிர தேடுதலில் விமானப் படை

சிலியிலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம் ஒன்று 38 பேருடன் மயமானதாக அந்நாட்டு விமானப் படை தெரிவித்துள்ளது.இதுகுறித்து சிலி விமான படை தரப்பில் வெளியான அறிக்கையில், “சி – 130 ஹெர்குலஸ் இராணுவ விமானம் சிலியின் புண்டா 
அரேனாஸ்லிருந்து பிற்பகல் 4. 45 மணியளவில் புறப்பட்டு அண்டார்டிகாவுக்கு செல்லும் வழிதடத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனைத் தொடர்ந்து, விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான இராணுவ விமானத்தில் 38 பேர் இருந்தனர். இதில் 21 பேர் பயணிகள்” என்று 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிலி ஜனாதிபதி செபாஸ்டின் பினரே கூறும்போது, “விமானம் மாயமாகி இருப்பது மிகுந்த கவலையை அளித்துள்ளது. தொடர்ந்து நிலையை கண்காணித்து வருகிறேன்” என்றார்.தொடர்ந்து விமானத்தை தேடும் பணி நடந்து வருவதாக சிலி விமான படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 9 டிசம்பர், 2019

கைநழுவிப் போன ரஷ்யாவின் உலகக் கிண்ண, ஒலிம்பிக் கனவு

2020 ஒலிம்பிக், 2022 பீபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை வாடா (Wada)எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விதித்துள்ளது.சுவிட்சர்லாந்தின் லொசேன் 
நகரில் நடத்த வாடாவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த வாடாவின் இந்த முடிவினை நடுவர் மேன் முறையீடு நீதிமன்றம் மூலம் மேல் முறையீடு செய்வதற்கு 21 நாள் அவகாசமும் ராஷ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்ய வீரர்களில் ஊக்க மருந்து பாவனை தொடர்பான ஆய்வகத் தரவுகளை ரஷ்யா மறைத்தமைக்காகவும், போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமையையும் கருத்திற் கொண்டே ரஷ்யாவுக்கு இவ்வாறு
 நான்கு ஆண்டுகள் அனைத்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து
 கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ரஷ்யாவுக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி, 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள பீபால உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டி உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் கை நழுவிப் போயுள்ளது.எனவே, டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் பீபா உலகக் கிண்ண 
போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது. அந்நாட்டின் தேசிய கீதமும் ஒலிக்காது.இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.




ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ரஷ்யாவில் பருவநிலை மாற்றத்தினால் கிராமத்திற்குள் நுழைந்த பனிக்கரடிகள்

ரஷ்யாவில் பருவநிலை மாற்றத்தால் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் 50இற்க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள ரிர்காப்பி கிராமத்தில் அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து 
செய்யப்பட்டுள்ளதோடு, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், பொது இடங்கள் குடியிருப்பு வாசிகளைக் கரடிகள் தாக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ரிர்காப்பியில் கரடிகள் பாதுகாப்பு
 திட்டத்தின் தலைவராக இருக்கும் டட்யானா மினென்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தக் கிராமத்துக்குள் சுமார் 56 கரடிகள் நுழைந்துள்ளன.
 பெரிய மற்றும் சிறிய கரடிகளும், பெண் கரடிகளும் அதன் குட்டிகளும் அதில் அடங்கும். பெரும்பாலான கரடிகள் மிகவும் ஒல்லியாகக் காணப்படுகிறன’ தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிர்காப்பி 
என்னும் இடத்திலிருந்து
 சுமார் 2.2கிமீ தூரத்தில் உள்ள கேப் என்ற இடத்தில் கரடிகள் வசிக்கின்றன ஆனால் அந்த இடம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக வெப்பமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் சிலர், ரிர்காப்பி கிராமத்திற்கு பனிக்கரடிகள் வருவது
 தொடர்கதையான ஒன்று எனவே அங்குள்ள மக்கள் நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.



ஞாயிறு, 24 நவம்பர், 2019

நடைப்பயிற்சிக்கு நாயுடன் சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

காட்டுப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்றகொண்டிருந்த ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணை நாய்கள் கடித்து கொன்றுள்ளதாக அவரது கணவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.பாரிஸிலில் ரெட்ஸ் வனப்பகுதியில் எலிசா பிலாஸ்கி என்ற 29 வயதுடைய 6 மாத 
கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு தனது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.அப்போது சில நாய்கள் அவரை சூழ்ந்து அவரை தாக்க முற்படுவதாக கணவருக்கு 
தொலைப்பேசி வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார். அந்நிலையில், விமான நிலையத்தில் தொழில்புரிந்து வந்த அவரின் கணவர் சுமார் 45 நிமிடங்களின் பின்னரே சம்பவம் இடம்பெற்ற இடத்தை அடைந்துள்ளார்.இதன்போது, பெரிய அதிர்ச்சியொன்று அவரிற்கு காத்திருந்தது. 
நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த தன் மனைவியை
 பார்த்த அவர் கதறி அழுதுள்ளார். பின்னர் பொலிஸாருக்கு தகவலும் வழங்கியுள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த 
பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்நிலையில் பிலாஸ்கியை கடித்து குதறியது, அவரின் வளர்ப்பு நாயா? அல்லது காட்டில் சுற்றித்திறிந்த தெருநாய்களா என கண்டறிய டீ.என்.ஏ மாதிரிகளை பொலிஸார் பரிசோதிக்க அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில், கர்ப்பிணி மனைவியை இழப்பானது, கணவனை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 8 நவம்பர், 2019

நடந்த கார் விபத்தில் அமெரிக்காவில் பரிதாபமாக பலியான யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு
 உயிரிழந்தவராவார்.குறித்த இளைஞர் கடந்த
 சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2018-ம் ஆண்டில் 
அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது.

செவ்வாய், 5 நவம்பர், 2019

கனடாவில் நடந்த பாரிய கார்த் திருட்டு வசமாக மாட்டிய ஈழத்து தமிழர்கள்

கனடாவில் பெரும் கார்த்திருட்டில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர்.விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்து
 செல்ல முயன்றபோது, 
வாகனத்தின் உரிமையாளர் பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து, இரண்டு தமிழ் இளைஞர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் எமகாதக 
திருட்டில் ஈடுபட்ட
 விடயம் அம்பலமானது.நமது ஊர்களில் சங்கக்கடைகளில் நிவாரணத்திற்கு வரிசையில் முந்திக்கொள்ள அடிபிடிப்பட்ட நினைவு உங்களிற்கிருக்கும். கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, 
இழுத்து செல்லும் 
நிறுவனங்களும் கிட்டத்தட்ட அப்படித்தான். விபத்தொன்று நடந்தால், அந்த வாகனத்தை இழுத்துச் செல்ல பல நிறுவனங்களின் வாகனங்கள் அங்கு பாய்ந்து விழுந்து வரும்.
ஸ்கார்பாரோவைச் சேர்ந்த கபிலன் விக்னேஸ்வரன் (24), நகுல் விக்னேஸ்வரன் (30) ஆகிய இருவரும் விபத்தில் சிக்கிய வாகனங்களை இழுத்துச் செல்லும் நிறுவனமொன்றை நடத்தியுள்ளனர்.அண்மையில், கனடாவின் ஈஸ்ட் எக்லிண்டன் அவென்யூ 
மற்றும் வார்டன் அவென்யூ அருகே விபத்தில் சிக்கிய வாகனத்தின் உரிமையாளர், வாகனத்தை இழுத்துச் செல்ல நிறுவனமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்குள் அந்த 
பகுதிக்கு வந்த தமிழ் சகோதரர்கள் தமது இழுத்து செல்லும் வாகனத்தில், விபத்திற்குள்ளான வாகனத்தை கொழுவியுள்ளனர்.
வாகன உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அதை பொருட்படுத்தாமல் இழுத்துச் சென்றனர். இது குறித்து வாகன உரிமையாளர், பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.மான்வில் வீதியில் உள்ள 
கபி ஓட்டோ இன்க் 
நிறுவனத்திற்கு அந்த கார் கொண்டு செல்லப்பட்டிருந்தது. அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளை நடத்தினர். ஆரம்பத்தில் அங்கு பொலிசார் உள்நுழைய, உரிமையாளர்கள்
 எதிர்ப்பு தெரிவித்தாக 
கூறப்படுகின்றது.பொலிசார் அங்கு நடத்திய சோதனையில், திருடப்பட்ட இரண்டு விலை உயர்ந்த சொகுசுக்கார்கள் அங்கு மீட்கப்பட்டன. தமிழ் சகோதரர்களே அவற்றை திருடினார்கள் என்பது
 விசாரணைகளில் தெரிய வந்தது. 2015 பி.எம்.டபிள்யூ எம் 4 மற்றும் 2017 ஃபெராரி 4 ஜிஎஸ் ஆகிய கார்களே மீட்கப்பட்டன.வாகனத் திருட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணைக்கு அழைக்கும்போது 
முன்னிலையாக வேண்டுமென்ற நிபந்தனையுடன் அவர்கள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவத்தையடுத்து, விபத்தில் சிக்கிய வாகனங்களை
 கட்டியிழுக்கும் நிறுவனங்கள் தொடர்பாக, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள கனடிய பொலிசார், சில அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 23 அக்டோபர், 2019

பேரதிர்ச்சி தரும் செய்தி உலக மக்களின் மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு மூடுவிழா

சர்வதேச ரீதியாக பலரின் அறிவுப்பசிக்கு ஊட்டமாகவும், ஈடற்ற ஞானத்தை அளிக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா விரைவில் ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது.அரிய பல தகவல்களை
 தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால், தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.வரலாற்றுக் காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய அரிய தொகுப்புகள் ‘என்சைக்லோப்பீடியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தக தொகுப்புகளாக முன்னர் 
வெளிவந்தன.
ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி பல்வேறு தொகுப்புகளாக வெளியான இந்த புத்தகங்களின் மூலம் நாம் அறிய விரும்பிய தகவல்கள் அனைத்தையும் விளக்கப்படங்களுடன் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.ஆனால், இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் பலநூறு பக்கங்களை கொண்டதாகவும் முழு தொகுப்பும் பல நூறு டொலர்கள் விலையிலும் இருந்ததால் ஏழை-எளியவர்களால் இவற்றை பெற்று பயனடைய முடியாத நிலை ஏற்பட்டது.என்சைக்லோப்பீடியா
 புத்தக தொகுப்பு
எனினும், முக்கிய நூலகங்களில் ‘குறிப்புதவி நூல்கள்’ என்ற பகுதியில் இவை வைக்கப்பட்டிருந்தன. சாதாரண மக்களால் இந்த புத்தகங்களை சொந்தமாக்கி கொள்ள இயலாமல் போனாலும் தேவையான குறிப்புகளை பெற ‘என்சைக்லோப்பீடியா’ தொகுப்புகள் உறுதுணையாக அமைந்தன.சில ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட 
பதிப்புகளாக வெளியாகும் ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகங்களில் முந்தைய பதிப்புக்கு பிறகு நடைபெற்ற மேலும் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.நாளடைவில் உலகளாவிய அளவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி அபாரமான வளர்ச்சியை அடைந்தது. கணிணி, மின்னணு எழுத்தியல் முறை அதிகரித்தது. இந்தநிலையில், இணையத்தளத்தின் பயன்பாடு 
தவிர்க்க முடியாத அம்சமாக மாறியது.எழுத்துகளாக அச்சுக்கோர்த்து, மையால் காகிதத்தில் அச்சிட்டு புத்தகமாக தயாரித்து விற்பனை செய்த காலம் மாறி, இணையத்தின் வழியாக மின்னணு முறையில் கணிணியில் புத்தகங்களின் பக்கங்களை காணும் நிலை உருவானது.இவ்வாறு சில தகவல்கள் பல இடங்களில் பரவிக்கிடக்கும் நிலையை
 மாற்றி அனைத்து தகவல்களையும் கலைக்களஞ்சியமாக ஒரே இடத்தில் குவியலாக படைக்கும் எண்ணம் அமெரிக்காவை
 சேர்ந்த ஜிம்மி வேல்ஸ் என்பவருக்கு தோன்றியது.இதன் விளைவாக ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகத் தொகுப்புகளைப்போல் இணையத்தளத்தின் வாயிலாக ஓர் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிகளை ஆரம்பித்தார்.விக்கிப்பீடியா’ என்ற பெயருடன் 15-1-2001 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையவழி அறிவுச்சேவைக்கு இன்று 18 வயதாகின்றது.

ஜிம்மி வேல்ஸ்

தற்போது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ’விக்கிப்பீடியா’ நிறுவனத்தின் படைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் பிரதான ஆசிரியர்கள் என்று எவரும் இல்லை.உலகின் பல்வேறு விவகாரங்கள் மற்றும் பிரபலங்கள், முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்புகளை தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இந்த ’விக்கிப்பீடியா’ இணையப்பக்கத்தில் தனித்தனி தலைப்புடன் பதிவு செய்கின்றனர்.
இந்த தகவல் திரட்டுகளை எல்லாம் பாதுகாப்பதற்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகளை விலைகொடுத்து பெறுவதற்கும், தகவல் திரட்டுகளை எல்லாம் எண்மாண கோப்புகளாக சேகரித்து, பாதுகாத்து சர்வர்களின் மூலம் பயனாளிகளுக்கு அளிப்பதற்கும் ஏராளமான பணம் தேவைப்பட்டாலும் வர்த்தக நோக்கம் ஏதுமின்றி, பயனாளிகளின் அறிவுப்பசிக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் இங்கு இலவசமாகவே கிடைத்து வருகின்றன.இந்நிலையில், சில தகவல்களை தேடி விக்கிப்பீடியா பக்கத்துக்கு செல்லும் வாசகர்களுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் ஒரு அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சில விக்கிப்பீடியா பக்கங்களின் முகப்பில் ஒரு விண்ணப்பம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.அனைத்து வாசகர்களும் அறிவது.., விக்கிப்பீடியாவின் சுதந்திரத்தை நீங்கள் பாதுகாத்து நிலைநாட்ட ஆண்டுக்கு ஆயிரம் டொலர் என்ற அளவில் உங்களிடமிருந்து நன்கொடைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், 99 சதவீதம் பேர் அப்படி தருவதில்லை.

என்சைக்லோப்பீடியா புத்தகத்தின் உள்பக்கங்கள்
இதை வாசிக்கும் அனைவரும் ஒரு டொலரையாவது அன்பளிப்பாக அளித்தால்தான் இனிவரும் ஆண்டுகளுக்கு அபிவிருத்திக்கான பாதையில் விக்கிப்பீடியாவை அழைத்துச் செல்ல இயலும்.லாபநோக்கமற்ற முறையில் இந்த விக்கிப்பீடியாவை நாங்கள் ஆரம்பித்த போது இதனால் ஏற்படப்போகும் பொருளிழப்பு பற்றியும் இதற்காக நீங்கள் வருத்தப்பட நேரிடும் என்றும் பலர் எச்சரித்தனர்.

ஆனால், விக்கிப்பீடியா வர்த்தக ரீதியாக மாற்றப்பட்டு விட்டால் அதனால் இந்த உலகிற்கு பேரிழப்பு என்று நாங்கள் கருதினோம். ஞானத்தை விரும்பும் அனைவரையும் விக்கிப்பீடியா ஒன்றிணைத்து வருகிறது. படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் சில கொடையாளர்கள் ஆகியோர் நம்மை வாழ்வித்து வருகின்றனர்.நம்பகத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மை மாறாத எண்ணற்றத் தகவல்களை இங்கு பதிவிட்டு உங்களுக்காக உழைக்கும் மக்களை உள்ளடக்கிய சமுதாயமாக திகழும் விக்கிப்பீடியா இணையத்தில் உயிர்ப்புடன் இருக்கவும் வளரவும் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்’ என அந்த தகவலில்
 குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 14 அக்டோபர், 2019

ஈழத்தமிழன் கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப்பொறுப்பேற்பு

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.
  #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,
3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா 
கனடாவில் குடியேறினார்.
கடந்த 25 ஆண்டுகளாக கனேடிய பொலிஸ் சேவையில் குற்றப்பிரிவு, போதை தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிஷான் துறையப்பா பணியாற்றி வந்தார்.
ஹால்டன் பிராந்தியத்தின் உதவி பொலிஸ் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் பீல் நகரத்தின் முதன்மை காவல்துறை அதிகாரியாக இப்போது பதவியேற்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் எந்தளவுக்கு பொலிஸாரிடம் இருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கின்றனரோ, அதே அளவிற்கு பொலிஸாரும் அவர்களிடமிருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கின்றனர் என நிஷான் துரையப்பா தெரிவித்தார்.
 3000 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட பீல் நகரத்தின் தலைமை அதிகாரியாக பதிவியேற்றுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. நிச்சயமாக சிறப்பாக கடமையாற்றுவேன் என்று அவர் கூறினார்.பீல் நகரத்தில் உள்ள 1.4 மில்லியன் மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள 3,000 அதிகாரிகளைக் கொண்ட பீல் நகர பொலிஸை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பது எனது பாக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.
நிஷான் துரையப்பா ரொறண்டோ பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் குற்றவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். மேற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.
2012 இல் ராணி எலிசபெத் - ஐஐ வைர விழா பதக்கத்தையும் இவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


கனடாவில் சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
 யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது.
அத்துடன் இப் போட்டில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் இலங்கையில் இருந்து தெரிவாகிய ஒரே தமிழர் செ.செல்வதாசன் ஆவார்.  
இவரின் கண்டுபிடிப்பானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பார்வை அற்றவர்களுக்கான வழிகாட்டும் கருவி ஆகும். குறித்த கருவி இது சூரிய ஒளியில் இயங்க கூடியது 
என்பது மேலதிக தகவல்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில்லண்டனில் தீ பிடித்த கடைகள்

லண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
  செல்போர்ண் வீதியில் அமைந்துள்ள குறித்த வணிக அங்காடியில் இன்று காலை 7.40 அளவில் ஏற்பட்ட தீ விரைவாக பரவியதால் 
பெரும் விபத்தாக மாறியது.
இதனை அடுத்து 25 தீயணைப்பு இயந்திரங்களுடன் அங்கு விரைந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புப்படையினர் கடுமையாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் இதுவரை அந்த இடத்துக்கு அருகில் செல்ல மக்கள் அனுமதிக்கப்படவில்லை. குறித்த அங்காடியில் 66 வணிக நிலையங்கள் அமைந்திருந்த நிலையில் அவற்றில் பல தீயினால் அழிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தீவிபத்தினால் இன்று காலை அந்தப்பகுதியில் இருந்த தமிழ்மக்களும் பெரும் 
அச்சமடைந்துள்ள

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 17 ஜூலை, 2019

உலக சாதனை படைத்த பிரித்தானியாவில் யாழ்ப்பாண யுவதி

பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி ஷிவலிங்கம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஒரு போட்டியில் தனி நபராக 76 கோல்களை பெற்று இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
இம்முறை உலகக்கிண்ண போட்டியில் ஒரு வீராங்கனை மாத்திரம் அதிக கோல் பெற்ற வீராங்கனையாக தர்ஜினி பெயரிடப்பட்டுள்ளார்.
78 முறை மேற்கொண்ட முயற்சியில் 76 முறை கோல் பெற்றுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகின்றது.அதற்கமைய தர்ஜினி 97 சதவீதம் கோல்களை வெற்றிகரமாக பெற்றுள்ளார்.
அத்துடன் இம்முறை போட்டிகளில் அதிக கோல் பெற்றவர்கள் பட்டியலிலும் தர்ஜினி முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளார்.
3 போட்டிகளில் 183 கோல்கள் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் 125 கோல்கள் மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


வியாழன், 4 ஜூலை, 2019

பிரான்ஸ் நாடு பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்துள்ளது

பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.
பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.
பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்
 உறுதியளிக்கவேண்டும்.
பிராண்ஸில் தற்போது 85 விழுக்காட்டுப் பெற்றோர்கள் பிள்ளைகளை அடித்து வளர்ப்பதாகக் கறப்படுகிறது.
தடை விதிப்பதன்மூலம் நிலைமையை மாற்றியமைப்பது 
அரசாங்கத்தின் நோக்கம்


செவ்வாய், 2 ஜூலை, 2019

சிட்னி புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் Bonnyrigg உள்ள அவசர பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு
 வரவழைக்கப்பட்டனர்.
32 வயதான நபரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் காயத்துடன் அவர் மீட்கப்பட்டிருந்தார்.
காயமடைந்தவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 60 வயதான நபர் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.


வெள்ளி, 14 ஜூன், 2019

தடுப்பு முகாமிலிருக்கும் ஈழ அகதியின் பரிதாபமான வேண்டுகோள்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாகதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர் தன்னை விடுதலை செய்து பிரிட்டனில் உள்ள சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்
.2013 முதல் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.பிரிட்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன்
 இணைவதற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சு அனுமதி மறுக்கின்றது
 என பிரிட்டனின் குடிவரவு தீர்ப்பாயத்திற்கு அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட நபர் இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள் காரணமாக உளநல பாதிப்பிற்கு 
உட்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனது சகோதரர் அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளார் என லண்டனில் வசிக்கும் சுப்பிரமணியத்தின் சகோதரி
 சுசீலா நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.எனது சகோதரர் ஒரு அகதியென அவர் தெரிவித்துள்ளார்.எனது சகோதரர் மோசமடைந்து வரும் மனோநிலையால் பாதிக்கப்பட்டுள்ளார்,அவரது எதிர்காலம் குறித்து நான் அச்சமடைந்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 11 ஜூன், 2019

உலகில் அதிக திருமணம் செய்து சாதனை படைத்த கல்யாண மன்னன்

உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்டவர் என்ற பெயருக்கு கலிபோர்னியாவில் வசித்த கிளையன் உல்ப் என்பவர்
 சொந்தக்காரராக உள்ளார்.1908ம் ஆண்டு பிறந்த கிளையன் 1997ம் 
ஆண்டு உயிரிழந்தார். கின்னஸ் சாதனை புத்தகத்தின் தகவல்படி கிளையன் 29 பெண்களை தனித்தனியாக திருமணம்
 செய்து உள்ளார்
. கிளையனுக்கு 40க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர்.இவரின் முதல் மனைவி பெயர் மார்கி மெக்டொனால்ட். இவரை 
கிளையன் 1926ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்
. இவரது கடைசி மனைவி பெயர் லிண்டா. இவரை 
கிளையன் 1996ம் 
ஆண்டு மணந்தார்.இதில், பல பெண்களை கிளையன் விவாகரத்து செய்தார். சிலர் அவருடன் வாழும் போதே இறந்து 
விட்டனர். கிளையன் குறைந்தபட்சமாக ஒரு பெண்ணுடன் 19 நாட்களே கணவராக வாழ்ந்துள்ளார். அதிகபட்சமாக ஒரு பெண்ணுடன் 11 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 5 ஜூன், 2019

தாய், மகள் பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு வழக்கு

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும்
 நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
 அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 1.24 கோடி) வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். மாசுபாட்டை தடுக்க அரசு எந்தவித பாதுகாப்
பு நடவடிக்கையும் 
எடுக்கவில்லை, முக்கியமாக கடந்த டிசம்பர் 2016 ல் பாரிஸ் மிகவும் அதிகமான மாசுபாட்டை சந்தித்த போதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும்
 அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, தங்கள் கட்சிக்காரர்கள் இருவருமே சுவாசக் கோளாறுகளால் பாதிக்கபட்டுள்ளதாகவும், மேலும் அப்பகுதியிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் பகுதிக்கு
 இடம்பெயர்ந்ததிலிருந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பிரான்ஸ் அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை
 எனவும் வாதிட்டார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அவுஸ்திரேலியா 20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளது

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த   படகை கடந்தவாரம் தடுத்துநிறுத்தி அதிலிருந்தவர்களை நாடு கடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திர பகுதியில் குறிப்பிட்ட படகு கண்டுபிடிக்கப்பட்டது அதில் குழந்தையொன்று உட்பட 20 பேர் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன
குறிப்பிட்ட படகுடன் அதிலிருந்தவர்களை கிறிஸ்மஸ்தீவுகளில்  தடுத்துவைத்திருந்த அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களின் புகலிடக்கோரிக்கையை நிராகரித்த பின்னர் அவர்களை வாடகை விமானமொன்றின் மூலம்  இலங்கைக்கு 
அனுப்பிவைத்துள்ளனர்
இலங்கையில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்ற பின்னரே இந்த படகு அங்கிருந்து புறப்பட்டுள்ளது என தகவல்கள் 
வெளியாகியுள்ளன
அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டமை ஐந்து வருடங்களில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு காரணங்களிற்காக படகு தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிடப்போவதில்லை என  பிரதி பிரதமர் தெரிவித்துள்ளார்.
உலகச்செய்திகள் 02.0

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இனி பேஸ்புக் பயன்படுத்தினாலே அமெரிக்கா செல்ல முடியும்

அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை விண்ணப்பதார்கள் சமர்பிக்க வேண்டுமெ
ன தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நடவடிக்கையினூடாக 14.7 மில்லயன் மக்கள் பாதிப்படைவார்கள் என அந்த நாட்டு அதிகாரிகள்
 கூறுகின்றனர்.
எனினும் இராஜதந்திர ரீதியான செயற்பாடுகளுக்காக அமெரிக்க வீசாவை பெறுபவர்கள் இவ்வாறு தமது சமூக வளைத்தள தரவுகளை வழங்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் கல்விசார் வீசாவை பெறுபவர்கள் தமது சமூக வளைத்தள தரவுகளை வழங்க வேண்டுமென அமெரிக்க தரப்புக்கள்
 குறிப்பிடுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் 
செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 31 மே, 2019

சிறுவனுக்காக விமானத்தில் பறந்து வந்து இன்ப அதிர்ச்சி

தெருவிளக்கில் படித்த பெரு நாட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் விக்டர் மார்ட்டின். வறுமையான குடும்பத்தில் பிறந்த விகிப்பில் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிறந்த மாணவராக இருந்துள்ளார். இந்நிலையில் சிறிய வீட்டில் வசித்துவந்த அவர் வீட்டில் மின்சார 
வசதி இல்லாத நிலையில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் நாள்தோறும் தனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள தெருவிளக்கிற்கு கீழே அமர்ந்து படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் தெருவிளக்கில் படிப்பதையும், வீட்டுபாடம் 
செய்வதையும் நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதனை கண்ட பஃஹ்ரைனை சேர்ந்த இளம் கோடீஸ்வரர் ஆன யாகூப் யாஸிப் அஹமத் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்
.பின்னர் அவர் சமீபத்தில் தமது விமானம் மூலமாக பெரு நாட்டிற்கு வந்துள்ளார் மேலும் அங்கு சிறுவன் விக்ரின் வீடு இருக்கும் பகுதியை கண்டறிந்து நேராக அவரது வீட்டிற்கு சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.பின்னர் அவரது
 வீட்டுக்கு மின்சார 
வசதி செய்து கொடுத்து, அவரது வீட்டையும் புதிதாக சீரமைக்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அது
 மட்டுமின்றி விக்டர் படிக்கும் பள்ளிக்கும், அவனை போலவே படிப்பதற்கு கஷ்டப்படும் சிறுவர்களுக்கும் உதவப் போவதாக 
தெரிவித்துள்ளார்.இவ்வாறு ஏழ்மையால் 
வாடும் பலருக்கும் தானே முன்வந்து எந்த ஒரு பலனும் இல்லாமல் உதவி செய்யும் யாகூப் யூசுப் அகமதுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 16 ஏப்ரல், 2019

பாரிஸ் நகரில் 850 ஆண்டு பழமையான தேவாலயம் தீ விபத்து

பாரிஸ் நகரில் 850 ஆண்டு பழமையான  உள்ள நோட்ரே டேம் கேதட்ரல் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
15,04,2019, மாலை 5.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
தீயணைப்புப்படையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
உலகிலேயே ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் உதாரணமாகத் திகழ்ந்த இந்த பழமையான தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டது பாரிஸ் மக்களை 
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 15 ஏப்ரல், 2019

மீண்டும் இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்
 தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பாலு நகரத்திலிருந்து வெகு தூரத்தில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை,இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா தீவில் குமுறிக் கொண்டிருந்த கிரகடாவ் என்ற எரிமலை கடந்த டிசம்பரில் வெடித்துச் சிதறியது.இதனையடுத்துக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளை
 சுனாமி தாக்கியது.
இதில் சிக்கி 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 800 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்
இந்நிலையில், இந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>