நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 31 டிசம்பர், 2020

அரசியல் தஞ்சம் பிரித்தானியாவில் கோரியுள்ள பெருமளவு இலங்கைத் தமிழர்கள்

பிரித்தானியாவில் 6718 இலங்கையர்கள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 4 வருடங்களில் குறித்த
 இலங்கையர்கள் தஞ்சம் கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் மரண
 அச்சுறுத்தல் உள்ளதாககூறி குறித்த  
இல்கையர்கள் தஞ்சம் கோரியுள்ளனர்.இவர்களில் 144 இலங்கையர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அரசியல் பாதுகாப்பு கோரிய நபர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் தமிழர்கள் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 10 டிசம்பர், 2020

முகநூல் தளத்துடன் இணைந்த மெசஞ்சர் உலக அளவில் பாதிப்புற்றது

உலக அளவில் முகநூல் தளத்துடன் இணைந்த மெசஞ்சர் செயலியின் இயக்கம் கடந்த ஒன்றரை மணி நேரமாக 
பாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா நாடுகளில் மதியம் 2.30 மணிக்கும் இலங்கையில் 3.55 மணியில் இருந்தும் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்யும் பணியில் மெசஞ்சம் தொழில்நுட்ப 
குழு ஈடுபட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 1 டிசம்பர், 2020

பாதசாரிகளை ஜேர்மனியில் மோதித்தள்ளியது கார் நால்வர் ஸ்தலத்தில் பலி

ஜேர்மனியில் கார் ஒன்று பாதசாரிகளை மோதித்தள்ளிய சம்பவத்தில் ஒன்பது மாத குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஜேர்மனியின் மேற்கு பகுதி நகரமான டிரையரில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்ததாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவோ அல்லது மதரீதியாகவோஇடம்பெற்றதாக தாம் கருதவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகர மேயர் இந்த சம்பவத்தை "பயங்கரமானது" என்று விவரித்தார்.
இந்த சம்பவத்தில் 25 மற்றும் 73 வயதுடைய இரண்டு பெண்கள், 45 வயது ஆண் மற்றும் ஒன்பது மாத குழந்தை அடங்குவதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 29 நவம்பர், 2020

காரை வழிமறித்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட அணுவிஞ்ஞானி

காரை வழிமறித்து ஈரானின் ராணுவ ஆலோசகரும், மூத்த அணு விஞ்ஞானியுமான மொஹ்சென் பக்ரிசாதே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது. இதனால், ஈரான் தலைவர்கள் அதிர்ச்சி 
அடைந்துள்ளனர். இந்த படுகொலையால் ஆவேசம் அடைந்துள்ள ஈரான் அதிபர் ரவுகானி, ‘இதற்கு சரியான நேரத்தில் பழி தீர்ப்போம்’
 என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘ராணுவத்தினர் பதுங்கிப் பாய்ந்து தாக்குவது போல, ஒரு விஞ்ஞானியை மறைந்திருந்து வழி மறித்துக் கொன்றுள்ளனர். கவனமாகத் திட்டமிட்டு இந்த படுகொலை நடந்துள்ளது. பக்ரிசாதேவை கொன்று விட்டதால் ஈரானின் அணுசக்தித் திட்டம் முடங்கி விடாது. மேற்கத்திய நாடுகள் ஈராக்கின் அணுசக்தி
 திட்டத்தின் மீது கொண்டுள்ள பயத்தையே 
இந்த தாக்குதல் காட்டியுள்ளது. பக்ரிசாதே படுகொலைக்கு உரிய நேரத்தில் பழி தீர்க்க்பபடும்,’’ என்றார். இந்த படுகொலைக்கு 
இஸ்ரேல் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் சந்தேகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி 
வரும் ஈரான் அணுசக்தி திட்டத்தின் சூத்ரதாரி பக்ரிசாதே. டெக்ரானிலிருந்து 40 கிமீ தொலைவிலுள்ள கிழக்குப் பகுதியில் 28-11-20.அன்று  காரில் சென்று கொண்டிருந்தார் பக்ரிசாதே.அ.ப்போது 
வெடிபொருட்கள் கொண்ட ஒரு பழைய லாரி அவரது கார் அருகில் வந்து பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த
 அவரது ஓட்டுநர் காரை நிறுத்தியுள்ளார். அப்போது
 மறைந்திருந்த ஆயுதம் தாங்கிய 5 பேர் காரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் பக்ரிசாதே உயிரிழந்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 24 நவம்பர், 2020

இந்தியா மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது

இந்திய அரசு மேலும் 43 சீன செயலிகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பதாக 24-11-20.இன்று (செவ்வாய்க்கிழமை)  அறிவித்துள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு 69-ஏ பிரிவுக்கு உட்பட்டு இந்த அரசாணை 
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செயலிகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடும் காரணத்தால் முழுவதுமாக தடை செய்யப்படுகின்றன என்று அரசாணையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது,
உட்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் விரிவான அறிக்கைகள் பெறப்பட்டே இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருடம் ஜூன் 29ஆம் திகதி 59 செயலிகளும் செப்டம்பர் இரண்டாம் திகதி 118 செயலிகளும் இதே சட்டப்பிரிவின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திடீரென பிரான்ஸில் தன்னார்வலர்களால் அமைக்கப்பட்ட அகதி முகாம்கள்

பிரான்ஸில் திடீரென பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் இணைந்து, அகதி முகாம்களை அமைத்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Place de la République என்ற பகுதியில் 23-11-20.அன்று  (திங்கட்கிழமை) மாலை மாலை 7 மணி அளவில் இங்கு வந்து சேர்ந்த பல நூறு வரையான தன்னார்வ தொண்டர்கள், சிறிய கூடாரங்களை அமைத்து அதற்குள் இருந்து 
ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கிருந்த கூடாரங்களை அப்புறப்படுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கடந்த வார இறுதியில் செந்தனியில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை அரசாங்கம் வெளியேற்றியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் 
இடம்பெற்றது.
அகதிகளுக்கான போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் அவர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக குற்றம் சாடிய அமைப்பினர், விரைவில் அவர்களுக்கான பாதுகாப்பான தங்குமிடத்தை அமைத்துக்கொடுக்கும்
 படியும் கோரினர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 16 நவம்பர், 2020

பராக் ஒபாமா பதில் என் மனைவி என்னைப் பிரிந்து சென்றுவிடுவார்

ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம் பெற்றால் தனது மனைவி பிரிந்து சென்று விடுவார் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 
தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று தெற்காசியாவை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை 
அதிபராகிறார்.
இதனால், அடுத்த ஆண்டு ஜனவரியில் பைடன் புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறுவது பற்றி ஒபாமாவிடம் கேள்வி
 எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஒபாமா, பைடனுக்கு எனது ஆலோசனை தேவைப்படாது. அவர் தனது அமைச்சரவையில் எனக்கு
 ஓரிடம் அளிக்கிறார் என்றால், அதில் நான் இடம் பெறமாட்டேன். ஒருவேளை பைடன் அமைச்சரவையில் சேர்ந்து 
விட்டால், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விடுவார் என ஒபாமா அச்சம் தெரிவித்து உள்ளார்.
ஆனால், பைடனுக்கு தன்னால் முடியும் பட்சத்தில் உதவி செய்வேன் என்று ஒபாமா உறுதியுடன் கூறியுள்ளார். வெள்ளை மாளிகை பணியாளராக உடனடியாக செயல்பட நான் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என்றும் ஒபாமா என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 44வது அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. இவரது தலைமையின் கீழ் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை துணை அதிபராக பைடன் இருந்தார் என்பது 
குறிப்பிடத்தக்கது.

 இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 14 நவம்பர், 2020

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய 
உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவக்கிரி http://lovithan.blogspot.com/ இணையம் நவக்கிரி.கொம் நவக்கிரி நவக்கிரி .கொம்    .நிலாவரை.கொம்  இணையங்களின் 
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேசங்களில் வாழும் அனை வரும்
 கொண்டாடி மகிழ்வார் 
 ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். 
மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.
வாழ்கவளமுடன் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 9 நவம்பர், 2020

தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை, அவரது மனைவி மெலானியா விவாகரத்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை, அவரது மனைவி மெலானியா விவாகரத்து செய்ய உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்புக்கும் அவரது மூன்றாவது மனைவி மெலானியாவுக்கும் இடையே மனக் கசப்பு இருந்ததாகவும் ட்ரம்ப் அதிபராக இருக்கும் போது விவகாரத்து பெற்றால் தான் தண்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் தற்போதுவரை காத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலானியா விவாகரத்து செய்வார் என, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
 தெரிவித்துள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 6 நவம்பர், 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களம்..வெள்ளை மாளிகையை கைப்பற்றப் போவது யார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என மாநில செயலாளர் கெத்தி புக்வோர் தெரிவித்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
பைடனுக்கு 50.4 வீத வாக்குகள் கிடைத்துள்ள 
நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி ட்ரம்பிற்கு 47.9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.பைடன் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு ஆறு 
வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது.வாக்கு எண்ணும் பணிகளில் முறைக்கேடு நடந்துள்ளதாகவும் அதனால் மீள தேர்தலை நடத்துமாறும் கோரும் ட்ரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.அதனடிப்படையில் 
எலெஸ்கா மாநிலத்தில் 3 தேர்தல் தொகுதிகளும், ஜோர்ஜியா மாநிலத்தில் 16 தேர்தல் தொகுதிகளும், நெவாடா மாநிலத்தில் 6 தேர்தல் தொகுதிகளும், வட கரோலினா மாநிலத்தில் 15 தேர்தல் தொகுதிகளும் 
மற்றும் பென்சில்வேனியா மாநிலத்தில் 20 தேர்தல்கள் உள்ளனஆகவே இந்த ஐந்து மாநிலங்களின் முடிவுகளின் முடிவைப் பொறுத்தே இறுதி முடிவு அமையும் என கூறப்படுகின்றது.
பைடன் ஓரளவு முன்னிலை வகிக்கும் நெவாடா மாநிலம் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அதிலும், குறிப்பாக 20 தேர்தல் வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி 
பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இங்கு ஆரம்பத்தில் ட்ரம்ப் 1,08,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார்.இதனால், ஜோ பைடன் பென்சில்வேனியாவில் நிச்சயம் வெற்றி பெறுவார் என ஜனநாயக கட்சி பிரசாரக்குழு 
கூறுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி 
முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என
 மாநில செயலாளர் தெரிவித்துள்ளர் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 5 நவம்பர், 2020

தேர்தல்..2020- பராக் ஒபாமாவின் சாதனையை முறியடித்து வெற்றி நடை போடும் ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், ஜோ பிடன் 264 தேர்தல் சபை வாகுகளுடன் முன்னிலையில் உள்ளார்.தற்போதுவரை
 ஜோ பிடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271 (50.3%)என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை 67,567,559 (48%) வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளைவிடவும், 2012-ல் அதிபர் பராக் ஒபாமா பெற்ற வாக்குகளைவிடவும் அதிகமாகும்.வாக்குகளை
 பெறுவதில் ஜோ பிடன் சாதனை 
புரிந்தாலும், தேர்தல் சபை வாக்குகள் அடிப்படையில் அதிபர் தேர்வு நடைபெறுவதால், இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தங்கள் வேட்பாளரே இறுதியில் ஆட்சியை
 கைப்பற்றுவார் என கூறி வருகின்றனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெள்ளை மாளிகையை கைப்பற்ற, ஒரு அமெரிக்க
 வேட்பாளர் மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில் 270 ஐ வெல்ல வேண்டும். நவம்பர் 3 ம் திகதி தேர்தல் நாளுக்கு முன்னதாக 10 கோடி அமெரிக்கர்கள் வாக்களித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 4 நவம்பர், 2020

விண்வெளியிலிருந்து அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்தர் கேட் ரூபின்ஸ்

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்தே இரண்டாவது முறையாக பதிவுசெய்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான தனது வாக்க‍ை விண்வெளியிலிருந்து பதிவுசெய்தார் ரூபின்ஸ். குறை புவி சுற்றுப்பாதையில் இருந்துகொண்டு இவர் தனது வாக்கைப் ப
திவுசெய்தார்.¨

நிலாவரை.கொம் செய்திகள் >>>





ஞாயிறு, 1 நவம்பர், 2020

பிரித்தானியா..அடுத்த வாரம் முழுமையாக லொக்டவுணுக்கு செல்கிறது

அதிதீவிரமாக மாறும் கொரோனா.. வேறு வழியில்லாமல் அடுத்த வாரம் முதல் நாடு தழுவிய ரீதியில் லொக் டவுனை அறிவிக்க பொறிஸ் ஜேன்சன் தயாராகி வருவதாக  செய்திகள் வெளியாகி உள்ளது. இது நாள் வரை லொக் டவுன் என்னும் பிரச்சனை
 இழுபறி நிலையில் இருந்தது.
ஆனால், மருத்துவ விஞ்ஞானிகள் கொடுத்த அறிக்கை ஒன்றை முற்றாக படித்துப் பார்த்த பிரித்தானிய பிரதமர், லொக் டவுன் ஒன்றை கொண்டு வந்தால் தான், நிலையை கட்டுப்பாட்டினுள் கொண்டு
 வர முடியும் என்ற முடிவை எட்டியுள்ளார் என்று சற்று முன்னர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அரசை மேற்கோள் காட்டி, பிரித்தானிய MP க்கள் பலர் லொக் டவுனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். காரணம் என்னவென்றால், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நாடுகளில் அரசின் திறைசேரியில் பணம் இல்லை என்பது தான். இந்த 2 நாடுகளும் ஏற்கனவே வங்குரோத்தில் சென்று தற்போது கடன்கார நாடாக 
மாறியுள்ளது
. எனவே பிரித்தானியாவையும் லொக் டவுன் செய்தால், பிரித்தானியா பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என பல MP க்கள் கருத்து 
தெரிவித்து வந்தார்கள்.இன் நிலையில் தான், மருத்துவ விஞ்ஞானிகளின் அறிக்கை ஒன்று வெளியாகி, உண்மை 
நிலையை உணர்த்தியுள்ளது.
 இதனால் அடுத்த வாரம் முழு அளவிலான லொக் டவுன் வரப்போகிறது.. பிரித்தானிய மக்களே  பிரித்தானியத்தமிழ்மக்களே .உங்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து 
வைத்தால் நல்லது

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 29 அக்டோபர், 2020

நிலநடுக்கம் துருக்கி, கிரீஸ் நாடுகளில் 7 ரிக்டர் அளவில் 14 பேர்உயிரிழப்பு

துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில்,30-10-20. இன்று மதியம் இடம்பெற்ற நில அதிர்வில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 419 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் பல கட்டங்கள் இடிந்துள்ளன. மீட்பு பணி நடைபெற்று 
வருகின்றது.
இந்த நிலநடுக்கம் துருக்கி கடற்கரையில் சமோஸ் தீவின் வடக்குப் பகுதியில் நியான் கார்லோவேசனுக்கு வடகிழக்கில் 8.5 மைல் தொலைவில் ஏஜியன் கடல் மத்தியில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் 
கூறுகின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 22 அக்டோபர், 2020

பிரீசரில் ஒரு வருடத்திற்கு வைத்த நூடுல்ஸ்சை சாப்பிட்ட 9 பேருக்கு நேர்ந்த சோகம்

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் மாகாணம் ஜிக்சி நகரில் ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் உணவானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 
பிரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளது. அந்த உணவை குடும்பத்தினர் அக்டோபர் 10 ஆம் திகதி அன்று சமைத்து 
சாப்பிட்டு உள்ளனர். இதில் 8 பேர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.இன்னொருவர் மருத்த்துவ சிகிச்சையில் குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த 
நிலையில்,19-10- 20. திங்களன்று மரணமடைந்துள்ளார்.சூடோமோனாஸ் கோகோவெனான்கள் என்ற பாக்டீரியத்தால் உற்பத்தி செய்யப்படும் சுவாச 
நச்சுத்தொகையான போங்க்ரெக்கிக் அமிலத்தின் அதிக செறிவு சோள நூடுல்ஸிலும், நோய்வாய்ப்பட்டவர்களின்
 இரைப்பை 
திரவத்திலும் கண்டறியப்பட்டதாக மாகாண சுகாதார ஆணையம் அக்டோபர் 12 அன்று தெரிவித்துள்ளது.போங்க்ரெக்கிக் அமிலத்தால் மாசுபடுத்தப்பட்ட உணவை உட்கொள்வது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் விஷத்தை ஏற்படுத்தி மரணத்திற்கு கூட 
வழிவகுக்கும், இறப்பு விகிதம் 40 முதல் 100 சதவீதம் வரை அதிகமாக இருக்கும்.ஆனால், சம்பவத்தன்று, அந்த நூடுல்ஸ் உணவை சாப்பிட மறுத்த மூன்று குழந்தைகள், அதிர்ஷ்டவசமாக
 உயிர் தப்பியுள்ளது.பொதுவாக சோள மாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உணவானது, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒருவகை ரசாயனத்தால் கெட்டுப்போகும் எனவும், அது சீனாவில் அடிக்கடி நடப்பது தான் எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட்டதும் வயிற்று வலியில் தொடங்கி 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தோனேசியாவில் இதுபோன்ற 
உடல் உபாதைகளால் 1951 முதல் 1975 வரை ஆண்டுக்கு
 288 பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், அதில் 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 
கூறப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>



பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஒருவர் மரணம்

பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட ஒருவர் உயிழந்துள்ளதாக 
பிரேசிலின் சுகாதார ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,தொடர்ந்து தடுப்பு மருந்து பரிசோதனை நடைபெறும் என 
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உறுதிசெய்துள்ளது.உயிரிழந்த அஸ்ட்ராசெனிகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட நபர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்று சாவோபோலோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த அந்த நபர் வயது 28 என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆபிரிக்கா போன்ற 
நாடுகளில் நடைபெற்று
 வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அஸ்ட்ராசெனிகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் சோதனைகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் ரகசியத்தன்மையை சுட்டிக்காட்டி பிரேசிலிய சுகாதார ஆணையாளர் மேலும் விவரங்களை
 வழங்கவில்லை, ஆனால் இது தொடர்பான 
விசாரணையில் இருந்து 
தரவைப் பெற்றதாகக் கூறினார்.இதற்கிடையில், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பிரேசிலில் ஒரு கொரோனா
 வைரஸ் தடுப்பூசி சோதனை செய்யப்பட்ட நபரின் மரணம் குறித்த மதிப்பீட்டைத் தொடர்ந்து, மருத்துவ பரிசோதனை குறித்து எந்த கவலையும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது
.பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் 5,300,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,155,459 பேர் உயிரிழந்துள்ளார்கள்.அதன்படி, பிரேசில் கொரோனா வைரஸ் உயிரிழப்பில் மெரிக்காவிற்கு 
அடுத்தபடியாக உலகில் இரண்டாவது இடத்திலுள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா 
மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின்ல் மூன்றாவது இடத்திலுள்ளது.இங்கிலாந்தில் ஒரு 
நோயாளி கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் பரிசோதனைகளை அமெரிக்கா
 நிறுத்தியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தடுப்பூசி குறித்த மறுஆய்வு நிலுவையில் உள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

 நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 20 அக்டோபர், 2020

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் நடைபெறவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து 
கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 28ம் திகதி 
கொழும்பில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையிலேயே அவர் 
கலந்துகொள்ளவுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 19 அக்டோபர், 2020

நிலச்சரிவில் சிக்கி வியட்நாமில் 22 இராணுவ வீரர்கள் மாயம்

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


குவாங் திரியில் இராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளனர்.


இந் நிலையில் அண்டை மாகாணமான துவா தியென் ஹியூ மாகாணத்தில் 3 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலச்சரிவில் இராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.¨

நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 18 அக்டோபர், 2020

பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் நியூஸிலாந்து பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி

நியூஸிலாந்து பொதுத் தேர்தலில், தற்போதைய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
77 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஆர்டெர்னின் இடது சாரி தொழிற்கட்சி 49 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
தொழிற்கட்சியின் பிரதான எதிர்க்கட்சியான
 மத்திய-வலது தேசியக் கட்சி 27 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.இதன்போது, தேசியத் தலைவர் ஜூடித் காலின்ஸ், தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, ஆர்டெர்னை வாழ்த்தினார்.முடிவுகள் இன்னும் கணக்கிடப்படுகின்றன. சிறப்பு வாக்குகள், வெளிநாடுகளில் வசிக்கும் நியூசிலாந்தர்கள் அளித்த வாக்குகள் உட்பட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு மூன்று வாரங்களில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 சதவீத
 வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டென் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.வெற்றி குறித்து
 ஜெசிந்தா கூறும்போது, “அடுத்த மூன்று
 ஆண்டுகளில் நிறைய பணிகள் உள்ளன. கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டைச் சிறப்பாகக் கட்டமைப்போம்” என்றார்.இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல்வேறு
 தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நியூசிலாந்து
 பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் சிறப்பாகச் செயால்பட்டதன் காரணமாக சர்வதேச நாடுகளால் பாராட்டப்பட்டார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக ஜெசிந்தா மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக
 ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.தொழிற்கட்சி 
கடந்த தேர்தலில் 37 சதவீதம் பெற்றிருந்தது. அதே நேரத்தில் அதன் தற்போதைய 
கூட்டணி பங்காளியான பசுமைக் கட்சி 7.6 சதவீதத்தினை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 6.3 சதவீதத்தை பெற்றது.தொழிற்கட்சி தனியாக ஆட்சி செய்ய முடியுமா அல்லது பசுமைவாதிகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்த இறுதி முடிவுகள் வரும் வரை இது
 தெளிவாக இருக்காது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 14 அக்டோபர், 2020

நீங்கள் பழைய ஆடைகளை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும்?

ஆடைகளை எந்த மறுசுழற்சி தொட்டியில் இடுகிறீர்கள் எங்கள் இல்லத்தில், பழைய துணிகளை அவை கிழியும் வரை நாங்கள் அப்புறப்படுத்திடுவதில்லை. அவை கிழிந்தால், அவை அரதக் கந்தல் ஆகும் வரை, அவற்றை வீட்டைத் தூய்மை செய்யப் பயன் படுத்துகிறோம். அரத்தக் கந்தல் ஆனதும் அவற்றை எரித்துவிடுகிறோம். தேவையின்றித் துணிகளை 
வாங்குவதே இல்லை.
தொடர்புடைய கேள்விகள்
சரியான மற்றும் நேர்த்தியான முறையில் உடை அணிவது எப்படி என ஆண்களுக்கு சொல்ல முடியுமா?
ஆடையை நேர்த்தியாக மடிப்பது எப்படி?
பெண்களின் ஆடை‌ உடல் பாகங்களை வெளிக்காட்டும் விதமாக வடிவமைக்கப்படுகிறதே, ஏன்?
ஆடை வடிவமைப்பு பற்றிய புத்தகங்களை பெறுவது எப்படி?
வெள்ளை மற்றும் பிரகாசமாக தோற்றமளிக்க உட்புற ஆடைகளை எப்படி கழுவ வேண்டும்? ஏதாவது சிறப்பு சோப்பு தூள் அல்லது சோப்பு கிடைக்குமா? (பனியன் வெள்ளை நிறமாக தோற்றமளிக்க)
அழகைக் கூட்டும் ஆடைகளைத் தேர்வு செய்வது எப்படி?
பைகள் கொண்ட ஆடைகள் அதிகமாக 
இருப்பதில்லை ஏன்?
பருத்தி (cotton) துணிகளால் செய்யப்பட்ட ஆடைகள் எப்படி 100 ரூபாய்கும் கிடைகின்றது 10,000 ரூபாய்கும் கிடைக்கின்றது? பருத்தியில் 
பல வகைகள் உள்ளதா?
நீங்கள் அணிந்துக் கொண்டிருக்கும் ஆடையைப் பற்றிய எதை விரும்புகிறீர்கள்?
அணிவதற்குக் குறைவாக கவனத்தைக் கவர்கிற நிற ஆடை எது?
உங்களுக்குப் பிடித்த ஆடை முறை எது?
ஆண்கள் அவர்களின் பழைய ஆடைகளை என்ன செய்கிறார்கள்?
மாநிறமாக உள்ள பெண்களுக்கு எந்த நிற 
ஆடைகள் எடுப்பாக இருக்கும்?
பெண்களுக்கு எந்த ஆடைகள் மிகவும் அசௌகரியமாக இருக்கின்றன?
ஆண்கள் எந்த உடை அணிந்தால் பெண்களுக்கு பிடிக்கும்? பெண்கள் எந்த உடை அணிந்தால் ஆண்களுக்கு பிடிக்கும்?

நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 10 அக்டோபர், 2020

நியூசிலாந்து அரசு அறிவிப்பு கொரோனாவின் 2 வது அலையையும் தோற்கடித்துவிட்டோம்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதில், வெற்றி பெற்ற நாடுகளில் முதல் இடத்தில் நியூசிலாந்து உள்ளது.
அந்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்ட உடனே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு,
 கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதால், ஊரடங்கு தளர்பட்டது.ஆனால், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி அந்நாட்டின் தலைநகர் ஆக்லாந்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே ஆக்லாந்தில் பகுதியில் மீண்டும் ஊரடங்கு
 பிறப்பிக்கப்பட்டது.
கொரோனாவின் இரண்டாவது அலையினை கட்டுப்படுத்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான அரசு தீவிரமாக களத்தில் இறங்கி பணி செய்தது.அதன் காரணமாக தற்போது கடந்த 12 நாட்களில் ஆக்லாந்து நகரில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 50 லட்சம் பேர் கொண்ட நியூசிலாந்தில் இதுவரை 1,855 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது.கொரோனாவிலிருந்து 1790 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 40 பேர் சிகிச்சை பெற்று
 வருகின்றனர். கொரோனாவால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.12 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பரவாததையடுத்து, அங்கு விதிக்கப்பட்டிருந்த 
ஊரடங்கு தளர்த்தப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய 
பிரதமர் ஜெசிந்தா, இந்த ஆண்டு மிக நீண்ட ஆண்டாகவே உள்ளது போன்ற உணர்வு உள்ளது. எது எப்படியோ, 
நியூசிலாந்து மக்கள் சரியாக சமூக இடைவெளியினை பின்பற்றி உள்ளதால், இரண்டவாது முறையும் கொரோனா வைரசை மீண்டும் தோற்கடித்துள்ளோம் என பெருமையுடன் கூறினார் பிரதமர் ஜெசிந்தா.ஆர்டெர்ன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 7 அக்டோபர், 2020

ஒரே நாளில் பிரித்தானியாவில் 14,500 பேருக்கு கொரோனா தொற்று

பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணாக இதுவரை சுமார் 42,500 பேர் வரையில் இறந்துள்ளார்கள். 530000 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,542 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கமும் இறுக்கமான கட்டுப்பாடுகள், விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினாலும், எப்படி கொரோனாவை பரப்புகின்றார்கள் என்று பார்க்கின்றீர்களாபெரும்பாலான மக்கள் அந்த
 விதிமுறைகளை மீறும் செயல்களில் ஈடுபடுவதை பரவலாகக் காணக்கூடியதாகவே இருக்கின்றது.
குறிப்பாக Nottingham என்ற இடத்தில் நேற்று இரவு 10 மணியளவில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை ஒரு ஊடகம் 
வெளியிட்டுள்ளது.
இளைஞர்கள், யுவதிகள் முகக்கவசங்கள் இல்லாமல், சமூக இடைவெளியைப் பேனாமல், குடித்து. கும்மாளமிட்டு, ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் வீதிகளில் வலம் வருகின்ற காட்சிகளை அவர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்கள்.
இரவு 10 மணிக்கு பின்னர் மதுபான 
சாலைகள், உணவு விடுதிகள் மூடப்பட்டதாக இறிவிக்கப்பட்ட நிலையில் வீதிகளில் இவ்வாறு நடந்துகொள்வதும், காவல்துறையினரின் கண்முன்பாகவே அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
Nottingham என்ற இந்தப் பிரதேசத்தில் கடந்த 7 நாட்களில் சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>