நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 29 ஆகஸ்ட், 2018

சீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி உருவாக்கியுள்ளார்

சீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில், 55 வயதான கன்சு ப்வின்விங் என்பவர் மர மிதிவண்டியினை தயாரித்துள்ளார். இதனை உருவாக்குவதற்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் இருக்கை மற்றும் கைபிடி சக்கரங்கள் என அனைத்துமே மரத்தினால் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மர சைக்கிளை 30, 000 தருவதாக கூறி, வியாபாரிகள் முன்வந்து கேட்டும் தான் விற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கு காரணம் தனது கலைப்படைப்பை விற்க விரும்பவில்லை என, கன்சு ப்வின்விங் மறுத்துவிட்டார்.
கன்சு ப்வின்விங் தனது சிறுவயது முதலே தச்சு தொழில் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக