நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 29 அக்டோபர், 2016

அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அ
னை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து 
பரவசம் அடைவர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 23 அக்டோபர், 2016

ஹெலிகப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய 19 பேர் பலியான பரிதாபம்!.

ரஷ்யா நாட்டில் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சைபீரியாவில் இருந்து நேற்று Mi-8 என்ற ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று 22 பேருடன்
 புறப்பட்டுள்ளது.
சில மணி நேரப்பயணத்திற்கு பின்னர் Yamal Peninsula என்ற பகுதியில் தரையிறங்க முயன்றபோது அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. ஹெலிபேட் அமைந்துள்ள இடம் சரியாக தெரியாததால் ஹெலிகொப்டர் தாறுமாறாக சுழன்றுள்ளது.
பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர் தரையில் வேகமாக மோதி நொறுங்கியுள்ளது. ஹெலிகொப்டரில் தீவிபத்து ஏற்படவில்லை. எனினும், இவ்விபத்தில் சிக்கிய 3 வீரர்கள் உள்பட 19 பேர் உடல் சிதைந்து பலியாகியுள்ளனர். எஞ்சிய 16 பேர் எண்ணெய் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என
 கூறப்படுகிறது.
Alexey Veremev (42) என்னும் பயணி ஒரு கால் ஹெலிகொப்டரில் மாட்டிய நிலையில், வலியால் துடித்து கொண்டே உதவி உதவி என கத்தியுள்ளார். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த மீட்புபணி குழுவினர் அங்குள்ள சடலங்களை மீட்டனர்.
காயத்துடன் அங்கு போராடி கொண்டிருந்த Alexey உட்பட மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவராத நிலையில், இரண்டு கருப்பு பெட்டிகளை கைப்பற்றியுள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 19 அக்டோபர், 2016

இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்சில் படுகொலை`

பிரான்ஸ் நாட்டில் வைத்து இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 16ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த கொலை சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் நான்கு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த கொலைக்கான முழுமையான விபரங்கள் இது வரையிலும் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம்
 வெளியிட்டுள்ளனர்.
மோதல்கள் இடம்பெற்றமைக்கான அடையாளங்கள் கொலை இடம்பெற்ற வீட்டில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், பொபினி நீதிமன்றத்தின் பணிப்பில், கொலைக்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 17 அக்டோபர், 2016

தமிழ் மொழியை அவுஸ்திரேலியாவில் ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள கோரிக்கை!

அவுஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என Prospect தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் (Hugh Mcdermott) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான பிரேரணையை நியூ சவுத் வெல்ஸ் பாராளுமன்றத்தில் நாளைய தினம் தாக்கல் செய்யவுள்ளார்.
தமிழ் கல்வியும், கலாசாரமும் இந்தியா மற்றும் அவுஸ்திரேயாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் 70 மில்லியன் மக்கள் தமிழ் மொழி பேசுகின்றனர். இதனை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழியை பாடப்புத்தகத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவுஸ்திரேலிய மாணவர்களும் பயன்பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இவ்வாறான நடவடிக்கை சமகால மாணவர்களுக்கு
 மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கும் பயனுள்ளதாக அமையும் என ஹூ மெக்டெர்மாட் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியை தேசிய பாடமாக அங்கீகரிக்குமாறு நாளைய தினம் பாராளுமன்றத்தில் வைத்து கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்க முடியும். தமிழை கற்றுக்கொடுக்கும் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
தமிழ் மொழியை பரப்பும் கலாசார நிறுவனங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் பாராளுமன்ற கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயங்களை ஹூ மெக்டெர்மாட்
 குறிப்பிட்டார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நாட்டை விட்டு வெளியேற சம்மதிக்கும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் நிதி!

நாட்டின் அகதிகள் நெருக்கடியை சமாளிக்க பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசாங்கம், நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் வழங்குவதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன
பிரித்தானியாவை விட்டு வெளியேற இணக்கம் தெரிவிக்கும் அனைத்து அகதிகளுக்கும் தலா 2000 பவுண்ட்ஸ் நிதி வழங்கப்படும் என்ற தகவலை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக, சனிக் கிழமை ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் உட்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதல் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் கீழ் இதுவரையான காலப்பகுதிக்குள் 529 அகதிகள் நிதியுதவி பெற்று வந்தனர். இந்த நிதி அவர்கள் பாதுகாப்பான ஏதோவொரு இடத்திற்கு பாதுகாப்பாக செல்வதற்கோ அல்லது தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கோ அல்லது சொந்த நாட்டில் சுய தொழிலை ஆரம்பிப்பதற்கோ பயன்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியா அகதிகள் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஈழத்தமிழர் .அவுஸ்திரேலிய இராணுவ மேஜரான ர் !!!

அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தின் மேஜராகி ஈழத் தமிழினத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். 
அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார்.
லவன் என அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா எனப்படும் குறித்த நபர் தனது 15ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார்.
மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில்,
19 வருடங்களுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம். நாமிருவரும் கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி கற்றோம்.
ஆனால், லவன் ஒருபோதுமே தனது பயணம் குறித்து எதுவுமே சொல்லவில்லை. இருப்பினும் அவனுடைய பயணம் எனக்கு நிறையவற்றைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனை நான் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
நாட்டுக்குள் அகதிகள் தொடர்பாக மக்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்த நேரத்தில், அனைத்து இடங்களிலும் இனவாதம் தலைதூக்கியுள்ள நேரத்தில், வேகமாக மாறிவரும் உலகத்திலும், நிச்சயமற்ற எதிர்காலத்திலும் மக்கள் நம்பிக்கையை இழந்த 
நேரத்தில் இப்பொழுது
 மேஜர் தர்மராஜ் என அழைக்கப்படும் லவனிடமிருந்து நான் பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன். அவனுடைய எளிமையான வாழ்க்கைத் தத்துவம் என்னை அவனிடம் கட்டிப்போட்டுள்ளது
 எனத் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 1 அக்டோபர், 2016

தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடத்தில் உள்ளது!

யேர்மனி டோட்முண்ட நகரில் தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடத்தில் உள்ளது என தெரியுசெய்யுப்பட்டு விருதளிக்கப்பட்டுள்ளது கோணர் என்னும் பியர் நிறுவணத்தினரால் இரண்டாவது ஆண்டாகவும் தெரிவாகியுள்ளது தமிழர்களுக்கு பெருமைதரும் நற் 
செய்தியாகும் ,
புலத்தில் எம்மினம் சிறந்து எல்லாத்துறையிலும் விளங்கி வருகின்றனர் அந்த வகையில் தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடம் என்பது அவருக்கு மகிழ்வு மட்டுமல்ல அங்கே வந்த யேர்மனியர் மகிழ்வு கொண்டாது மட்டுமல்ல அவரின் நற்குணத்தைஅவர்தங்களுடன் பளகும் அன்பை கூறி நின்றார்கள்,
யேர்மனிய வானொலி 92.2 கூட இவர் கருத்தை உள்வாங்கியது இவருக்காணபரிசளிப்பை பாராட்டி நின்றது மட்டுமல்ல அங்கு வந்தவர்கள் இவரைப்பாராட்டி நின்றது தமிழனான எனக்கு மகிழ்வைத்தந்தது என்பது தான் உன்மை இவர் இந்த ஆண்டு பெற்ற பாராட்டு பரிசுபோல் அடுத்த அண்டும் பெறவேண்டும் என்று இவரின் கடைக்கு வருபவர்கள் பாராட்டியதும் மகிழ்வானது இவர் தனது கருத்தை கூறும்
 போது இது 
எனக்கு கிடைத்த மதிப்பளிப்பல்ல உங்கள் எல்லோருக்கும் கிடைத்த பரிசளிப்பு என்ற போது அங்கிருந்தவர்கள் கரங்கள் ஓங்கி ஒலித்தது இவர் சிறப்பு இன்னும் வளர்கவென வாழ்த்தி நிற்போம்,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>