நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 17 அக்டோபர், 2016

நாட்டை விட்டு வெளியேற சம்மதிக்கும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் நிதி!

நாட்டின் அகதிகள் நெருக்கடியை சமாளிக்க பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசாங்கம், நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் வழங்குவதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன
பிரித்தானியாவை விட்டு வெளியேற இணக்கம் தெரிவிக்கும் அனைத்து அகதிகளுக்கும் தலா 2000 பவுண்ட்ஸ் நிதி வழங்கப்படும் என்ற தகவலை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக, சனிக் கிழமை ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் உட்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதல் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் கீழ் இதுவரையான காலப்பகுதிக்குள் 529 அகதிகள் நிதியுதவி பெற்று வந்தனர். இந்த நிதி அவர்கள் பாதுகாப்பான ஏதோவொரு இடத்திற்கு பாதுகாப்பாக செல்வதற்கோ அல்லது தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கோ அல்லது சொந்த நாட்டில் சுய தொழிலை ஆரம்பிப்பதற்கோ பயன்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியா அகதிகள் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக