நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 28 டிசம்பர், 2018

இலங்கைத் தமிழ் குடும்பத்தின் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்டும்

.அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்காக தஞ்சம் கோரியிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தின் மேல்முறையீட்டு மனுவை அவுஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அண்மையில் 
நிராகரித்திருந்தது.
அத்துடன், பெப்ரவரி முதலாம் திகதி வரை இவர்களை இலங்கைக்கு நாடுகடத்தக்கூடாது என தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜான் மிடில்டோன் உத்தரவிட்டிருந்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு படகு வழியாக அவுஸ்திரேலிய சென்ற நடேசலிங்கமும், 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்ற பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் 
செய்து கொண்டுள்ளனர்.
 குயின்லாந்த்தில் உள்ள பிலோயலா (Biloela) என்ற சிறுநகரில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வந்த அவர்களுக்கு கோபிகா, தருணிக்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 2018ஆம் ஆண்டு பிரியாவின் இணைப்பு விசா (Bridging Visa) காலாவதியாகியதாக 'பிரியா- நடேசலிங்கம்' எ
ன்ற இணையரின் வீட்டிற்கு அதிகாலையில் சென்ற அந்நாட்டு எல்லைப்படை, அவர்களை கைது செய்தது.
அதைத் தொடர்ந்து, பிரியா மற்றும் நடேசலிங்கத்துடன் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகளும் இலங்கைக்கே நாடுகடத்தப்படுவார்கள் எனக்
 கூறப்பட்டது.
பிலோயலா நகரில் வசித்து வந்த அவுஸ்திரேலியர்களின் கோரிக்கைகள் மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் நாடு கடத்தப்படுவதிலிருந்து தற்காலிகமாக மீட்கப்பட்டனர்.
அதன் பின்னர், நாடுகடத்தலுக்கு எதிராக அகதிகள் தீர்ப்பாயம் மற்றும் கீழ் நீதிமன்றத்தில் எடுத்து முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தற்போது அவுஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.
இவ்வாறான சூழலில், இவர்களை அவுஸ்திரேலியாவிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு மனித உரிமை ஆர்வலர்களும் அகதிகள் நல செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>br />


வியாழன், 27 டிசம்பர், 2018

ஆர்ஜென்டீனாவில் 32 வருடங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட பெண்மீட்பு

ஆட்கடத்தல்காரர்களால் 1980களில் கடத்தப்பட்ட ஆர்ஜன்டீன பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டு மீண்டும் அவரின் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளார்.ஆர்ஜன்டீன மற்றும் பொலிவிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தற்போது 
45 வயதாகும் அந்தப் பெண் எங்கே இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தெற்கு பொலிவியாவின் பெர்மெஜோ பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த வீடு 
பொலிஸாரால் க
அந்தப் பெண்ணை மார் டெல் பிளாடாவில் இருக்கும் அவரது குடும்பத்தினருடன் இணைக்க முடிந்ததாக ஆர்ஜன்டீன பொலிஸார் கடந்த செவ்வாக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.இம்மாத ஆரம்பித்திலேயே அந்த பெண் மற்றும் அவரது மகன்
 விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும்,32 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தகடத்தலுடன் தொடர்புபட்டவர்கள் விபரம் பொலிஸ் அறிவிப்பில் 
கூறப்படவில்லை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 23 டிசம்பர், 2018

உளவுத்துறையினர் எச்சரிக்கை ஜேர்மன் விமான நிலையங்களுக்கு

ஜேர்மனியின் பெரிய விமான நிலையங்கள் சிலவற்றுக்கு அந்த நாட்டு உளவுத்துறையினரால் அபாய எச்சரிக்கை
 விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டட்காட் விமான நிலையத்தில் நான்கு சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகளின் பிரசன்னத்தை அடுத்து இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மேலும் இரண்டு பேர் விமான நிலையத்தின் முனையம் மற்றும் தரைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் புகைப்படம் எடுத்ததை அடுத்து அவர்களை தேடும் நடவடிக்கை 
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் மொரோக்கோ புலனாய்வு சேவையிடமிருந்து ​ஜேர்மன் பொலிஸாருக்கு 
வழங்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் எல்லையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெற்று ஒருவார காலத்தின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திடீர் சுனாமி! இந்தோனேஷியாவில் 168 பேர் பலி- 745 பேர் படுகாயம்

இந்தோனேஷியாவில் Sunda Strait கடல் பகுதியில் நேற்று இரவு தாக்கிய சுனாமி காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தம் காரணமாக 165 பேர் காயமடைந்ததுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த பகுதியில் முதலில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்ட நிலையில் சுனாமி தாக்கியதாக அந்நாட்டு அனர்த்த முகாத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு நிலஅதிர்வு காரணமல்ல என கூறிப்பிடப்படுகின்றது. இதற்கு Anak Krakatoa எரிமலை நடவடிக்கைகளின் விளைவாக இருக்கலாம் என 
சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த சுனாமி தாக்கத்தின் போது கடல் பகுதியில் நின்ற ஒருவர் அதனை காணொளியாக பதிவிட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதன் போது கடல் அலை வேகமாக வருவதனை அவதானிக்க
 முடிந்துள்ளது.
இந்த காணொளி சுனாமி தாக்கத்தை நன்கு வெளிப்படுத்துவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமான முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலை அனுமதிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று இரவு 9.30 மணியளவில் சுனாமி தாக்கியுள்ளதாகவும், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டது. இந்த அனர்த்தம் காரணமாக பெருமளவு மக்கள் காணாமல் போயுள்ளதாக
 குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை வட மாகாணத்தில் நேற்று பெய்த அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள குளங்கள் உடைப்பு எடுத்துள்ளன.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை காரணமாக தாயக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக
 தெரிய வருகிறது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட இந்தோனேஷியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.


கடல் பகுதியில் இந்தோனேஷியாவை தாக்கிய சுனாமியால் இலங்கைக்கும்ஆபத்தா

இந்தோனேஷியாவில் Sunda Strait கடல் பகுதியில்.22.12.2018.  இரவு தாக்கிய சுனாமி காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அனர்த்தம் 
காரணமாக 165 பேர் காயமடைந்ததுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த பகுதியில் முதலில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்ட நிலையில் சுனாமி தாக்கியதாக அந்நாட்டு அனர்த்த முகாத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.இந்தோனேஷியாவின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு நிலஅதிர்வு காரணமல்ல என 
கூறிப்பிடப்படுகின்றது. இதற்கு Anak Krakatoa எரிமலை நடவடிக்கைகளின் விளைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.குறித்த சுனாமி தாக்கத்தின் போது கடல் பகுதியில் நின்ற ஒருவர் அதனை காணொளியாக பதிவிட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதன் போது கடல் அலை வேகமாக வருவதனை அவதானிக்க முடிந்துள்ளது.
இந்த காணொளி சுனாமி தாக்கத்தை நன்கு வெளிப்படுத்துவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமான முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலை அனுமதிக்கும் செயற்பாடுகளும் 
முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.நேற்று இரவு 9.30 மணியளவில் சுனாமி தாக்கியுள்ளதாகவும், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டது. இந்த அனர்த்தம் காரணமாக பெருமளவு மக்கள் காணாமல் போயுள்ளதாக 
குறிப்பிடப்படுகின்றது
.இதேவேளை வட மாகாணத்தில் நேற்று பெய்த அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள குளங்கள் உடைப்பு எடுத்துள்ளன.இந்நிலையில்
 இந்தோனேஷியாவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை காரணமாக தாயக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட இந்தோனேஷியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.இலங்கையில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 20 டிசம்பர், 2018

துருக்கி நீதிமன்றம்2000 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது

துருக்கியில் 2016ஆம் ஆண்டு இராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டு திடீர் இராணுவ புரட்சி ஏற்பட்டது. 
பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன்
 முறியடித்தார்.
இச் சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது
 செய்யப்பட்டனர். 
தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 
அதில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 1934 பேர் தங்கள் ஆயுள் முழுவதும் சிறையில் 
தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 938 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது 
குறிப்பிடத்தக்கது. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 28 நவம்பர், 2018

நாபொலி நகரில் அடித்துக் கொல்லப்பட்ட இலங்கையர்

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
 இத்தாலி, நாபொலி நகரில் வாழும் இலங்கை வர்த்தகர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அந்நாட்டவருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறிய நிலையில், இலங்கையர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொடூர தாக்குதலில் காயமடைந்த இலங்கையர் 
கோமா நிலைக்கு சென்றுள்ளார்
அதன் பின்னர் 3 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
 உயிரிழந்தவர், வென்னப்புவ, பொரலெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த அஷோக பெர்ணான்டோ எனப்படும் 2 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 கடந்த வெள்ளிக்கிழமை காயமடைந்த இலங்கையினரினால் நடத்தி செல்லும் வர்த்தக இடம் மற்றும் கட்டடத்தின் உரிமையாளரான இத்தாலி நாட்டவர் மற்றும் அவரது சகோதரர் குறித்த இடம்தொடர்பான வாடகை பணத்திற்கு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
 இலங்கையருடன் ஆரம்பத்தில் வாய்த்தகராறில் ஈடுபட்டவர்கள் பின்னர் அந்த சம்பவத்தை மோதலாக மாற்றியுள்ளனர்.
 மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கையர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
 எனினும் அவர் அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தது.
மேலும், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் 
தெரிவிக்கின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 26 நவம்பர், 2018

மாப்பிள்ளை அடிக்கும் கூத்து மணமேடையில் வேறொரு பெண்ணுடன்

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாகும். திருமணத்தின் போது மணமக்கள் மகிழ்ச்சியுடனே இருப்பார்கள்.அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்பு இருவரும் தனக்கு வந்த சொந்தத்தினை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதையும் அவதானித்திருப்போம்.
ஆனால் இங்கு மணப்பெண்ணின் பரிதாபநிலையினை நீங்களே பாருங்க… மணமேடையில் மணமகளை அருகில் வைத்துக்கொண்டு மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். இதனை அவதானித்த மணப்பெண்ணும் எதுவும் பேசாமல்
 பார்த்துக் கொண்டிருக்கிறார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஆங்கிலேயர் தமிழ்ப் பெண்ணை மணந்து தமிழ்நாட்டிலேயே விவசாயத்தில்

நாம் நம் பாரம்பரியத்தை மறந்து பீட்சா, பர்கர் என பன்னாட்டு உணவுகளை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் பிரித்தானியாவை பிறப்பிடமாகக் கொண்ட கிருஷ்ணா, தமிழ் கலாச்சாரத்தின் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் கொண்டு தமிழ் பெண்ணை திருமணம் செய்து தமிழ்நாட்டின் மருமகன் ஆனார். தற்போது புதுச்சேரி அடுத்த
 ஆரோவி பகுதியில் 6 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் மீதும், உணவின் மீதும் தீரா காதல் என்றே கூறலாம்.அந்த காதலால் தன்னுடைய நிலத்தில் விளையும் காய், பழங்களை கொண்டு இயற்கை உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது இயற்கை உணவை விரும்பி சாப்பிடும் வெளிநாட்டவர்கள் ஏராளம்.
இந்த மண்ணை இவர் தெய்வமாக
 பார்க்கிறார்.
தமிழ்நாட்டு மண்ணின் பெருமை குறித்து அவர் கூறுகையில், சென்னையில் தண்ணீர் குடிப்பதற்கு லாரி வருகிறது. இப்படி எத்தனை வருடம் இருக்கமுடியும்.
தண்ணீர் தான் மிகவும் முக்கியம். அதுமட்டுமா எந்த காய்களில் பார்த்தாலும் மருந்து இருக்கிறது. இப்படி இருக்கும் காய்களை சாப்பிடும் போது புற்றுநோய், டையாபடிஸ், உயர் இரத்த அழுத்தம் வரும்.நாம்முடைய இயற்கை வழி பின்னோக்கி சென்றுவிட்டது.
இயற்கை காய்களை சாப்பிடுங்க, தமிழ் கலாச்சாரத்தில் இருக்கும் வாழை பூ, வாழை தண்டு, சுண்டைக்காய் போன்றவை மிகவும் உடலுக்கு நல்லது, அது எல்லாம் சாப்பிடுங்க, நம்முடைய மண் தான் தெய்வம், அதை பார்த்து கொள்ள வேண்டும்.இப்போது நான் என்னுடைய தோட்டத்தில் கிடைக்கும் காய்களை சமைத்து தரும் போது அவ்வளவு ருசி இருக்கும், ஆனால் 
கடைகளில் அது இருக்காது.
மேலும், தற்போது இருப்பவர் நாம் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அது எல்லாம் ஒரு மாயை அவ்வளவு தான் வரும் போகும்.
பிரித்தானியாவில் சாப்பட்டு டேபிளில் பீர் தான் கலாச்சாரம், நான் ஒரு வெள்ளைக்காரம் எனக்கு என்ன தெரியும் என்னை விட தமிழ் நாட்டு மக்களுக்கு நிறைய தெரியும், என்னுடைய மாமனார் விவசாயி, அதை நான் மீட்டு கொண்டு வர முயற்சிக்கிறேன் 
என்று கூறியுள்ளார்.
இவர் மனைவி தற்போது என்ன செய்கிறார், அவர் பெயர் என்ன என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 22 நவம்பர், 2018

நாட்டில் இணையத்தின் மூலம் ஆவணங்களை உடன் பெறலாம்

இலங்கையில் முதன் முறையாக இணையத்தின் மூலம் முக்கிய ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருந்து மக்கள் தங்களின் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை இணையத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்
 தெரிவித்துள்ளார்.
 பொது மக்கள் இதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வதற்கான கட்டணத்தினை செலுத்தி உடனடியாக பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 கால விரயத்தினையும் பண விரயத்தினையும் தவிர்க்கும் முகமாக அரசாங்கம் இவ்வாறான செயற்திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையக் கணினி வசதியின் ஊடாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த வசதிகளை பொது மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளார்.
 1960 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான பதிவுகளை எதிர்வரும் 29ம் திகதி முதல் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் பெற்றுக்
 கொள்ள முடியும்.
 தற்போது அந்த அந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை மாத்திரமே பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி நடைமுறையில் உள்ளமை 
குறிப்பிடத்தக்கது. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு கனடாவில் அதிகரிப்பு

கனடாவில் தேசிய படுகொலை விகிதம் கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத வகையில் கடந்த ஆண்டு கடுமையான அதிகரிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை கும்பல்கள் மற்றும் துப்பாக்கிச்சூடுகளின் அதிகரிப்பே இப்படுகொலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது


அமீரகத்தில் காதலனை வெட்டி பிரியாணி சமைத்து சாப்பிட்ட காதலி

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் ஒருவர் தனது காதலனை வெட்டி பிரியாணியாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோவை சேர்ந்த பெண் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் வேலை பார்த்து வந்த மொராக்கோ நாட்டை சேர்ந்த வாலிபருடன்
 காதல் ஏற்பட்டது.
இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அந்த வாலிபர் தனது காதலியிடம் வேறு ஒரு பெண்ணை திருமணம்
 செய்யவிரு ப்பதாக கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண், காதலனை வெட்டிக் கொன்று அதில் பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் காதலனின் மற்ற உடல் பாகங்களை நாய்க்கு போட்டுள்ளார்.
இதனையறிந்த போலீஸார் அந்த சைக்கோ பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 20 நவம்பர், 2018

சமூக வலைத்தளங்கள் உலகம் முழுதும் முடங்கியது

உலக புகழ் பெற்ற பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் வலைத்தளங்களே இவ்வாறு முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான காரணம் என்ன என இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.
எனினும் பேஸ்புக் நிறுவனம் இது தொடர்பில் இதுவரையில் அறிக்கை ஒன்றையும் வெளியிடவில்லை.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளில் இந்த வலைத்தளங்கள் முடங்கியுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.


வியாழன், 8 நவம்பர், 2018

கண்ணீரில் மூழ்கடித்த இந்தோனேஷிய விமான விபத்து திட்டமிட்ட சதியா

உலக மக்களை கண்ணீரில் மூழ்கடித்த இந்தோனேசிய விமான விபத்தானது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற தகவல் கசியத்துவங்கியுள்ளன.189 பேரை பலிவாங்கிய போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் தொடர்பில் அதிகாரிகள் தரப்பில் ஏற்பட்ட கடும்
 அக்கறையின்மையே
 முக்கிய காரணம் எனவும் தெரியவந்துள்ளது.குறித்த விமானத்தின் Flight Data Recorder-ல் பதிவான தகவல்களின் அடிப்படையிலேயே விமான விபத்து தொடர்பான காரணிகள் அம்பலமாகியுள்ளன.
மட்டுமின்றி விபத்தில் மர்மம் இருப்பதாக 
பயணிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.இத்தனை பிரச்னைகள் இருந்து குறித்த விமானத்தை ஏன் பயணத்திற்கு அனுமதித்தீர்கள் என்ற கேள்வியும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் வேகத்தை காட்டும் கருவியானது தொடர்புடைய விமானத்தின் கடந்த 4 பயணங்களிலும் கோளாறாக இருந்தது என தெரியவந்துள்ளது.மேலும், விபத்துக்குள்ளான 
விமானத்தின் CVR எனப்படும் Cockpit Voice Re
corder இதுவரை நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.விமானம் புறப்பட்டு வெறும் 13 நிமிடங்களிலையே 
விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது.இச்சமயம் விமானிகள் பேசிக்கொண்ட உரையாடல்கள் பதிவான கருவி கிடைக்கும் எனில் விபத்துக்கான முக்கிய ஆதாரம் சிக்கும் 
என கூறப்படுகிறது.
இதனிடையே 737 போயிங் விமானத்தின் வேகத்தை காட்டும் கருவியில் கோளாறு இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு போயிங் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.
சர்வதேச அளவில் இதுவரை போயிங் நிறுவனம் 219 விமானங்களை கைமாறியுள்ளனர். மேலும் அடுத்த சில ஆண்டுகளில் மொத்தம் 4,564 விமான கட்டுமானங்களுக்கான ஒப்புதலையும் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும்
 பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு முதல் சேவையை துவங்கிய போயிங் 737 மாக்ஸ் ரக விமானம் விபத்தில் சிக்குவது இது முதல் 
முறையாகும்.



வியாழன், 25 அக்டோபர், 2018

இலங்கைப் பெண்ணுக்கு டுபாய் நாட்டில் அடித்த அதிஷ்டம

டுபாய் நாட்டில் Duty free அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மாபெரும் பரிசு கிடைத்துள்ளது.குறித்த அதிஷ்டலாபச் சீட்டு குலுக்கல் டுபாயில் நேற்று நடந்தது.
இதில் இலங்கையைச் சேர்ந்த சஜீவா நிரஞ்சனா என்ற பெண்ணுக்கு 3ஆவது பரிசு கிடைத்துள்ளது.இதில் அவருக்கு ரேஞ்ச் ரோவர் அதி சொகுசு கார் பரிசாக கிடைத்துள்ளது.2018 ஆம் ஆண்டின் புதிய வெளியீடுகளில் ஒன்றாக ரேஞ்ச் ரோவர் கார் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கார் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளமை பெரிதும்
 பேசப்படுகின்றது.
இதேவேளை, இந்த அதிஷ்டலாபச் சீட்டு குலுக்கலில் இந்தியரான சவுரவ் தேவ் என்பவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதுடன், இவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 7.34 கோடி ரூபாய் பரிசாக
 கிடைத்துள்ளது.
இரண்டாவது பரிசாக பி.எம்.டிபிள்யு சொகுசு கார் இந்தியரான அஜித் பாபு என்பவருக்கு கிடைத்துள்ளது. Duty free lottery டிக்கெட் ஒன்றின் விலை 28 அமெரிக்க டொலராகும். எனவே இதை பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து மக்கள் ஆர்வத்தோடு வாங்குகிறார்கள்.
இது தொடர்பில் முதல் பரிசு வென்ற இந்தியரான சவுரவ் தேவ் கருத்து தெரிவிக்கையில், "எனக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதை இப்போதுவரை என்னால் நம்ப முடியவில்லை. இந்தப் பரிசு எனக்கு புதிய வருங்காலத்தையும், என் குடும்பத்துக்கு மிகப்பெரிய வாழ்வையும் மிக நீண்டகாலத்துக்கு அளிக்கும்"
என்று கூறியுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 23 அக்டோபர், 2018

நாடு கடத்தப்படவிருந்த இலங்கைக் குடும்பத்திற்கு அடித்த பேரதிஷ்டம்

நியூசிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தவிருந்த குடும்பம் ஒன்றுக்கு அந்நாட்டில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.8 வருட போராட்டத்தின் பின்னர் புகலிடக் கோரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.குறித்த குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக போராடி நியூசிலாந்தில் தொடர்ந்து தங்குவதற்கு சந்தர்ப்பம் பெற்றுள்ளது.2010ஆம் ஆண்டு குறித்த குடும்பம் நியூசிலாந்தின் Queenstown பகுதியில் 
குடியேறியுள்ளது.
குடும்பத்தின் தலைவியான தாயார் தினேஷா அமரசிங்க நியூசிலாந்தில் மருத்துவ மாணவியாக பதிவு செய்துள்ளார்.அவருக்கு 10 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளதோடு, நியூசிலாந்தின் திறமையான புலம்பெயர்ந்தோர் பிரிவின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் ஆக்லாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார்.
2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த குடும்பம் குயின்ஸ் டவுனுக்கு மாற்றப்பட்டது, அங்கு பிரபலமான Lone Star உணவகத்தில் தினேஷா சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.அவரது விசாவில் கணவருக்கு திறந்த பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய அவர் New World சுப்பர் மார்க்கெட்டில் பணி புரிந்ததோடு, டெக்ஸி சாரதியாகவும்
 செயற்பட்டு வந்துள்ளார்.
2014ஆம் ஆண்டு தினேஷா தவறி விழுந்தமையினால் அவரது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது காலில் வலி இருந்த போதிலும், சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தமையினால் அவர் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார். எனினும் 2015 ஆம் ஆண்டு ACC என வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது
2015ஆம் ஆண்டு மே மாதம் அவரது தனது மூளையை பரிசோதித்து பார்த்த போது அவர் ஸ்களீரோசிஸ் (sclerosis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் தினேஷாவினால் பணி புரிய முடியவில்லை என்பதால், அவரது திறமையான தொழிலாளிக்கான தற்காலிக விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் அவரது கணவரால் வேலை செய்ய முடியாது என கூறப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் கடந்த வருடம் நவம்பர் மாதம் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என
 அறிவிக்கப்பட்டது.
பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிரந்தர விசா தாமதமாகியதாக கூறப்படுகின்றது. எனினும் அவர்களை தொடர்ந்து நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அவரது வழக்கறிஞர் மேற்கொண்டு வந்தார்.இந்த நிலையில், இந்த குடும்பத்தை நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கு அந்த நாட்டு மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை 
மேற்கொண்டு வந்தனர்.
அதற்கமைய அவர்களது முறையீடு வெற்றி பெற்றுள்ளதுடன், Let’s Eat என திட்டத்தில் தினேஷாவுக்கு வேலை
 கிடைத்துள்ளது.
“தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. நியூசிலாந்தில் 450 பேர் தங்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 8 மாதங்கள் எங்கள் குடும்பம் குறித்து அக்கறை செலுத்தினார்கள். இந்தக் காலப்பகுதியில் நாட்டு மக்களே தமக்கு உணவளித்தனர்.என்னால் இவற்றினை மறந்து விட முடியாது. ஒரு வருட போராட்டத்தின் பின்னர் இறுதியாக குடிவரவு அமைச்சர் நியூசிலாந்தில் தங்குவதற்கு அனுமதி
 வழங்கிவிட்டார்.
மக்கள் மற்றும் சட்டத்தரணி என அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி. மீண்டும் எனது இரண்டு பிள்ளைகளுக்கும் வாழ்க்கை கிடைத்துவிட்டது. எனது கணவருக்கு சாரதி வேலை மீண்டும் கிடைத்து விட்டது” என தினேஷா உணர்ச்சிவசத்துடன் தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஆலங்கட்டி மழையால் இத்தாலியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது

இத்தாலியில் ஆலங்கட்டி மழை பெய்த காரணமாக சாலைகள்  முழுதும் பனி மூடிக் காணப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தலைநகர் ரோம், பிசா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை புயலோடு மழையும் தாக்கியது. சாலைகளில் ஆலங்கட்டி மழைப் பொழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பனிக்கட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இறுக்கமாகி பாறை 
போல் மாறியது.
 இதனால் சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களை இயக்க முடியாமல் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இத்தாலிய தலைநகரின் கிழக்குப் பகுதியில் ஆலங்கட்டி மழை அதிகமாக பொழிந்தது. அங்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலைகள் முழுவதும்
 மூடி மறைந்தது.
மேலும் நகரத்தில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டின் மீது பனிக்கட்டி நீர் ஆறு போல ஓடியது. நகரில் பல்வேறு இடங்களில், பேருந்துகள் மற்றும் கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சில சாலைகளில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 
போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. புளோரன்ஸ், பிசா, மிலன் மற்றும் வடக்கு இத்தாலியின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனை சீரமைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக 
ஈடுபட்டு வருகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிரான்ஸ் தீவில் குடியேறும் தமிழர்கள் 40 பேர் சென்ற கப்பல் சிக்கியது

பிரதான செய்திகள்:இலங்கையை சேர்ந்த பலர் பிரான்ஸை அண்மித்த தீவில் குடியேறி வருவதாக வெளிவிவகார அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு படகு மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான Réunion தீவில் குடியேற்றி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கைக்குள் வசிக்கும் சில குழுக்கள், இவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கடல் வழியாக அழைத்துச் செல்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் குடியேற விரும்பும் வடக்கு, கிழக்கு பகுதியை சேர்ந்த இளைஞர், யுவதிகளை அழைத்து வந்து சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களுக்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
 வெளியாகி உள்ளது.
தவிர பிரான்ஸ் நோக்கி சென்ற 40 பேர் கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, சிலாபம், மன்னார், திருகோணமலை உட்பட பல பிரதேசங்களை சேர்ந்த 21 சிங்களவர்களும் 67 தமிழர்களும் 2 முஸ்லிம்களும் அடங்கும். இவர்களில் பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படகு மூலம் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் நபர்கள் உரிய விலாசம் அற்ற நபர்களுக்கு பணம் வழங்கியுள்ளதாகவும்
 தெரியவந்துள்ளது.
இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை இதேபோன்று இலங்கையில் இருந்த சட்டவிரோதமாக நடுகடலில் மாயமாகி Réunion தீவில் குடியேறிய நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 17 அக்டோபர், 2018

தமிழ் பெண்ணைகனடாவில் காணவில்லை பொலிசார் விசாரணை

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்க்கம் பகுதியில் வசிக்கும் 46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Brimley Road, Highglen Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதியாக அவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன பெண் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், 140 பவுண்ட் நிறையுடைவர் மற்றும் கறுப்பு நிற தலை முடியை கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் காணாமல் போயுள்ள குறித்த பெண் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 16 அக்டோபர், 2018

இலங்கைத் தமிழ் குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தlல்

பிரித்தானியாவிலுள்ள இலங்கத் தமிழ் குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு 
கடத்தப்படவுள்ளனர்.
எனினும் அவருக்கு விமானத்தில் ஆபத்து உள்ளதாக கூறி குடும்பத்தினர் 4 வைத்தியர்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சங்கரப்பிள்ளை பாலசந்திரன் கடந்த 6 வருடங்களில் பக்க வாத நோயினால் 
பாதிக்கப்பட்டுள்ளார்.
60 வயதான அவர், கடந்த 2007ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது தொழில் விசா நிறைவடைந்த காரணத்தினால் அவர் தனது குடும்பத்தினரான மனைவி, மகன் மற்றும் இரண்டு மகளுடன் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்.
27 மணி நேர விமான பயணத்தில் அவரை கண்கானிக்க 4 வைத்தியர்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும் என பாலச்சந்திரனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Heathrow விமான நிலையத்திற்கு அருகில் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த குடும்பத்தினர் திருப்பி அனுப்புவதற்காக தங்க 
வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் பாலசந்திரன் மற்றும் குடும்பத்தினர் தன்னார்வமாக பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்காக விமானத்தில் ஏறிய போதிலும், பாலசந்திரன் நோய்வாய்ப்பட்டமையினால் விமானத்தில் இருந்து இறங்க நேரிட்டுள்ளது.
தாம் பிரித்தானியாவை விட்டு செல்ல தயார், எனினும் மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம் என்பதனால் தங்களுக்கு 4 வைத்தியர்கள் வேண்டும் என பாலசந்திரனினின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் பிரித்தானிய அதிகாரிகள் என்ன தீர்மானம் எடுப்பார்கள் என தெரியவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 13 அக்டோபர், 2018

உலகத்தை நெருங்கும் பேரழிவு ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை.

உலகம் 2030ஆம் ஆண்டு மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் "இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)" அமைப்பு 400 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மனித குலத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது என கூறப்படுகின்றது.
மனிதர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் இந்த வாகனங்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட இரு மடங்கு அதிகரித்து விடும். இதன் காரணமாக புகையின் அளவும் அதிகமாகும். அதேபோல் தொழிற்சாலை புகை மூன்று மடங்காக உயரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறு சென்றால் பூமியின் வெப்பநிலை வெகு வேகமாக உயர்வடைந்து 2030இல் உலகம் நீரில் மூழ்கிவிடும் என்று ஐ.நாவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களில் பூமியின் வெப்பநிலை 1 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்துள்ளது. இது இப்போதே உலகில் பல பனிப்பாறைகளை கரைத்துவிட்டது.
இந்த நிலையில் இந்த வெப்பநிலை உயரும் வேகம் இன்னும் அதிகம் ஆகும். இது பெரிய பேரழிவிற்கு கொண்டு செல்லும் என்று அந்த 
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி 2030ல் பூமியின் வெப்பநிலை 3.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும். 3.5 செல்ஸியஸ் என்பது உலகையே அழிக்கக் கூடிய அளவு வெப்பநிலை ஆகும்.
இதே வேகத்தில் வெப்பநிலை உயர்ந்தால், உலகில் உள்ள முக்கிய பனிப்பாறைகள் எல்லாம் அப்படியே மொத்தமாக உருகிவிடும்.
இதனால் உலகில் 8 - 10 சதவிகிதம் மட்டுமே நிலம் இருக்கும். மற்ற பகுதிகள் அனைத்தும் கடலுக்குள் சென்றுவிடும்.
இது கண்டிப்பாக 2030க்குள் நடந்துவிடும். அதை தாண்டி போகாது அதற்குள், இந்த மோசமான அசம்பாவிதம் நடக்கும் என்று ஐ.நா எச்சரிக்கை
 விடுத்து இருக்கிறது.

அதிகம் தமிழர்கள்,வாழும் நாடொன்றை தாக்கவுள்ள சுனாமி

அவுஸ்திரேலியாவை சுற்றி பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சமகாலங்களில் எந்தவித அழிவுகளும் ஏற்படாமல் தப்பித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் கடலோர நகரங்களில் விண்கல் தாக்கங்கள் அல்லது நில அதிர்வு நடவடிக்கைகளால் அழிவுகரமான பேரலைகளால் தாக்கப்படாமல் இருப்பது பெரும் அதிர்ஷ்டம் தான் என நிபுணர்கள் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அவுஸ்திரேலியாவை எந்த நேரத்தில் சுனாமி பேரலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
1149ஆண்டு அவுஸ்திரேலியாவை சுனாமி பேரலைகள் தாக்கி பேரழிவை ஏற்படுத்தின. 60 மீற்றர் உயரத்திற்கு அலைகள் மேலெழுந்த நிலையில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தியதாக 
குறிப்பிடப்படுகின்றது.
அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதற்கமைய 4000 - 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறான பாரிய ஆபத்துக்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளதற்கான சான்றுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதற்கமைய மீண்டும் அவ்வாறான தாக்குதல் ஒன்று எந்த நேரத்திலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இதன்மூலம் உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு ஆபத்தான சுனாமி ஒன்று ஏற்படாமல் இருப்பது மிகவும் அதிஷ்டம் என்றே கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி சிட்னி நகரில்
 ஆபத்துக்கள் 
ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அதனை தடுக்க முன்னாயத்தங்களை செய்யப்பட வேண்டும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


எந்நேரமும் முடங்கலாம் இணையதளம் குறித்து அவசர அறிவித்தல்; ?

உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. "த இண்டர்நெட் கார்பரேஷன் ஒப் நேம்ஸ் அண்ட் நம்பர்" என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையதள சேவைகள் தொடர்பு இழக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. மேலும் இணைப்புக்கள் கிடைக்காமல் தவிக்கும் சூழல் ஏற்படும். சமீபகாலமாக 
இணையதளங்களில் புகுந்து மர்ப நபர்கள் முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து 'சைபர் அட்டாக்' இணையதள முடக்கம் செய்ய முடியாமல் தடுக்க டிஎன்எஸ் எனப்படும் 'டொமைன் நேம் சிஸ்டம்' நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான விரிவான பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதால் இவை முழுமையாக முடிவடைய 48 மணிநேரங்கள் வரை 
ஆகலாம் என தெரிகிறது.
இந்த சமயத்தில் இணையதள சேவை முடங்குவதுடன், குறிப்பிட்ட இணையதள பக்கங்களை பார்க்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக்
 கொண்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 29 ஆகஸ்ட், 2018

சீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி உருவாக்கியுள்ளார்

சீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில், 55 வயதான கன்சு ப்வின்விங் என்பவர் மர மிதிவண்டியினை தயாரித்துள்ளார். இதனை உருவாக்குவதற்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் இருக்கை மற்றும் கைபிடி சக்கரங்கள் என அனைத்துமே மரத்தினால் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மர சைக்கிளை 30, 000 தருவதாக கூறி, வியாபாரிகள் முன்வந்து கேட்டும் தான் விற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கு காரணம் தனது கலைப்படைப்பை விற்க விரும்பவில்லை என, கன்சு ப்வின்விங் மறுத்துவிட்டார்.
கன்சு ப்வின்விங் தனது சிறுவயது முதலே தச்சு தொழில் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>