நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 17 டிசம்பர், 2019

ஆழ்கடலில் கடலுக்குள் மூழ்கிய வீரருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விசித்திர மிருகம்


பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கிய வீரரை சீல் எனப்படும் கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காண்பது பலருக்கும் பிடித்தமான செயல் 
எனலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் கண்டிராத அரிய வகை உயிரினங்களும் நம் கண்களை
 கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண மீன்களும் இருக்கும். அதே நேரத்தில் ஆபத்துகளும் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம்.
கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பிட்ட பகுதியில் கடலின் தன்மை, புதை படிமங்கள் போன்றவற்றை கண்டறிய
 நீர் மூழ்கி வீரர்களும் கடலுக்குள் செல்வது உண்டு. அவ்வகையில், பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கி வீரரை சீல் எனப்படும் கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.-

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

                

0 கருத்துகள்:

கருத்துரையிடுக