நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 19 டிசம்பர், 2019

வானில் பறந்து சென்ற விமானத்தில் பெண் செய்த செயல் அச்சத்தில் பயணிகள்

துருக்கியில் விமானத்திற்குள் இருந்த பெண் ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்கச் செய்யப்போவதாக கூறி பீதியைத் தூண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கென் விமான நிலையத்திலிருந்து துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸில் உள்ள எர்கன் சர்வதேச விமான நிலையத்திற்கு 
புறப்பட் விமானம் தயராக இருந்தது.
அப்போது, விமானத்திற்குள் கருப்பு கண்ணாடி மற்றும் நீல நிற முக்காடு அணிந்திருந்து பெண் ஸ்ரீ, தான் FETO இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கத்தி, கோபமாக குரானை படித்து விமானத்தை வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தியதில் பயணிகள் பீதியில் உறைந்துள்ளனர்.
மேலும், தன்னிடம் ஐந்து வெடிக்குண்டுகள் இருப்பதாக அப்பெண் பீதியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், 
சர்ச்சைக்குரிய இயக்கத்தின் பின்னணியில் உள்ள இஸ்லாமிய மதகுருவான ஃபெத்துல்லா குலனின் படத்தையும் அவர் கையில் வைத்திருந்துள்ளார்.
பெண்ணின் பயங்கரமான செயலுக்கு பிறகு பயணிகளால் கட்டுப்படுத்தப்பட்டு விமானத்திலிருந்து வெளியேறப்பட்டார் என்று
 உள்ளுர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.பின்னர், பாதுகாப்பு குழு விமானத்திற்குள் நுழைந்து சோதனை 
செய்துள்ளது, எனினும் சந்தேகத்திற்கிடமான 
எதுவும் சிக்கவில்லை.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக